Monday, December 17, 2012

எங்களுக்கு அந்த அசிங்கம் பிடிச்ச ஜாதி கூட்டத்து பொண்ணுங்க பையனுக எல்லாம் வேண்டாம். கருமம் புடிச்ச கோயில் நாத்தம் புடிச்ச கருவறை நுழைவு வேண்டாம். சமத்துவம் பேசும் ராமசாமி வம்சமே! நாட்டில் உள்ள அசையும் அசையா சொத்து நிலம் புலம் வீடு வாசல் எல்லாத்தையும் பொதுவா ஆக்கிடுங்க அப்புறமா ஜாதி ஒழிப்பு பேசுவோம். இட ஒதுக்கீடு சமத்துவமா இல்லையான்னு பேசுவோம். எல்லாத்தையும் கொள்ளை அடித்து பட்டா போட்டு வைத்துக்கொண்
டு நாங்க திறமை இலாதவர்கள் என்று பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். எல்லாம் இழந்த நிலையிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். திறமை இல்லாமலா இட ஒதுக்கீட்டு உரிமை வங்கி வைத்துக்கொண்டு அதை இத்தனை ஆண்டுகள் பேணி காத்து வருகிறோம். எங்களிடம் உள்ள சில புறம்போக்குகள் மாதிரி நாங்கள் பறையன் இல்லை தலித் இல்லை சாக்கியன் இல்லை நாங்கள் ஹிந்துக்கள் திராவிடர்கள் தமிழர்கள் நாங்கள் பொது நீரோட்டத்தில் கலக்கிறோம் என்று போயிருந்தால் இருக்கிற உரிமையும் போயிருக்கும். அறிவு சார்ந்த திறமை சார்ந்த எமது சமூக மக்கள் தனது அடையாளத்தை விடாமல் தொடர்ந்து போராடி வருவதாலும் உழைத்து வருவதாலும் தான் இந்த உரிமைகள் எங்களுக்கு நிலைத்து இருக்கிறது. எங்களுக்கு திறமை இருப்பதால்தான் எங்கள் முன்னேற்றத்தை பார்த்து நீங்கள் கதறிக்கொண்டு இருக்கிறீர்கள்.

No comments:

Post a Comment