Sunday, January 6, 2013

இளையராஜா பார்ப்பனியத்தை பின்பற்றுகிறாராம். ஆமாம் பார்பனியாம்னா என்ன? இவுங்க சொல்லிட்டு திரியற மாதிரி "தமிழர் என்று ஒரு இனம் உண்டு அதற்கு ஒரு குணம் உண்டுன்னு" சொல்லிட்டு இருக்காறா? தலைல பிறந்தவன் பார்ப்பான் அவனுக்கு ஒரு குணம் காலில் பிறந்தவன் சூத்திரன் அவனுக்கு ஒரு குணம் என்பது பார்பனியம் எனில் நீங்க சொல்லும் தமிழரின் தனிக்குணம் பார்பனியம் இல்லையா? நான் திராவிடன் தமிழன்னு சொல்லிட்டு சூத்திரர் காலில் விழுந்து கிடக்காமல். நெஞ்சை நிமித்திக்கொண்டு போவது உங்கள் சூத்திர கண்களுக்கு பொறுக்க முடியவில்லையா? பார்பனியம் என்றால் ஜாதி பார்ப்பது அடுத்தவர்களை பேதம் பார்ப்பது ஒதுக்கி வைப்பது வன்கொடுமை செய்வது துன்புறுத்துவது. அப்படி எதையாவது ராஜா செய்கிறாரா? கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, பாலியல் வன்கொடுமை செய்வது இப்படி எதையாவது செய்கிறாரா? அப்புறம் என்ன டாஷுக்கு அவர் பார்ப்பனியத்தை பின் பற்றுகிறார் பார்ப்பனியத்தை பின் பற்றுகிறார் என்று பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அவர் மீது நீங்கள் காட்டும் அளவுக்கு வன்மத்தை "நித்தியா" சாமிகள் மீது கூட நீங்கள் காட்டவில்லையே.   ஓ  நித்தியா "தமிழரா"

No comments:

Post a Comment