Tuesday, December 18, 2012
டெல்லி மும்பை சென்னை இங்கதான் ஈவ் டீசிங்குல பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகம் இருக்காம். பாதிக்கபடும் பெண்கள் எல்லாம் உயர்குல பெண்களாம். நகரங்களில் வீட்டு வேலை செய்யும் சேரி பெண்கள் பெரும்பாலும் போலிசுக்கு போவதில்லை போனாலும் அஞ்சொ பத்தோ வாங்கிட்டு போமா என்று போலிசு அனுப்பி வைத்துவிடும். ஆனால் இந்த உயர் குலத்து பெண்கள் கேசு கொடுப்பதெல்லாம் யாருன்னு பார்த்தா கருப்பா "அசிங்கமா" போட்டுக்க நல்ல துணி இல்லாம காரு, பைக்குன்னு இல்லமா பஸ்ஸில் பயணம் செய்யும் வாலிபர்கள். போலீசுல கேச கொடுத்ததும் அவன் சேரி பையனா இருந்தா நம்ம போலிசுங்க தேடி போயி பிடிச்சு வந்து முட்டிக்கு முட்டி தட்டி கேசை ஊர்ஜிதப்டுத்தி விடும். உன் மூஞ்ஜிக்கு ஐஸ்வர்யா ராய் கேக்குதான்னு சொல்லி சொல்லி அடி அடின்னு அடிப்பாங்க. நம்ம பசங்க எல்லோரும் நல்லவங்க அவங்க மேல அபாண்டமா பழிய போடுறாங்கன்னு சொல்ல வரல. அது என்ன செவப்பா காருல பைக்குள போற பசங்க மேல மட்டும் யாருமே ஈவ் டீசிங் கேசுல கம்ப்லைண்டே கொடுக்க கொடுக்க மாட்டுராங்கலா இல்லை போலிசு அந்த கேசை எடுக்க மட்டுதான்னுதான் கேள்வி. டெல்லி போன்ற இடங்களில் உள்ள பல்கலைகழகங்களில் நம்ம "உயர் குல" பொண்ணுங்க ஜெண்டர் சென்சிடிவேன்னு ஒன்னு வச்சுக்கிட்டு தலித் பசங்களும் தலித் டீச்சர்களும் மாட்டுனா அவுங்க வாழ்க்கையையே அழித்த வரலாறுகள் உள்ளன. பெண் உரிமை பேசுங்க வேணாம்னு சொல்லுல அதை தலித் மக்களுக்கு எதிராக பயன்படுத்தி பழி வாங்காதீர்கள் என்று தான் சொல்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment