Thursday, December 13, 2012

நாம் எப்போதெல்லாம் எழுச்சியோடு போராட்ட களத்தை அமைக்கிறோமோ அப்போதெல்லாம் நம்மை ஒடுக்கும் ஜாதி இந்து கூட்டம். ஆயிரம் வருடங்களாக நமது அடையாளத்தை இழித்தும் பழித்தும் வந்தனர். நாம் நம்மை பற்றி கேவலமாக தாழ்வாக நினைக்கும் ஒரு உளவியலை உருவாக்கி வந்தவர்கள் தற்போது அதே உளவியல் ஒடுக்கு முறையை திராவிட தமிழ் தேசியம் ஜாதி ஒழிப்பு எனும் பெயரில் செய்து வருகின்றனர். நான் பறையன் நான் பள்ளன் நான் சக்கிலியன் என்று நம் சாக்கிய சமூக மக்கள் தங்கள் அடையாளத்துடன் ஒடுக்கு முறைக்கு எதிராக கொடுக்கும் குரலை நசுக்க இவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் திராவிடம் தமிழ். கிராமங்களில் ஆயுதம் ஏந்தி நம்மை ஒடுக்கிக்கொண்டு இருக்க்கும் இவர்கள் தங்களை நடு நிலையாளர்கள் என்று சொல்லிக்கொண்டு உளவியல் ரீதியாக நம்மை ஒடுக்கிக்கொண்டு இருக்கின்றனர். பறையன் பள்ளன் சக்கிலியன் என்று சொல்லுவதை ஜாதிய வாதம் போல திரிப்பதோடு பள்ளருக்கு எதிராக பறையரையும் பறையருக்கு எதிராக சக்கிளியரையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர். ராமசாமியை ஏற்றுக்கொண்டால் ஜாதி ஒழிப்பாளர்கள் நடு நிலையாளர்கள் என்றும் அவரையும் அவரது திராவிட சூத்திர அரசியலை எதிர்த்தால் ஜாதிய வாதிகள் என்றும் முத்திரை குத்துகின்றனர். நமது மக்கள் இந்த சூத்திர ஜாதி திரவிடர்கள் நடத்தும் உளவியல் ஒடுக்கு முறையை புரிந்து அவர்களின் இந்த ஒடுக்கு முறைக்கு எதிராக சாக்கிய (தலித்) அடையாளத்தை கட்டமைப்பது அவசியம்

No comments:

Post a Comment