Wednesday, December 12, 2012

குண்டு சட்டியில குதிரை ஓட்டிட்டு விடுதலை படிச்சிட்டு உக்காந்துட்டு இருந்தா படித்த பட்டம் பெற்ற அரசு பணியில் உள்ள லட்சக்கணக்கான சாக்கிய மக்கள் இந்தியா முழுக்க என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியாது. இந்தியவில் எந்த முக்கிய  ரயில் நிலையத்தில் இறங்கினாலும் நாம் அனாதைகளாக நிற்க வேண்டியதே இல்லை அங்குள்ள எஸ் சி எஸ் டி சங்கதில் போய் ஜெய் பீம் என்று சொன்னால் போதும்  நமக்கு தேவையான  உதவிகள் கிடைக்கும். ஆயிரம் ஆயிரம் சாக்கிய உயர் அதிகாரிகள் சம்பளம் வாங்கிட்டு அரசு வேலை பார்க்காமல் சமூக வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.  இன்னைக்கு ஜாதி இந்துக்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டு இருக்கும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ராமசாமியால் உருவாக்கப்பட்டது அல்ல. படித்த பட்டம் பெற்ற அரசு வேலை செய்யும் சாக்கிய மக்களின் சாதனை. அரசு போடும் திட்டங்களை ஆய்ந்து அதற்கு உடனைடியாக மறுப்பு தெரிவித்து புதிய கொளகைகளை உருவாக்குவதற்கு காரணமாக இருப்பவர்கள் படித்து பட்டம் பெற்ற அரசு ஊழியர்களே. தமிழ் நாட்டில் வேலையை வாங்கிட்டு தமிழ் தேசியம் திராவிடம் பேசிட்டு இருக்கும் சொறியன்களை  சொல்லவில்லை. நாடு முழுதும் அண்ணல் அம்பேத்கர் பெயரில் இயங்கி கொண்டு இருக்கும் சாக்கிய மக்களை சொல்கிறேன். அகில இந்திய அளவில் பி எஸ் பி மாநில அளவில் வி சி கா போன்ற கட்சிகளுக்கு பின்னாலும் ஆயிரம் ஆயிரம் அரசு ஊழியகள் உள்ளனர். 
 இன்னைக்கு சாக்கிய மக்களுக்கு தனி திட்டம் என்று அரசு தீர்மானம் நிறைவேற்றவுள்ளது. இப்படி தொடர்ந்து உயர் பதவிகளில் உள்ள சாக்கிய மக்களின் சாதனைகளை சொல்லலாம். அண்ணலின் பெயரில் உள்ள  இயக்கத்தை இந்த அறுபது ஆண்டுகள் கட்டி காத்து வருபவர்கள் இந்த சமூகத்தில் உள்ள படித்த உயர் பதவியில் உள்ளவர்களே. ஒரு சமூகத்தில் படித்தவர்கள், முன்னேறியவர்கள் தனது சமூக நலனுக்கு ஆற்றும் கடமையை  மற்ற சமூகத்தை விட அதிகமாகவே சாக்கிய  மக்கள் செய்து உள்ளனர். முன்னேறிக்கொண்டு இருக்கும் இந்த சமூகத்தை தடுக்க தொடர்ந்து எதிர் பிரச்சாரம் செய்து கொண்டு இருப்பது தான் சூத்திர அரசியல்.  தனியார் துறை எதிர்ப்பு அந்நிய முதலீடு எதிர்ப்பு என்று நாங்க  வெங்காய வேதாந்தம் பேசிட்டு இருந்தால் எங்களுக்கு  ஒரு மண்ணும் கிடைக்காது. நாடு வேகமாக மாறிக்கொண்டு இருக்கிறது அந்த வேகத்தில் நாங்கள்  போக வேண்டும். அமெரிக்கன் வந்துடுவான் ஆப்ரிக்கன் வந்துடுவான்னு நாங்க  கவலை பட எங்களுக்கு நேரமில்லை. உலகமயமாக்கல் வந்த போது  நம் நிலை என்னவாகும் என்று யோசித்தவர்கள் எல்லாம் இன்று வாயில் கை வைத்து சுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த பதினைந்து வருடங்களில் சாக்கிய மக்கள் சூத்திர ஆண்டைகளின் கைகளை எதிர் பார்க்காமல் சுதந்திரமாக பொருள்  ஈட்டும் நிலைக்கு வந்து உள்ளனர். இன்று அந்நிய முதலீடு என்று சொன்னவுடன அதை ஆதரிக்க தயார் அதற்கு பதில் எங்களது இட ஒதுக்கீட்டு உரிமைக்கு ஆதரவு அளிக்க தயாரா என்று அரசை  நிர்பந்த படுத்தி எமது உரிமையை பெற்றதே சாக்கிய அரசியல். அதை விட்டு விட்டு நாட்டை காக்கிறேன் நான் இந்திய தேசியவாதி தமிழ் தேசியவாதி என்று வியாக்கானம் பேசிக்கொண்டு இருந்தால் இருக்கிற கோமணம் கூட எங்களுக்கு மிஞ்சாது. அரசு துறையை காப்பற்றுவது தனியார் துறை வராமல் தடுப்பது அந்நிய முதலீடு இல்லாமல் பாதுகாப்பது இதை எல்லாம் தமிழ் தேசிய வாதிகளும் இந்திய தேசிய வாதிகளும் செய்வார்கள், எங்களுக்கு எங்கள் உரிமைகளை பெறுவதே பெரிய வேலை இதில் நாங்கள் உங்கள் வேலைகளை செய்து கொண்டு இருக்க முடியாது. நாங்கள் தனியார் துறையை அந்நிய முதலீட்டை எதிர்க்கும் நிலையில் அதை வீழ்த்தும் நிலையில் இல்லை. அது எங்கள் கையை மீறிய செயல். ஆனால் எங்கள் உரிமைகளை அங்கு பாத்து காத்துக்கொள்ளலாம். இப்பது உயர பதவிகளில் இடம், தனி திட்டம், தனியார் துறையில் இட ஒதுக்கீடு, அடுத்து இந்திய உள் நாட்டு முதலீடுகளில் எங்கள் பங்கு கேப்போம். இன்னைக்கு இந்த சமூகம் மிக வேகமாக முன்னேறி வருவதை பார்த்து வயிறு எரியும் கூட்டம் அவர்களை கேவலப்டுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த சமூகத்தில் முன்னேறிய மக்களும் அவர்கள் தங்கள் சமூகத்துக்கு தங்கள் கடமை செய்து கொண்டு தான் இருக்கிறாகள். சாக்கிய இயக்கம் என்பது பல் வேறு நிலைகளில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. 

No comments:

Post a Comment