Friday, May 31, 2013

கலாச்சரம் என்பது ரொம்ப சாதாரன விஷயம் இல்லை. மக்களின் சிந்தனை அறிவு அணைத்தும் அவர்கள் வாழும் கலாச்சாரத்தோடு தொடர்பு உடையது. சும்மா விரக்தியா பேசிட்டு இருப்பது அறிவு இல்லை. வாழும்  முறையை வரையறை செய்வது  மனிதனை மனிதன் தொடர்பு படுத்துவது கலாச்சாரத்தின் ஊடாக. 

நாத்தீகம் பகுத்தறிவு கடவுள் மறுப்பு பகுத்தறிவு என்று சொல்லும்போதே தெரிகிறது இவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்று. 

நல்லா கண்ணை திறந்து பாருங்க. அண்ணல் தம்மத்தை தழுவிய பின்னர்  மிகப்பெரிய கலாச்சார புரட்சி இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது. 

கடவுள் மறுப்பு பகுத்தறிவுன்னா புத்தர் பகுத்து அறிந்து சொன்னது என்ன அறிவு.  


ஆத்மா என்பதே அண்டை புளுகு ஆகாச புளுகு இதுல எங்க ஆத்மா மகாத்மா துராத்மா? 



இலங்கை பவுத்தம் பவுத்தம் இல்லையாம் அண்ணலின் வழியில் பவுத்தம் பேசுறாங்களாம். 
என்னடா பேசுறாங்கன்னு பாத்தா பவுத்தம் மதம் இல்லியாம். புத்தர் நாத்திக வாதியாம். அண்ணலின் வழியில் பவுத்தம் பேசுறீங்களா? இல்லை அண்ணலின் வழி என்று புருடா விட்டுக்கொண்டு ராமசாமி வழியில் பவுத்தம் பேசுறீங்களா?  



நான் உங்களை அப்படி எல்லாம் சொல்லல. உங்க பெயரை வச்சு உங்களை இந்து என்று சொல்லுவார்கள் என்றுதான் சொன்னேன். வேற யாராச்சும் உங்களை இந்து என்று  சொன்னார்களா? 



மொழி பெயரை சொல்லி..
முக்கியமா சேரியை ஏமாற்றாதேன்னு சொல்லுங்க. 


#புலிகள் மீது பிழையிருக்கலாம்...அதை சொல்லும் யோக்கியதையும், தகுதியும் இந்த தரகு வேலை பார்க்கும் பத்திரிக்கைக்கு கிடையாது....#

துக்ளக் நல்ல பத்திரிக்கையோ கெட்ட பத்திரிக்கையோ? அந்த பத்திரிக்கைக்கு  உண்மைய உண்மைன்னு பொய்யை பொய்யின்னு சொல்ல என்ன யோக்கியதை வேண்டும். 
கமல கண்ணன் மதம் ஒரு அபின்னு மார்க்ஸ் சொன்னதுக்கு மறுப்பு தெரிவித்த ஆயிரக்கணக்காண புத்தகங்கள் எழுதப்பட்டு உள்ளது. மதம் அபின் இல்லை மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழியாக மாறும் என்று பல பொலிடிகல் சயின்டிஸ்ட் ஆய்வு செய்து உள்ளனர். தற்போது அவர்களின் ஆய்வுக்கு அண்ணலின் மத மாற்றமும் அந்த மத மாற்றத்திற்கு பின்னர் நடக்கும் புரட்சி பற்றி ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் எல்லாம் ஆய்வுகள் நடக்கிறது. எனவே அரை குறை ராமசாமியை தூக்கி பிடித்துக்கொண்டு மதம் இல்லை கடவுள் இல்லை என்று பஜனை பாடிக்கொண்டு இருக்க வேண்டாம். 

ராமசாமி பகுத்தறிவு வாதியா? நாத்தீகம் பகுத்தறிவு என்றால். புத்தம் போதித்த புத்தர் அண்ணல் அம்பேத்கர் பண்டிதர் எல்லாம் பகுத்தறிய தெரியாத பேதைகளா?  

கடவுள் இல்லை என்பதை எப்படி பகுத்து அறிந்து சொல்ல முடியும். ஒரு வேலை கடவுள் அண்டார்டிக்காவில் இருக்கார்னு வச்சுக்குவோம். அதை எப்படி பெரியார் மாளிகையில் உக்காந்து கொண்டு பகுத்து அறிஞ்சி சொல்ல முடியும். எப்படி பகுத்து அறிஞ்சி ராமசாமி கடவுள் இல்லை என்று சொன்னார்ன்னு யாராச்சும் கேட்டு சொல்லுங்களேன்.







உங்களுக்கு தமிழன் திராவிடன் எனும் அடையாளம் முக்கியம்னா அதை விட முக்கியம் எங்களுக்கு பறையன் எனும் அடையாளம்.  பறையர்களில் எவரேனும் தன்னை இந்து என்று நினைத்துக்கொண்டு வருண தர்மத்தை ஆதரித்து நான் உயர்ந்தவன் அவன் என்னை விட கீழானவன் என்று நினைப்பான் எனில் அவன் பறையர்களின் வரலாறு தெரியாத முட்டாள். பறையர்கள் பூர்வீக பவுத்தர்கள் எனக்கு மேலே எவரும் இல்லை எமக்கு கீழே எவரும் இல்லை என்று வாழ்ந்தவர்கள் வாழ்பவர்கள்.  பறையர்களுக்கு இடையில் ஏற்ப்பட்டுள்ள உயர்தவன் தாழ்ந்தவன் எனும்  ஜாதிய உணர்வுக்கு காரணம் அவர்கள்  தாம்  பூர்வீக பவுத்தர்கள்  சாக்கியர்கள்  என்பதை மறந்து தம்மை "இந்து" "திராவுடன்" "தமிழன்" என்று நம்பிக்கொண்டு இருப்பதால்தான். நாங்கள் அந்த நம்பிக்கையை சேரியில் ஒழித்து புத்த தம்மத்தை மீட்டெடுக்கும் பணியில் உள்ளோம். கோயில் நுழைவு போராட்டம் நடத்தி எங்களை இந்துவாக்க்கி ஜாதி ஆக்கி திராவுடன் தமிழன் எனும் சூத்திர பட்டங்கள் கொடுத்து அடிமையாக்கும் சூத்திர திராவிட ராமசாமியிசம் எங்களுக்கு வேண்டாம். 

