Saturday, January 12, 2013

ஆங்கு, அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம் 
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி: 
திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய்புலம்பவும், 
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும், 
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும், 
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்; 
பாடகம் பதையாது, சூடகம் துளங்காது,
மேகலை ஒலியாது, மென் முலை அசையாது,
வார் குழை ஆடாது, மணிக்குழல் அவிழாது,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்
பாத்து-அரு நால் வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து; அவன்
ஏத்தி நீங்க- இரு நிலம் ஆள்வோன் (சிலப்பதிகாரம்)

No comments:

Post a Comment