Wednesday, December 12, 2012

 முன்ன வந்தா முட்டுது பின்ன வந்தா உதைக்குது. நாம் தலித்துக்கள் என்று தலித் ஒற்றுமை பேசினா நான் தலித் அல்ல என்னை பறையனோடு சேர்க்காதே நான் மள்ளன், மறவர் கள்ளர் போல ஆண்ட பரம்பரை என்கின்றனர் சிலர். நான் தலித் அல்ல என்னை சக்கிலியரோடு இணைத்து பேசாதே அவர்கள் தெலுங்கு காரர்கள் நாங்கள் தூய தமிழர்கள் என்கின்றனர் வேறு சிலர். எதுக்குடா வம்பு என்று நாம் பறையர் என்று பறையர் ஒற்றுமை பேசினால் அருந்ததியரை பிரித்து பார்க்கும் ஆதிக்க மனோ நிலை பறையர் சந்தர்ப்ப வாதிகள் என்கின்றனர் மற்றும் சிலர். யார் இந்த சிலர் இவர்களுக்கு உண்மையிலே பள்ளர்கள் பறையர்கள் அருந்ததியர்கள்  மீது அக்கறை உண்டா என்று அலசிப்பார்த்தால் உண்மை தெரியும்.   இவர்களுக்கு சாக்கிய குடிகளான பள்ளர்கள் பறையர்கள் அருந்ததியர்கள்  மீது எந்த அக்கறையும் இல்லை. இவர்கள் ராமசாமிக்கும் பிரபாகரனுக்கும் விசிறிகள்,  திராவிடத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் பினாமி வேலை பார்ப்பவர்கள். உண்மையில் சாக்கிய குடிகள் மீது ஆக்கரை உள்ளவர்கள் தங்களது அரசியலில் தெளிவாக உள்ளார்கள். பள்ளர்கள் ஒற்றுமை  பறையர்கள் ஒற்றுமை  அருந்ததியர்கள் ஒற்றுமை என்று அவர்கள் களம் அமைத்து போராடினாலும் சாக்கியர் ஒற்றுமை என்று  ஒருங்கிணைத்து போராடினாலும் அவர்கள் உயிர் மூச்சு உலகம் முழுக்க உள்ள முப்பது கோடி சாக்கிய மக்களின் விடுதலைக்கானதாகவே உள்ளது. இவர்களின் மனதில் அண்ணல் அம்பேத்கரும் அவர் காட்டிய தம்ம வழி பாதையுமே அலை மோதிக்கொண்டு இருக்கிறது. 

No comments:

Post a Comment