அந்த யோக்கியம் எல்லாம் எங்களுக்கு தெரியும். இதை சூத்திரர் கூட்டத்திடம் சொல்லி அவர்களுடை சூத்திர பட்டத்தை விட இந்து மத சிறையில் இருந்து வெளியே வர சொல்லுங்கள்.

நீங்க தமிழரா? என்ன ஜாதின்னு சொல்லுங்க? அப்பத்தான் நீங்க ஆதி தமிழரா? பாதி தமிழரா? உண்மையான தமிழரா? ன்னு சொல்ல முடியும். 

மொழியில்லாமல் மனுசன் வாழ முடியும். மொழியா அங்கீகாரம் பெறாமல் வெறும் பேச்சை பேசிக்கொண்டு இருக்கும் பல கோடி மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

சூத்திர பட்டம் போகாது என்று அண்ணல் எப்போது யாருக்கு சொன்னார். எதுக்கு அண்ணலை கொண்டு வந்து ராமசாமிக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். 

நான் ஒண்ணுமே கிழிக்க போவது இல்லை. அப்புறம் எதுக்கு என்னை ஒரு பொருட்டா நினைத்து உங்கள் வேலையை எல்லாம் வுட்டுட்டு கமென்ட்டு எல்லாம் போடுறீங்க. 

உங்களுக்கு  சூத்திர பட்டம் போகணும். ஏன்னா உங்க தலைக்கு  மேலே பார்ப்பான் சத்திரியன் வைஷ்யன்னு மூணு பேரு எங்களுக்கு  எதுக்கு பறையர் பட்டம் போகணும். எங்களுக்கு  மேலே எவரும் இல்லை கிழே எவரும்  இல்லை நாங்கள் பார்பனன் ஆண்ட பரம்பரை வைஷ்யன் சூத்திரன் என்று சொல்லும் இந்து வருணதருமத்துக்கு  வெளியானவர்கள் பூர்வ குடிகளாக பூர்வீக பவுத்தர்களாக என்று உங்களிடம் இருந்து விலகி வாழும் நாங்கள எதுக்கு எங்கள் அடையாளத்தை விடனும். 
நீங்க எல்லாம் யாருக்கு பிறந்தீங்க?

எங்க அப்பா அம்மாவுக்குத்தான். 

அடுத்தவங்க பேண்டுட்டு போனா அது பீன்னு சொல்ல கூடாதா? அடுத்தவன் மொழிதான் ஆனாலும் அது எங்களை ஆதிக்கம் செய்யும்போது எதிர்ப்பது அவசியமாக உள்ளது. உங்கள் மொழி அதை உங்கள் வீட்டில் பாத்து காப்பா வைத்துக்கொள்ளுங்கள். தமிழ் தேசியம் தாய் மொழி  கல்வின்னு அரசியல் பண்ணா இப்படி எதிர்ப்பு அரசியல் பண்ண வேண்டி இருக்கு. 


உங்களை பெத்தாங்களா? நீங்க பொறந்தீங்களா? 
 
குழந்தை பிறப்பு என்பது அறிவியல். இதுல அம்மா அப்பாவுக்கு எவ்ளவு பங்கு இருக்கோ அவ்வளவு பங்கு குழந்தைக்கும் இருக்கு. விந்துவாக இருக்கும்போதும் சரி குழந்தையாக உருவான பிறகும் சரி நீங்களும் முயற்ச்சி பண்ணால் தான் பிறக்க முடியும். பெத்தாங்க நான் போறேன்தேன்னு சொல்லிட்டு இருக்க முடியாது நானும் முயற்ச்சி பண்ணித்தான் பிறந்தேன். 


#நான் பொலிடிகல் சயின்ஸ் மாணவன்.#


நீங்க இன்னும் மாணவர்தான் நான் சமூக அரசியல் பேராசிரியரா உங்களை போன்ற மாணவர்களுக்கு பாடம் எல்லாம் எடுத்து இருக்கேன். 

தாய் மொழி நாய் மொழின்னு எங்கள் மீது திணிக்காதீர்கள் என்கிறோம். எதை படிக்க வேண்டும் எது எங்களுக்கு அவசியம் என்று எங்களுக்கு தெரியும் என்கிறோம். 

#எதிர்ப்பு அரசியல் பேஸ் புக்கில் செய்தால் போதாது. #

அப்புறம் எதுக்கு எனக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டேடஸ். போய் போயஸ் கார்டனில் எதிர்ப்பு தெரிவிக்கலாமே. 



#ஆசிரியர் என்றால் எல்லாம் தெரியும் என்ற அர்த்தம?#

அப்படின்னு நான் சொன்னேனா? அதே கேள்வி பொலிடிகல் சயின்ஸ் மாணவர்  என்றால் எல்லாம் தெரியும் என்ற அர்த்தமா? 


உழைக்கும் மக்கள் என்று ஏற்கனவே ஒரு அடடையாளம் இருக்கு. சிங்களம் மலையாளம் கன்னடம் ஹிந்தி பேசும் மக்களும் உழைக்கும் மக்கள்தான். மொழி என்பது உழைக்கும் மக்களின் அடியாளம் கிடையாது. அது ஆண்டைகளின் அடியாளம். 


#மக்கள் பேசும் மொழி.#

மக்கள் பேசுவது பேச்சு, மொழி இல்லை. மொழி என்பதற்கு எழுத்து இலக்கணம் எல்லாம் தேவை. பேச்சுக்கு அது தேவை இல்லை. 


கர்நாடகாவிலும் கன்னட ஜாதி தேசிய அரசியலை எதிர்த்து தலித் மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். 


பேச்சுக்கு மொழி அடிப்படை இல்லை. மொழிக்குத்தான் பேச்சு அடிப்படி. முதலில் தோன்றியது மொழி இல்லை பேச்சு. 



