Friday, December 21, 2012

தினம் தினம் சுடுகாட்டில் பினங்களை பார்த்து உடலும் உள்ளமும் மரத்துப்போன வெட்டியார பறையரிடம் என்னைக்கோ ஒரு நாளைக்கு பிணத்தை தூக்கி வரும் ஜாதியாரு கேக்குறாரு. நான் பிணத்தோடு வந்து நிக்குறேனே உனக்கு உணர்ச்சியே இல்லையா? என்னோடு சேர்ந்து நீயும் அழமாட்டியான்னு. அது போலத்தான் இருக்கிறது டெல்லி பாலியல் பலாத்காரத்துக்கு குரல் கொடுக்க சொல்லும்  "ஜாதி" இந்து பெண்களின் குரல். தினம் தினம் பாலியல் பலாத்காரத்தால் நொந்து நூலாய் போன சாக்கிய (தலித்) பெண்களிடம் வாருங்கள் ஒன்றாய் சேர்ந்து டெல்லி பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக குரல் கொடுப்போம் என்கின்றனர் "ஜாதி"  இந்து பெண்கள்.

No comments:

Post a Comment