Wednesday, December 26, 2012

அவர் என் கையை "தொட்டாரு" பக்கத்துல உக்காந்து சாப்பாட்டை "பரிமரினாறு" எங்க அப்பா கூட அப்படியெல்லாம் எனக்கு செய்தது இல்லை. நாங்க இரண்டு பெரும் உக்காந்து ஓட்டுக்கள் எப்படி பரிமாறப்பட்டது என்று பேசினோம். எங்கெல்லாம் உங்கள் ஒட்டு எங்களுக்கு விழுந்து இருக்கிறது எங்கள் ஒட்டு உங்களுக்கு விழுந்து இருக்கிறது என்றெல்லாம் அவர் சொன்னார். ஆனால் நாங்கள் இரண்டு பெரும் ஜாதி அரசியல் எல்லாம் பண்ணலை. அவர் தமிழ் குடி தாங்கி நான் எழுச்சி தமிழர். அப்படின்னா உங்க ஒட்டு எங்க ஓட்டுன்னு நீக்க பேசிட்டு இருந்தது எதை பத்தி? கேக்கறவங்க கேனையன்னா கேப்பையில நெய் வழியுதுன்னு சொன்னாங்கலாம். பறையர்கள் ஒட்டு தான் திருமாவை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. பறையர்கள் திருமாவை கை விட்டால் எந்த ராமசாமியும், பிரபாகரனும், மூப்பனும், கருனாநிதியும், ராமதாசும் திருமாவை அஞ்சு பைசாவுக்கு கூட மதிக்க மாட்டார்கள். அரசியலில் உங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனில் ராமசாமி பிரபாகரன் என்று சொல்லி திராவிடத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் ஜிங் ஜக்கா போடுவதை விட்டு விட்டு சேரிக்குள் அடைக்கலம் தேடுங்கள். உங்கள் தமிழ் தேசிய அரசியல் ஆட்டம் கண்டுள்ளது சாக்கிய மக்கள் உங்களை விட்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்பது ராமதாசுக்கு புரிய ஆரம்பித்து விட்டது. அடுத்து கருணாநிதிக்கு புரியும்போது நீங்கள் அவுட்.

No comments:

Post a Comment