மொழியை பிறர்மீது திணிக்கும்போது எதிர்ப்பது அவசியம் அதைத்தான் நான் செய்கிறேன். நீங்க கூட இந்தி திணிப்பை எதிர்க்கிறீர்கள் தானே. 

கன்னடத்தை என்னை விட இழிவாக கர்நாடகத்தில் தலித் மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அங்க பொய் பாத்துட்டு வங்க. தமிழ் நாட்டில் நான் அரசியல் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். நான் அங்க போய் எதுக்கு பண்ணனும். 

தமிழ் நாட்டில் நாய்கள் கூட தமிழில்தான் குறையக வேண்டும் என்று சொல்லி திரிகிறது ஒரு கூட்டம். கூடிய விரைவில் நாய்கள் ஜாக்கிரதை என்று போடுவதற்கு பதில் தமிழ் நாய்கள் ஜாக்கிரதை என்று போடு போட சொல்லுவார்கள். 




#எய்தவனை விட்டு விட்டு அம்பை நோவதேன்.#

அம்பை தடுக்காமல் உடைத்து எரியாமல் அம்பை உடலில் வாங்கிக்கொண்டு இருந்தால் செத்து போயிடுவோம். 


#முக நூலில் மட்டும் புரட்சி பண்றீங்க.#

நான் முக நூலில் மட்டுமே புரட்சி பண்றேன். அதனாலே ஒன்னும் நடக்க போவது இல்லை. உங்க தெரு போராட்டம் போர்கள போராட்டம் மாவோயிச போராட்டம் புலியிச போராட்டம் சிறுத்தையிச போராட்டம் எல்லாத்தையும் விட்டுட்டு எனக்கு எதுக்கு வந்து முக புத்தகத்துல பதில் சொல்லிட்டு இருக்கீங்க. போங்க கதி அருவா வேல் கம்பு குண்டு கட்டை பாம் துப்பாக்கி தோட்டா எல்லாம் எடுத்துட்டு கிளம்புங்க. 


#அது சுயல நாய்களின் செயல்........# 

அந்த சுய நல நாய்களை எதிர்த்துத்தான் ஸ்டேடஸ் போடுறேன். எங்கோ போகும் அம்பை நீக்க எதுக்கு வந்து உங்க நெஞ்சில வாங்கிட்டு குத்துதே குடையுதே என்கிறீர்கள். 


#அப்படி என்றால் அம்பை தான் அழிக்க வேண்டு எய்தவனை இல்லை என்கிரீற்களா........#

இரண்டையும் என்கிறேன். போர்க்களத்தில் எதிரியை அழிக்க அம்பும் தேவை  எதிரே வரும் அம்பை முறிக்க கேடயமும் தேவை என்கிறேன். இந்துக்களை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது  போல தமிழர்களையும் தமிழ் தேசிய அரசியலையும் எதிர்ப்பது அவசியம் என்கிறேன். 

#நான் சாக்கியன் எனப்தும் சுயநலம்தானே?#

மேலே சொன்னது அந்த சுய நல நாய்கள் தங்கள் நலத்துக்கு அடுத்தவர்களை கெடுப்பதை பற்றி. சாக்கியர் நலம் பேசுவது தப்பு இல்லை. அடுத்தவர் நலத்தை கெடுக்க நினைப்பது தப்பு. 








அவருக்கு பேரு அறிவர் குணா? நல்ல கூத்து. 

#ஒட்டு மொத்த தமிழன்#

ஆதி தமிழன் பாதி தமிழன் ஜாதி தமிழன் அது என்ன ஒட்டு மொத்த தமிழன். இதுக்கு ஏதாவது டெபினீஷன் கொடுக்கப்பட்டு உள்ளதா? 



#மனிதனாய் வாழும் சில மனிதர்கள்#

அவர்களுக்கு எதுக்கு தமிழன் எனும்  பட்டம். மனிதனாய் வாழும் மனிதனை மனிதனா வாழ விடுங்களேன். 
பறையரும் சக்கிளியரும் ஜாதி இல்லை. சேரிக்குள் ஜாதி இல்லை. புதுசா நாமம் போட்டுக்கிட்டு பட்டை போட்டுக்கொண்டு "பறையன் என்பது ஜாதி" "நாங்க உயர்ந்த ஜாதி" :சக்கிலியர் தாழ்ந்த ஜாதி"ன்னு ஒரு சிலர் சொல்லிட்டு திரிவதும் புதுசா திராவிட வேஷம் புலி வேஷம் போட்டுக்கொண்டு "பறையன் என்பது ஜாதி" "நாங்க திராவிடர்  நாங்க தமிழர்" என்று திரிவதும் எங்களை ஜாதி ஆக்காது. பறையர்கள் ஜாதியை எதிர்த்ததால்தான் அவர்கள் சேரியில் வாழ்கிறார்கள். அவர்கள் ஆரிய ஆதிக்கத்தையும் திராவிட ஆதிக்கத்தையும் எதிர்த்ததால்தான் ஆரிய-திராவிட இந்துக்களின் கண்களுக்கு தீண்டத்தகாதவர்களாக உள்ளனர். கலப்பு திருமணம் ஜாதி ஒழிப்பு திருமணம் எல்லாம் ஊர் தெருவில் உள்ள சூத்திர திராவிடர்களுக்கு தேவை. அதை எதுக்கு எங்களுக்கு சொல்லிக்கொடுக்கிரீர்கள். உங்களுக்கு சூத்திர பட்டம் போகணும்னா அதுக்கு "திராவிட பட்டம்" "தமிழர் பட்டம்" தேவை அதுக்கு ஜாதிகள் ஒழியனும். பறையர் சக்கிலியர்  என்பது ஜாதி இல்லை. பறையர்கள் சக்கிலியர்கள் என்பது பழங்குடி மக்களின் அடையாளங்கள்.  நாங்கள் பறைய்ரகளாக சக்கிலியர்களாக இருப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சனை. பறையர்களும் சக்கிளியர்களும் பூர்வீக குடிகள். ஆதி குடி மக்கள் பூர்வீக பவுத்தர்கள். எங்கள் அடையாளமும் எங்கள் எங்கள் சமூக உரிமைகளும் எங்களுக்கு முக்கியியம். ஜாதி ஒழிப்பு வெங்காயம் விளக்கெண்ணை எனும் பெயரில் எங்கள் அடையாளங்களை அழிக்க நினைப்பதே ஆதிக்க திரரவிட அரசியல்தான். யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை எங்களுக்கு யாரும் அடுமை இல்லை என்று கொண்டாட வேண்டிய சமூகம் எங்கள் சமூகம் அதுக்கு ஜாதி என்று முத்திரை குத்தி சூத்திர பட்டதை சுமத்த நினைப்பதற்கு பெயர்தான் திராவிட அரசியல்.  

