Sunday, December 16, 2012


நமக்கான அமைப்பு நமக்கான இயக்கம் நமக்கான அடையாளம் நமக்கான தனிதொகுதி நமக்கான குடியிருப்பு நமக்கான (சாக்கிய)தம்மம்  நமக்கான உரிமை நமக்கான (அரசியல் சமூக பொருளாதார) பங்கீடு  என்று போராடியவர் அண்ணல் பண்டிதர் தாத்தா. நமது அரசியல் என்பதே இந்துக்களின் (தமிழர்களின்/ திராவிடர்களின்) அங்கம் என்று நம்மை அதில் அடுமை படுத்தி விடாமல் தடுத்து  நிறுத்துவதே. இங்க ஒருத்தர் என்னடான்னா நாம் நம்மை தனிமை படுத்திக்கொள்கிறோமாம். இவர் நம்மை ஜாதி இந்துக்களுடன்  இணைக்க  தமிழ் தேசிய அரசியல் நடத்துகிறாராம். மேடையில் உள்ள ஒன்னு ரெண்டு ஜாதி இந்துக்களை காட்டி என் கட்சியில் ஜாதி இந்துக்கள் உள்ளனர் அதனால் நாங்கள் தமிழ் தேசிய கட்சி என்று சொல்லும் திருமா, அவர் கட்சியில் எத்தனை ஆயிரம் ஜாதி இந்துக்கள் உள்ளனர். எத்தனை ஊர் தெருக்களில் அவரது கட்சி கொடி  பறக்கிறது என்று காட்ட முடியுமா. எங்களுக்கு தமிழ் தேசியம் தேவை இல்லை. ஜாதி தமிழர்களுக்கு சமத்துவத்தை சமதர்மத்தை மனித உரிமை மனித நேயம் போதிக்கும் சாக்கியம் தேவை படுகிறது. நாங்கள் பத்து கோடி தமிழர்களுடன் தமிழர்களாக இணைய தேவை இல்லை. முப்பது கோடி (ஆசிய முழுக்க உள்ள சேரி வாழ் மக்களின் மக்கள் தொகை) சாக்கியர்களுடன், தமிழர்கள் இணைந்து கொள்ள தயாரா? என்று கேட்கிறோம். நாங்கள் தனிமைப்பட்டு இருக்கவில்லை உலக தமிழர்களை விட மூன்று மடங்கு அதிக மக்கள் தொகை கொண்டவர்கள் நாங்கள். நாங்கள் சிறு பான்மையினர் என்றால் தமிழர்கள் எங்களை விட சிறிய கூட்டமே. சிதறடிக்கப்பட்டு உள்ள நாங்கள் ஒன்று கூடினால் மூன்று தமிழ் நாட்டுக்கு சமம். நாங்கள் தனிமை பட்டு விடக்கூடாது என்று ஒப்பாரி வைக்கும் திருமாவே  என் சமூகத்தை மொழியின் பெயரால் பிரித்து என் மக்களையே எனக்கு அந்நியனாக ஆக்காதே எங்களை தனிமை படுத்தாதே. எங்களுக்கு ஒன்று என்றால் வட நாட்டில் உள்ள கருநாடகத்தில் ஆந்திராவில் பஞ்சாபில் உள்ள என் மக்களுக்கு துடிக்கும் மராட்டிய மாநிலத்தில் பிறந்த அண்ணல் வாங்கி கொடுத்த உரிமைகளும் பிகாரில் பிறந்த பாபுஜி ஜெகஜீவன்ராம் உருவாக்கிய வண்கொடுமை தடுப்பு சட்டமும் சகோதரி மாயாவதி போராடிக்கொண்டு இருக்கும் உயர்பதவி மசோதாவும்தான் என் மக்களை விடுவிக்குமே ஒழிய உங்கள் ராமசாமியின் திராவிடமும் பிரபாகரனின்  தமிழ் தேசியமும் எம்மை விடுவிக்காது. மேடையில் நான் தலித் இல்லை பறையன் இல்லை தமிழன் என்று சொல்லிக்கொண்டு தேர்தல் வரும்போது பறையன் என்று அரசு சன்றிதழ் கொடுத்து இடஓதுக்கீட்டு தொகுதியில் நிற்பதை விட்டு விட்டு தமிழர்களுக்கான பொது தொகுதியில் நின்று டெபாசிட் வாங்கி காட்டுங்கள். அப்போது ஒத்துக்கொள்கிறோம். நீங்கள் எழுச்சி தமிழர் என்று. வாழுவது சாக்கிய  தலைவர்கள் சாக்கிய இயக்கங்கள் போட்ட பிச்சையில் ஜால்ரா அடிப்பது தமிழ் தேசியத்துக்கும் திராவிடத்துக்குமா.    

சு ப வீ தமிழ் தேசிய வாதிகளிடம் கேட்கிறார். தர்மபுரியில் சாக்கிய மக்களின் வீடுகளை கொளுத்தியவர்கள் வெளி மாநிலத்தவர் இல்லை தமிழர்கள்  தான்  அதைதான் இவரிடம் நாங்கள் கேட்கிறோம். தர்மபுரியில் சாக்கியர்களின் வீடுகளை கொளுத்தியவர்கள் ஆரியர்கள் இல்லை திராவிடர்கள் தான். 


செல் போன கண்டு புடிச்சு கொடுத்த தமிழ் கூட்டம் சொல்லுது ஹலோவ் என்பது தமிழ் வார்த்தை இல்லையாம். இவனுங்க கொடுமைக்கு அளவே இல்லையா பாஸ்? 

No comments:

Post a Comment