Monday, December 10, 2012

"உள் இட ஒதுக்கீடு"  எனும் பெயரில் இட ஒதுக்கீட்டு உரிமையை கொச்சை படுத்திக்கொண்டு இருக்கும் திராவிட இயக்கங்கள், கம்யுநிஸ்ட் இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள் அனைத்தும் தலித் விரோதிகளே. அவர்களது உண்மையான நோக்கம் அருந்திய மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவது அல்ல இட ஒதுக்கீட்டை கொச்சை படுத்துவதும் மற்ற தலித் மக்களை கேவலப்படுதுவதுமே. இட ஒதுக்கீட்டு உரிமை என்பது நாம் போராடி வெள்ளை காரனிடம் இருந்து பெற்றது. இந்த சோ கால்டு நடுநிலை வாதிகளும் ஜனநாயக வாதிகளும் அன்றும் நமக்கு எதிரிகள் இன்றும் நமக்கு எதிரிகள். நம்மை ஒழிக்க இப்போது அவர்கள் புதிதாக போட்டிருக்கும் வேடமே அருந்ததிய பாசம். நாம் அருந்ததியர்களின் உரிமைகளை மதிக்கிறோம். அருந்ததிய மக்களின் உரிமைகள மட்டும் அல்ல அனைத்து தலித் மக்களின் உரிமைகளையும் கொள்ளை அடித்து வைத்துள்ள இந்த கூட்டம் தமது திருட்டை மறைக்க நம் மீது பழியை போட்டுக்கொண்டு இருக்கிறது. தலித் மக்கள் இதுவரை தங்களது உரிமைகளை முழுமையாக பெற்றதாக சரித்திரம் இல்லை. பேருக்கு 18% என்றாலும் அவை இது வரை முழுமையாக அவரகள் அனுபவித்தது இல்லை என்பதே வரலாறு. பெரும்பான்மையான துறைகளில் இடஒதுக்கீடு 10% கூட இதுவரை பூர்த்தி செய்யவில்லை. இந்த லட்சனத்தில் இட ஒதுக்கீட்டு மூலம் பறையர்களும் பள்ளர்களும் பயன் அடைந்து விட்டார்கள் அருந்ததியர்கள் பயன் அடைய வில்லை என்று கூறி பறையரையும் பள்ளரையும் பழி வாங்க திராவிட சூத்திர கூட்டம் பிரச்சாரம் செய்து கொன்டு இருக்கிறது. நமது மக்களும் அவர்களின் பிரச்சாரத்தில்  மயங்கி ஆமாம் நாம் பயன் அடைந்து விட்டோம் அருந்ததியர் தான் பயன் அடையவில்லை என்று சொல்லி ராமசாமிக்கு வீர வணக்கம் கருணாநிதிக்கு வீர வணக்கம் வீர மணிக்கு வீர வணக்கம் கொளத்தூர் மணிக்கு வீர வணக்கம் என்று கூஜா தூக்கி கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து நமது வயிற்றில் அடித்து வரும் இந்த திராவிட கொள்ளை கூட்டத்தை அடையலப்படுத்துவோம் நமது உரிமைகளை மீட்டெடுப்போம் 

No comments:

Post a Comment