தாய் மொழியில்தான் சிந்திப்பாங்கலாமே? அது என்ன கருமமோ. இவனுங்க நம்பிக்கைதான் உண்மை மாதிரி பேசிட்டு இருப்பானுங்க. நான் ஒரு மூணு மொழியில சிந்திக்கிறேன். பேஸ் புக்குல ஸ்டேடஸ் போட்டுட்டு  போய் அது பற்றி சிந்திச்சா தமிழ்தான் மனசில் ஓடுது. ஆபிசில் ஆங்கிலத்தில் பேசிட்டு அது பத்தி சிந்திச்சா ஆங்கிலம்தான் ஓடுது. ஹிந்தியில நண்பர்களிடம் பேசிட்டு அது பத்தி சிந்திச்சா இந்திதான் ஓடுது. ஒரே மொழிய படிச்சிட்டு ஒரே மொழியில் பேசிட்டு ஒரே மொழியில் சிந்திச்சிட்டு அதுதான் தாய் மொழி நாய் மொழி அதுலதான் என்னால சிந்திக்க முடியும்னா அதுக்கு நாம என்ன பண்ண. கொஞ்ச நாளைக்கு வெளி மாநிலத்துக்கு வெளி நாட்டுக்கு போயிட்டு தமிழில் எழுதாம பேசமா வேறு மொழியை மட்டுமே பயன்படுத்தி பாருங்க உங்க சிந்தனை அப்பவும் "தாய்" மொழியில வருதான்னு. வெளி நட்ட்டில் உள்ள நிறைய மக்கள் தமிழ் மொழிய மறந்து பல நூற்றாண்டுகள் ஆகிறது. அவுங்க இன்னமும் தாய் மொழியிலா சிந்திக்கிறார்கள்? அவ்வளவு என் சென்னையில் மயிலாப்ப்பூர் அண்ணா நகரில் வாழும் நிறைய குழந்தைகள் தமிழில் சிந்திக்கிறார்களா என்று கேட்டு பாருங்கள். என்ன உங்க தாய் மொழி டுபாகோரு சிந்தனையோ. 

பறையர்னு பறையர் உரிமை பேசாதே வா தமிழனா திராவிடனா  சேந்துக்கலாம் என்பதும் சக்கிலியர்னு சக்கிலியர் உரிமை பேசாதே வா  தலித்துன்னு சேந்துக்கலாம் என்பதும் ஒண்ணுதான். பறையரா இருந்து பறையர் உரிமை பேசுவதும். சக்கிலியரா இருந்து சக்கிலியர் உரிமை பேசுவதும்தான் தலித்தியம். பறையர் சக்கிலியர் என்று சொல்ல பயந்து கொண்டு மூடி மறைத்துக்கொண்டு தலித் தலித் என்று யாருக்கோ கழிவிரக்கம் காட்டுவது போல சிலர் பேசிக்கொண்டு இருப்பது தலித்தியம் கிடையாது. தன்னை பறையன் சக்கிலியன் தலித் பவுத்தன் சாக்கியன் என்று சொல்லும்போது நெஞ்சு நிமிர்ந்து இருக்க வேண்டும் அதுதான் ஜாதி எதிர்ப்பின் அடையாளம்.  பறையன் சக்கிலியன் என்று சொல்ல பயந்து கொண்டு திராவிடன் தமிழன் என்று ஓடி ஒளிவது ஜாதி எதிர்ப்பு அல்ல அது அடிமை மனோ நிலை. ஜாதியத்தை  ஏற்றுக்கொள்ளும் மனோ நிலை. 

#திருக்குறள் பாலி மொழியில் எழுதப்படவில்லை.#

அண்ணல் அம்பேத்கர் எழுதிய முப்பத்தி மூன்று பகுதிகளும் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டு உள்ளது. ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம் அவரை இங்கிலீஷ்காரன்னு சொன்னாலும் சொல்லுவீங்க. 


வள்ளுவருக்கு ஏற்க்கனவே வள்ளுவர் அப்படின்னு ஒரு அடையாளம் இருக்கு. உங்களை வள்ளுவரோடு அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பினால் உங்களை வள்ளுவர் என்று சொல்லிக்கொள்ளுங்கள். வள்ளுவரை எதுக்கு தமிழன்னு சொல்லி அசிங்க படுத்துறீங்க. 


தாய் மொழின் அவசியம் இல்லை. நான் யாருக்கு மேசேஜ் போடுறேனோ அவுங்களுக்கு புரியும் மொழியில். நான் ஹிந்தி ஆங்கிலம் மொழிகளில் கூட ஸ்டேடஸ் போடுவேனே. 

வள்ளுவர் தமிழில் எழிதினாறேமே. வள்ளுவர் எழுதியது வள்ளுவ மொழின்னு சொல்லுஞ்கேளேன். எதுக்கு அதுக்கு தமிழ் அப்படின்னு பேரு. 


#இந்த நிலைத்தகவலை நீங்கள் உங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்திலோ, இந்தியிலோ பதிந்திருக்கலாம். ஆனால் அதையும் கடந்து தமிழில் பதிந்துள்ளீர்கள் என்பது ஒன்றே சொல்கிறது தாய்மொழியின் அவசியத்தை.#

தாய் மொழின் அவசியம் இல்லை. நான் யாருக்கு மேசேஜ் போடுறேனோ அவுங்களுக்கு புரியும் மொழியில். நான் ஹிந்தி ஆங்கிலம் மொழிகளில் கூட ஸ்டேடஸ் போடுவேனே. 

