தமிழ் நாட்டில் 2000 ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான் கல்வெட்டுக்கள் பாலி மொழியில் உள்ளன. சம காலத்தில் எழுதப்பட்ட 25 வார்த்தைகள் கொண்ட ஒரே ஒரு கல்வெட்டு சான்று தர முடியுமா? தமிழ் சம காலத்தில் இருந்தது என்பதற்கு.
நாங்க மனுசங்களா தான் இருக்கோம். உங்களை மனுசங்களா மாற சொல்றோம்.
இப்படியெல்லாம் நாம் சிறுக சிறுக கட்டி காப்பாத்தி இயக்கம் கட்டி முன்னேறினா. சில திராவிட கபோதிகள் சொல்லுதுங்க அவுங்கதான் நமக்கு கோமணம் கட்ட சொல்லி கொடுத்தாங்கலாம்.
சாக்கியன் என்பது மானுடம் பழைய தமிழ் திவாகரம் இருந்தால் அதில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
வள்ளுவம் என்பது சாக்கியம் என்பதும் ஒரே அர்த்தம் உடைய இரு சொற்கள் என்கிறது திவாகரம்
சாக்கியம் என்பது பிறப்பால் ஆன இன பெயர் அல்ல அது பண்பு பெயர். (தமிழ் இலக்கணம் சொல்லுது)
தெலுங்கன் தமிழன் சிங்களவன் பார்பனன் வன்னியன் யார் வேண்டும் என்றாலும் சாக்கியன் ஆகலாம்.
தமிழ் என்பது தமிழன் என்பவனின் வாழ்வியல். சாக்கியம் என்பது மானுடத்தின் வாழ்வியல்.
சான்றுகள் காலாவதியாகி இருந்தாலும் இது என் சொத்து என்றால் எந்த கோர்ட்டும் ஒத்துக்காது. நாங்கள் சான்றுகளோடு சொல்கிறோம். இந்த மண்ணின் பூர்வீக குடிகள் பேசியது சாக்கியம் (பாலி). அழிந்து போன லெமுரியா கண்டதில் இருந்து வந்து குடியேறிய வந்தேறிகளே தமிழர்கள்.
"தமிழ்" நாட்டில் பத்தாயிரம் ஆண்டுக்கு முன்னர் கூட மக்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மைதான். அவர்கள் "தமிழர்"களா?
தமிழ் என்பது ஒட்டு மொத்த மனித குலத்தின் நெறி எனில் எதுக்கு அவர் தமிழர் இல்லை இவர் தமிழர் இல்லைன்னு சொல்லிட்டு மக்களை கன்னடர் தெலுங்கர் என்று பிரித்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஆரியன் கூட இது போல நிறைய எழுதி வச்சுட்டு புத்தர் பிறக்கும் முன்னர் சமஸ்கிருதம் இருந்தது என்று உலகம் முழக்க தம்பட்டம் அடிக்கிறான். பண்டிதர் சொல்கிரார. யுவான் போன்ற சீன பயணிகள் இந்தியா வந்த போது பாலி மொழியை தவிர வேறு மொழி இல்லை என்கிறார்.
பாலி மொழி இலக்கியங்களும் சாக்கிய வரலாற்று நூல்களும் கிடைக்கும் முன்னர் புராணங்களையும் கப்பியங்களையும் மட்டுமே வரலாறு என்று நம்பி கொண்டு இருந்தனர் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். அது போலத்தான் உங்கள் தமிழ் புராணங்களும்.
சொன்னவன் மனிதன். அவன் எழுதியது தமிழில்.
நீங்கள் சொல்லும் தீப வம்சம் மகா வம்சம் ஐம்பெரும் காப்பியங்கள் அணைத்தும் களப்பரையர் காலத்துக்கு கி பி ஐந்தாம் நூற்றாண்டுக்கு பின்னர் எழுதப்பட்டது. தமிழர் வரலாறு என்பது களப்பரையர் காலத்துக்கு பின்னரே "தமிழ்" நாட்டில் தொடங்குகிறது.
No comments:
Post a Comment