Saturday, January 5, 2013

திருமா எனும் நந்தியை நகர்த்தாமல் திராவிட தமிழ் தேசியம் எனும் தலித் விரோத சக்திகளை வீழ்த்த முடியாது. 

இந்துமதவாதம் திராவிட இனவாதம் தமிழ் மொழி வாத சாக்கடைகளை கடக்காமல் ஜாதி சாக்கடையை ஒழித்து சாக்கிய (தலித்திய) மனிதத்துவத்தை நிலை நிறுத்த முடியாது. 


அண்ணல் அம்பேத்கரை பற்றி சூத்திர ராமசாமியின் உளறல்கள். : ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ அந்த ஆரியத்தின் ஸ்தாபனமாகிய, இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூற வேண்டுமானால் இந்தியநாடு பிரிக்கப்படக்கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன். (ராமசாமி, குடியரசு 08-07-1947) 

No comments:

Post a Comment