ஒவ்வொரு முறையும் கூகுல்ல போயி இந்த சனியனை டைப் அடிக்கிறதுக்குள்ள என் தலை வெடிக்கிறது. இங்க ஒரு பக்கம் தமிழில் அடிக்கிறத ஆங்கிலத்துல் நூறு பக்கம் அடிச்சிடுவேன்.  


#இந்த புத்தனை பின்பற்றுவதாய் சொல்லி தெரியும் அனைவரும் மத வெறியர்களாய் இருக்கிறார்கள் என்ன செய்வது.#

ஆமாம் நங்கதான் புலி வேஷம் போட்டுக்கொண்டு புத்த சாமியார்கள் சென்னைக்கு வந்தா ரயில் நிலையத்தில் வைத்து கன்னத்தில் அடித்து பொறிக்கித்தனம் பண்ணுகிறோம். 

Thursday, May 30, 2013

#பறையர் என்றால் இந்து மத வரையறைக்குள் வரவில்லை என்பது எனக்கு வியப்பான ஒன்றுதான் நண்பரே!! ஏனென்றால் இந்த மனுதர்மவான்கள் புத்தனையே இந்துக்கடவுள்களின் ஒரு அவதாரம் ஆக்கி எவ்வளவோ நாட்களாகிவிட்டது.#

புத்தர் இந்து அவதாரம் என்பது உண்மை எனில் பறையர்கள் இந்துக்கள் என்பதும் உண்மை. புத்தர் இந்து அவதாரம் என்பது பொய் என்றால் பறையர்கள் இந்துக்கள் என்பதும் பொய். உங்கள் நம்பிக்கை என்ன என்று சொன்னால் நல்லது. எங்களை பொறுத்தவரை புத்தர் இந்து அவதாரம் இல்லை. அப்படி சொல்லுவது புத்த மதத்திற்கு எதிரான கருத்து. அது போல புத்தரின் வழியில் வாழ்ந்த பறையர்களை (பூர்வ பவுத்தர்களை)  இந்து என்று சொல்வது புத்த மதத்திற்கு எதிரானது. மீண்டும் மீண்டும் புத்தரை இந்து அவதாரம் என்று சொல்வதை எதிர்த்து அது உண்மை இல்லை என்பதை உலகுக்கு எடுத்து சொல்வது எவ்வளவு முக்கியமோ அது போல பூர்வ பவுத்தர்களான பறையர்களை ஜாதிக்கு அப்பார்ப்பட்டவர்கள் எனும் உண்மையை உலகுக்கு எடுத்து சொல்வது முக்கியம்.   

Wednesday, May 29, 2013

பறையர்ணா சாதியாமே. ஆதி குடிகள் ஜாதியா இல்லையான்னு யார் முடிவு பண்ணறது. கொஞ்ச நாளைக்கு முன்ன பழங்குடி மக்களை எல்லாம் இந்துக்களாக மாற்ற இந்து அமைப்புக்கள் ஒரு பூஜை நடத்தினார்கள். அப்படி ஏதாவது பூஜை நடத்தி எங்களை யார் இந்துக்களா ஜாதியா மாத்தியது. நாங்கள் சூத்திரர்களா? ஷத்திரியர்களா? எங்களை ஜாதி என்று சொல்லும் திராவிட சிகாமணிகள் என்ன தனியா சங்கர மடம் வைத்து நடத்துராங்களா? இல்லை ஆரிய சாமாஜம் மாதிரி திராவிட சமாஜம் வைத்து நடத்துராங்களா?

சமூக அடையலம்னா? சமூக அடையாளம் அப்புறம் எதுக்கு அதுக்கு ஜாதின்னு  பேரு வைக்கிறீங்க ஜாதிகள் உருவாகும் முன்னரே பறையர் எனும் சமூகம் இருந்தது வரலாறு. ஆதி குடி சமூகம் / பழங்குடி சமூகம்.   

 #பூர்வகுடி தமிழர்கள் என்று சொல்லியே தமிழன் என்ற இனவுணர்வோட இருக்கலாமே....#

எதுக்கு எனக்கு தமிழன் எனும் இன உணர்வு. ஆண்டைகள்  செத்தா பறை அடிக்கவா குழி வெட்டவா பிணம் எரிக்கவா? எதுக்கு எனக்கு தமிழன் எனும் இன உணர்வு. 

பறையர் பூர்வ குடிதான் அதில் எந்த கேள்வியும் இல்லை. அது வரலாறு. தமிழன் பூர்வ குடியா? அப்புறம் எதுக்கு எனக்கு தமிழன் பட்டம். 
#முதல்ல இந்தியாவை ஒத்தை நாடாக்குங்க...இந்தியா என்னைக்கு ஒத்தை நாடாக இருந்தது...இது வெறும் சந்தை மட்டும்தானே.#

முதல்ல தமிழ் நாட்டை ஒத்த நாடா ஆக்குங்க அப்புறம் இந்தியாவை ஒத்த நாடாக்குவோம். இந்தியா சந்தை தமிழ் நாடு இன்னும் ஜாதி சாக்கடையாத்தானே இருக்கு. 


#தமிழ் நாடு ஜாதிகளின் பட்டியலின் பெயரில் பறையன் என்பது ஜாதியாக குறிப்பிட படவில்லையா?#

தமிழ் நாடு அரசு எங்களை எதுக்கு ஜாதி பட்டியலில் வைத்து உள்ளது. வரலாறு தெரியாத அரசு. நாங்கள் ஆதிக்குடிகள். பழங்குடிகள், எங்களை பழங்குடியினர் பட்டியலில் வைக்க சொல்லுங்க. 


