Saturday, December 22, 2012


பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் இருந்து தனியாக பிரித்து மிகவும் பிற்படுதப்பட்டவர் என்று பட்டியலை இதே சூத்திர திராவிட அரசுதான் உருவாக்கியது. அப்போது MBC பங்கை எல்லாம் BC அனுபவிக்கிறார்கள் என்று சொல்லவில்லை. BC க்கும் MBC க்கும் இடையில் பிளவை ஏற்ப்படுத்தவில்லை. அதுக்கு ஒரு கமிஷனை போட்டு அவர்கள் மக்கள் தொகைக்கேற்ப அவர்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என்று சொன்னார்கள். BC மற்றும் MBC என்று பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்தனர். ஆனால், அதே திராவிட கூட்டம் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறது பாருங்கள் நம் மீது சேற்றை வாரி இறைத்துக்கொண்டு இருக்கிறது. ஏதோ பறையர்களும் பள்ளர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது போலவும். அவர்கள் தான் சக்கிலியர்களை படிக்க விடாமலும் வேலை வாங்க விடாமல் தடுத்தது போலவும் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறது இந்த கூட்டம். பள்ளர் பறையர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை இது வரை கொடுக்காமல் திருடி தின்ற இந்த கூட்டம். அருந்ததியர் மீது பாசம் கட்டும் நாடகம் நமது பங்கை இதுவரை அவர்கள் திருடியதை மறைக்க நடத்தும் நாடகமே.  அருந்ததியருக்கு 6% கூட கொடுக்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை தனி ஒதுக்கீடு ஆக்கட்டும். BC  & MBC போல தனி தனியாக இருக்கட்டும். உள் இட ஒதுக்கீடு எனும் பெயரில் நமக்குள் சண்டை வேண்டாம் என்கிறோம். 

No comments:

Post a Comment