#அப்படியே அது ஜாதியாக இல்லை என்றால் ஆண்ட பரம்பரை என்று சொல்பவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.#

ஆண்ட பரம்பரை (ஷத்திரியர்) நான்கு வருண முறையில்  இரண்டாம்  நிலையில் உள்ளது. சூத்திர ஜாதிகள் எல்லாம் தங்களை ஆண்ட பரம்பரை (ஷத்திரியர்) என்று சொல்லிக்கொண்டு வருணத்தில் நான்காம் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு போக நினைப்பதை சமஸ்கிருதமயமாக்கல் என்று சமூக அறிவியளார் சொல்கிறார்கள். நாங்கள் அதுபோல வருணத்திற்கு உள்ளே போக நினைக்க வில்லை. வருணத்துக்கு வெளியே உள்ளவர்கள் ஜாதி அற்றவர்கள் என்று சொல்கிறோம். எங்கள் மூதாதையர் புத்த தம்மிகள் ஜாதி அற்றவர்கள் என்கிறோம். இதை பாலிமயமாக்கள் என்கிறார் பேராசிரியர் எளினார் ஜெளியாட் (அன்டச்சபல் டு தலித் எனும் புத்தகத்தில்)

#இதற்கு நீங்கள் வர்க்க பேதனை உருவாக்குகிறீர் என்று சொல்லலாமா?#

நான் எப்படி வர்க்க பேதம் உருவாக்குகிறேன் என்று சொன்னால் விரிவாக பேசலாம். 


#மதமும், கடவுளும், வர்க்கங்களும், சாதிகளும் உள்ள வரை மக்களில் வேற்றுமை என்பது இருக்காதா?# 

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே உலக நியதி. வேற்றுமை இல்லாமல் எல்லாவற்றியும் ஒரே பெட்டிக்குள் அடைக்க நினைப்பது ஆதிக்க அரசியல். 

#இதை புத்தன் சொல்லவில்லையா? இல்லை அண்ணல் அம்பேத்கார் சொல்லவில்லையா?#

எதை சொல்லவில்லை என்று சொன்னால் மேலும் விரிவாக பேசலாம். 


#பறையன் என்று சொல்வதால் உங்களிலின் நிலைப்பாடு என்ன?#

என் சமூகம். என் சமூகத்தின் உரிமை. என் அடையாளம். என் சமூகத்தை காக்க என் சமூகத்துக்கு பனி செய்வது எனது கடமை. என்னை வாழ வைக்கும் சமூகம். அதற்க்கு என் கடமையை நான் ஆற்ற வேண்டும். என் சமூக முன்னோர்கள் போட்ட பிச்சைதான் இன்று நான் அனுபவிக்கும் உரிமைகள் பெருமைகள். தேங்க்ஸ் ஹெவன் மற்றவர்கள் கண்களுக்கு நாங்கள் தீண்டத்தகதவர்களாக இருந்தோம் இருக்கிறோம். 

#பொது புத்தியின்படி பறையன் என்றால் ஜாதி தானே இதை மாற்ற நீங்கள் என்ன செய்தீர்?#

ஜாதி இந்துக்களில் ஆதிக்க ஜாதிகளின் அதிகார வர்க்கத்தின் புத்தி பொது புத்தி என்றால் அதை மற்றும் எதிர்க்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். 
 
#உங்களின் கருத்துக்களை படிப்பவர்கள் யாவரும் ஜாதிய அடிப்படையில் உங்களை எண்ணவில்லை என்கிறிரா?#

என் கருத்துக்களை படிப்பவர்கள் என்னை ஜாதியவாதி என்று நினைத்தால் அது என் தவறு இல்லை. படிப்பவர்கள் அணிந்திருக்கும் கண்ணாடி. பறையன் என்று மார் தட்டுவது ஜாதி இல்லை. பறையன் என்று சொல்ல வெட்கப்பட்டு ஓடி ஒதுங்குவது. நான் தமிழன்  நான் திராவிடன் என்று அடையாளத்தை மறைத்து அடங்கி கிடப்பதே ஜாதிய அடிமை மனோ நிலை. 

#தமிழ் நாட்டில் இருக்கின்ற பெரும் பகுதியான மக்கள், ஏன் தெற்கு ஆசியாவில் இருக்கின்ற பெரும் பகுதியான மக்கள் புத்தத்தை பின் பற்றியவர்கள் தானே? உண்மையாக நீங்கள் புத்தத்தை பின்பற்றுபவராக இருந்தால் இதை உணர்த்த நீங்கள் என்ன செய்தீர்?#

உண்மைதான் ஒரு காலத்தில் ஆசியா முழுக்க அனைத்து மக்களும் புத்த தம்மத்தை பின் பற்றும் மக்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் பார்பனிய அலை அடித்தபோது இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் தங்களை பார்பனர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூதிரர்கள் என்று சொல்லிக்கொண்டு இந்துவாகி போனார்கள். சாக்கியர்கள் மட்டும் தங்களது நிலையில் இருந்து மாறாமல் இருந்தார்கள். வருணத்தை ஏற்காமல் சாதியத்தை ஏற்காமல் இருந்தார்கள். அவர்கள் தான் பறையர்கள் அவர்கள் தான் சேரி வாழ்  மக்கள். இந்த உண்மை வரலாற்றை அறிந்து சொன்னவர்கள்தான் பண்டிதரும் பாபாசாகேப்பும்.  இதை உணர்ந்ததால் தான் எமது மக்களுக்கு உண்மை வரலாற்றை எடுத்து சொல்லிக்கொண்டு  இருக்கிறேன். 
இந்தியாவில் உள்ள அனைத்து ஏன்ஷியெண்ட் நகரங்களையும் வடிவமைத்தவர்கள் பூர்வீக சாக்கிய குடிகளே. அஸ்தினாபுரம் அதில் ஒன்று. ஆனா மகாபாரதத்தில்  சொல்லப்பட்ட அஸ்தினாபுரம் டூப்ளிகேட் அஸ்தினாபுரம். அதை யாரும் வடிவமைக்கவில்லை  அது கற்பனை அஸ்தினாபுரம் நாம கட்டினதா புருடா விட்டு அவன் கற்பனை கதையை நம்மை நம்ப வைக்க விட்ட புருடா அது. சாக்கிய மவுரிய களபறையர்கள் கட்டிய நகரங்களுக்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்கள் உண்டு. அதை மட்டும் பேசுவோம் கற்பனை கதைகளை படித்து என்ஜாய் பண்ணுவோம். .  
சாக்கிய பறையனார் என்று கலப்பரையர் கால செங்கம் கல் வெட்டில் உள்ளது. அது பற்றி ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலை கழகங்களில் ஆய்வு நடக்குது. நாங்க சோம்பேறிகள் இல்லை நைனா நாங்க சோம்பேறிகளா இருந்தா தமிழ் மட்டுமே என்று சேரிகளில் உக்காந்து இருப்போம். நாங்க சோம்பேறி இல்லை என்பதால் தான் இங்கிலீசு இந்தி மராத்தி பாலி ன்னு எங்கள் கலை அகல விரிக்கிறோம். 

#ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் சாதி சாதி என்று சொல்லப்பட்ட ஒன்று இன்று சாதியே இல்லை என்றளவில் மாறி விட்டதென்றால் வாழ்க பெரியார்!#

ஹாஹாஹா. என்ன திடீர்னு பெரியார். ஆயிரம் ஆண்டுகள் பறையர் ஜாதின்னு யார் சொன்னது. இந்து மத சாஸ்திரம் கூட எங்களை ஜாதிக்கு வெளியே என்றுதான் சொல்கிறது. மனு கூட அவர் சாஸ்திரத்தில் எங்களை வர்ணம் (ஜாதி) அற்றவர்கள் என்றே சொல்கிறார். நீங்களும் உங்கள் ராமசாமி கூட்டமும்தான் பறையன்னு சொல்லாதே பறையன் என்றால் ஜாதின்னு சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள். 


இந்து இல்லாத எனக்கு இந்து பட்டம் கட்டுவது ஜாதி இல்லாத எனக்கு ஜாதி பட்டம் கட்டுவது சூத்திரன் இல்லாத   எனக்கு சூத்திர பட்டம் கட்டுவது இதெல்லாம் யார் என்றால் சூத்திர ராமசாமி கூட்டம். நீ இந்து இல்லை நீ சூத்திரன் இல்லை உனக்கு ஜாதி இல்லை வருணம் இல்லை என் கோயிலுக்கு உள்ளே வரதே என்கிறான் பார்ப்பணிய இந்து. அவனும் இந்துதான் அவனை கோயிலுக்கு உள்ளே விடு என்கிறான் நாத்திக ராமசாமி இந்து. அந்த நாத்தம் பிடிச்ச இந்து கோயிலுக்கு உள்ளே போகணும்னு நான்கேட்டேனா? உனக்குத்தான் கடவுள்  நம்பிக்கையே இல்லை.  மதமே வேண்டாம்னு சொல்றே  அதுக்கு அப்புறம் என்னை எதுக்கு கொண்டு போய் இந்து சாக்கடையில் தள்ளுகிறாய். எனக்கு எதுக்கு இந்து பட்டம் சூத்திர பட்டம் ஜாதி பட்டம் கட்டுகிறாய்.  


களப்பிரர் இல்லை களபரியார் (களபறையர்) 
#அண்ணன் வணக்கம் நீங்கதான் பறையர் என்ற வார்த்தைக்கு பாரியார் என்ற வார்த்தையிலிருந்து வந்ததுன்னு சொல்லிடிங்க.பறையர் என்ற வார்த்தையோ தமிழை தழுவி இருக்கும் ஒரு வார்த்தை அதனால் அதை எதற்காக நீங்கள் தஊக்கிபிடிக்கிரீர்கள்.உங்களுக்குத்தான் தமிழை பிடிக்காதே.தாழ்மயுடன் கேட்பது பறையர் என்ற தமிழ் வார்த்தையை தூக்கிபிடிப்பது எதற்காக அண்ணன்.#

பறையர் என்பது தமிழ் வார்த்தை என்று யார் சொன்னது. தமிழில் "ஐ" :ற" என்பதெல்லாம் பின்னால் சேர்க்கப்பட்ட எழுத்துக்கள். அது எப்படி தமிழ் ஆகும். பறையர் எனும் பறையர்களின் வார்த்தை ப அய்யா (பரி அய்யா/ உன்னதமானவர்கள் / புனிதமானவர்கள் / உயர்ந்தவர்கள் / தம்மத்தை பின்பற்றுபவர்கள்) எனும் பாலி வர்தையில் இருந்து வந்தது. பாலி வார்த்தையில் இருந்து வந்த வார்த்தை பாலி வார்தையாகத்தானே இருக்கும். அது எப்படி தமிழ் வார்த்தை ஆனது.

நாம ஒன்னு சொன்னா ஆயிரம் கேள்வி கேப்பாங்க? நாம ஒன்னு எழுதுனா ஆயிரம் ஆதாரம் கேப்பாங்க. இந்த லெமூரியா, சங்க காலம் இதுக்கு எல்லாம் எதவது ஆதாரம் இருக்குதன்னா/ மூச்சு விட மாட்டாங்க. 

மத்திய இந்தியாவில் உள்ள முண்டா இன மக்களை பற்றியும் அவர்களது மொழி பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள செய்யப்பட்டு உள்ளன. அது போல மௌரியர் பற்றியும் மவ்ரியர் எனும் வார்த்தையின் மூலம் பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் நடந்து உள்ளன. அவற்றை படித்து நான் சொன்னதின் விளக்கங்களை தெரிந்து கொள்ளவும். 

Tuesday, May 28, 2013

பறையர் என்பது ஜாதி அல்ல ஜாதி எதிர்ப்பின் அடையாளம். ஜாதி என்பது என்ன ஜாதி எனும் சிறை எவ்வளவு கொடியது என்பது எங்களுக்கு தெரியும். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு உங்கள் பெயர் இந்து பெயர். அது போல வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு எனது பெயர் ஜாதி பெயர். "ஜாதி" "மதம்" என்பது பெயரில் இல்லை. மனதில் உள்ளது. பறையன் என்று ஒருவன் சொல்ல தயங்குவது ஜாதி. பறையன் என்று நெஞ்சை நிமிற்துவது ஜாதி எதிர்ப்புக்கான அடையாளம். நான் பறையன் என்று நெஞ்சை நிமிற்தும்போது  எனக்கு மேல் எவனும் இல்லை என்ற எண்ணம் வருகிறது. எனக்கு மேல் எவனும் இல்லை எனும்போது எனக்கு கீழ் எவனும் இல்லை. எனக்கு மேலேயும் எனக்கு கீழேயும் எவனும் இல்லை எனும் எண்ணம் வரும்போது மட்டுமே சாதி ஒழிகிறது. பறையர்களை ஒழிப்பது பறையர்களின் ஒற்றுமையை ஒழிப்பது பறையர்களின் விடுதலை உணர்வை ஒழிப்பது பறையர்களின் கூட்டமைப்பது ஒழிப்பது பறையர்களின் சங்கங்களை ஒழிப்பது ஜாதி ஒழிப்பு இல்லை ஜாதி திமிர். இதை பறையர் சமூகத்தில் பிறந்து விட்டு ஒருவர்  தன்னை பறையர்  என்று சொல்ல மறுக்கிறார்  அல்லது தயங்குகிறார்  என்றால் அது அவர் மனதில் இருக்கும் கீழ்ஜாதி மனோ நிலை. 


#நீங்கள் பறையன் என்பதை ஜாதி என்று கருதாது மகிழ்ச்சிதான். பள்ளர் கள்ளர் தேவர் வன்னியர் நாடார் முதலியார் ரெட்டி இவர்களை எப்படி கருதுகிறீர்கள். அல்லது எப்படி கருத வேண்டும் என்று உங்கள் குடும்பத்தவர்க்கோ நண்பர்களுக்கோ சொல்ல விரும்பகிறீர்கள்?#

பள்ளர் கள்ளர் தேவர் வன்னியர் நாடார் முதலியார் ரெட்டி இவர்கள் எல்லோரும் பறையர்களை போன்ற இனக்குழுக்கள். அவர்கள் தங்களை ஷத்திரியர்கள் சூத்திரர்கள்  என்று சொல்லிக்கொண்டு, நான் அவரை விட உயர்ந்தவன் இவரை விட தாழ்ந்தவன் என்று பட்டம் கட்டிக்கொளும்போது ஜாதிகளாக மாறுகிறார்கள். இவர்கள் ஒருவருக்கு அடங்கி போவதும் மற்றவரை அடிமை படுத்த நினைப்பதும் இவர்களை ஜாதி என்று நிர்ணயிக்கிறது. பறையர் எவரும் நாங்க ஆண்ட ஜாதி மீதியெல்லாம பேன்ட ஜாதி என்று சொல்லிக்கொண்டு திரியவில்லை. அப்படி ஒருவர் சொல்கிறார் எனில் அவர் ஜாதியத்தை தூக்கி பிடிக்கிறார் என்று அர்த்தம். "நான் பறையர் சக்கிலியர் எங்களை விட தாழ்ந்தவர்" என்று எந்த பறையராவது சொல்கிறார் எனில் அவர் ஜாதியத்தை 
தூக்கி பிடிக்கிறார் என்று பொருள். சக்கிலியர் எம்மை விட தாழ்ந்தவர் என்று அவர் நினைக்கும்போது  அவரின் தலைக்கு மேலே ஆயிரம் ஜாதிகள் உள்ளது என்று அவர் ஏற்றுக்கொள்கிறார். பறையர் என்பது ஜாதி இல்லை. நாம் பறையர். எமக்கு மேல்  எவரும் இல்லை எமக்கு கீழ் எவரும் இல்லை என்பதே ஜாதி ஒழிப்பின் மந்திரம். நீங்கள் மேலே சொன்ன அனைத்து சமூகங்களும் ஒருவரை ஒருவர் சமமாக நினைக்கும் போது ஜாதி ஒழிகிறது. அப்படி ஜாதி ஒழியும்போது மட்டுமே இந்த சமூகங்கள் ஒன்றோடு ஒன்று கலக்கும். இந்த சமூகங்களுக்கு இடையே கலப்பு திருமணங்கள் நடக்கும். ஜாதியை ஒழிக்காமல் கலப்பு திருமணம் என்பது சேரியை ஏமாற்றும் வேலை. ஜாதி ஒழிய வேண்டும் எனில் சாதியத்தை தூக்கி பிடிக்கும் சாஸ்திர சம்பரதாயங்கள் ஒழிய வேண்டும். நான் ஆண்ட பரம்பரை பேன்ட பரம்பரை எனும் நம்பிக்கைகள் ஒழிய வேண்டும் இந்து மதம் ஒழிய வேண்டும். புத்தன் காட்டிய மானுட  தம்மம் அறம் அன்பு கருணை மக்களின் மனதில் பெருக வேண்டும். நான் பறையராக இருப்பதால் மற்ற சமுகங்களை வெறுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் சமூகமும் வாழ வேண்டும் அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். நான் பறையன் என்று சொல்லுவதை நிறுத்திவிட்டால் ஜாதி ஒழிந்து விடும் என்பது முட்டாள் தனம். என் சமூகம் நான் பறையன் என்று சொல்ல பயந்த காலம் போய் இன்று நெஞ்சை நிமிர்த்தி நாம் பறையர்  என்று சொல்லும் காலம் வந்து உள்ளது. இதுதான் சமத்துவம் ஜாதி ஒழிப்பின் ஜாதி எதிர்ப்பின் அடையாளம். 

 
யார் வந்து என் சுவற்றில் நாய் மாதிரி மூத்திரம் பெய்வது என்பது படிக்கிறவர்களுக்கு தெரியும். மொழியை தாயாக்கி அதுக்கு பூஜை செய்து விட்டு தாயை எட்டி உதைக்கும் நாதாரி நாய்கள் நாங்கள் அல்ல


#yen nayakkar, iyyer lam tamil jathila serkanuma???#

இல்லை இல்லை மேலே சொன்ன ஜாதி அடியாளம்தான்  ஒருவன் தமிழனா தமிழன் இல்லையா என்று நிர்ணயிக்கிறது என்கிறேன்.