Monday, December 17, 2012

இந்திய பாராளுமன்றத்தில் ஆதிக்க ஜாதி வெறியர்களை தொடை நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறார் அன்னை மாயவதி. இங்கு தமிழ் நாட்டில் தொடை நடுங்கி கொண்டு தமிழ் தேசியத்துக்கும் திராவிடத்துக்கும் ஒத்து ஊதிக்கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். பாராளுமன்றத்தில் இட ஓதிக்கீட்டு உரிமை சாக்கிய மக்களுக்கான தனி திட்டம் என்று மசோதாக்கள் நிறை வெறிக்கொண்டு இருக்கின்றன. ஆந்திராவில் கூட சாக்கிய மக்களுக்கான தனி திட்டம் பற்றிய மசோதா ஒன்று நிறை வேற்றப்பட்டு உள்ளது. பாராளுமன்றம் போனால் பேச முடியவில்லை அங்கு எல்லோரும் இந்தி பேசுகிறார்கள் என்று நொண்டி சாக்கு. தமிழ் நாட்டில் எதை புடுங்கி எங்கு நட்டு கொண்டு இருக்கிறீர்கள். இருக்குற உரிமையே முழுமையா கிடைக்கல இதுல ஒரு தேங்கா மட்டை எல்லாத்தையும் பறையர்களே கொள்ளை  அடிக்கிறார்கள் என்று  சொல்லி நமக்கு பட்டம் கட்டி சூத்திர அரசியல் பண்ணுவார் அவருக்கு சமத்துவ பெரியார் என்று பட்டம் கட்டி ஜால்ரா தட்டுவார்கள். மத்தியில் இருந்து பணம் அனுப்பி வீடு கட்டி கொடுக்க சொன்னால், நமக்கு வீடு கட்டி தனி குடியேற்றம் அமைத்து கொடுக்காமல் சமத்துவபுரம் எனும்  பெயரில் அவர்களே வீடு கட்டிக்கொள்வார்கள். யாரு பணத்துல யாருக்கு வீடு. சமத்துவபுரம் கட்டி ஜாதிய ஒழிக்கிறாங்கலாம். இத நம்ம அதிகாரிகள் கேள்வி கேட்டா அவுங்களை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு  நாரடிப்பர்கள். இட ஒதுக்கீட்டில் இவர்கள் பூர்தி செய்வது 3% முதல் 5%. ஐந்தாண்டு திட்டத்தில் மத்தியில் இருந்து வரும் பணத்தை செலவு செய்யாமல் ஒன்னு திருப்பி  அனுப்புவது இல்லை சமத்துவபுரம் போன்ற டுபாக்கோரு திட்டம் போட்டு இவர்கள் வீடு கட்டி கொள்வது. வரும் பணத்தில் ஆதி திராவிடர்  வெல்பர் போர்டு மாதிரி நாலு போர்டு அமைக்கலாம். ஆதி திரவிடர், மள்ளர், அருந்ததியர், மற்ற சமூகத்தினருக்கு  என்று எல்லோருக்கும் தனி தனி துறைகள் மந்திரிகள் வாரியங்கள் அமைத்து திட்டம் போடலாம். அதை எல்லாம் செய்யாமல் உள் இடஒதுக்கீடு என்று திருட்டு அரசியல் செய்யும்  கூட்டதை போற்றி பாடி அவர்கள் காலடியில் விழுந்து கிடக்கிறது இந்த கூட்டம். அனைவருக்கும் அர்ச்சகர் ஆக உரிமை வழங்கி மிகப்பெரிய புரட்சி செய்து விட்டார் என்று ஜால்ரா தட்டிக்கொண்டு இருக்கிறது இந்த கூட்டம். அர்ச்சகராகி தேங்கா மட்டை உரிக்கவா? அர்ச்சகன் எல்லாம் அவன் புள்ளைய கம்ப்யுடர் படிக்க வச்சு அமெரிக்கா அனுப்பிச்சுகிட்டு இருக்கான். கருணாநிதியும் அவரது அரசும் நம்க்கு வேண்டிய எல்லாத்தையும் செய்து கொடுத்தார்கள் மீண்டும் அவரது ஆட்சியை அமைப்போம். ப்புறம் எதுக்கு அப்பு இந்த இரட்டை குழல் துப்பாக்கி அரசியல் கலைச்சிட்டு தி மு காவில் சேர்ந்து விடலாமே. தமிழக அரசியலில் எங்களுக்காக என்ன சாதித்தீர்கள் என்று கேட்டால் அடங்க மறு அத்து மீருன்னு சொல்லி கொலை வெறியன் பிரபாகரன் வழியில் ரவுடிகளை உருவாக்கி விட்டு இருக்கிறோம் என்று பெருமை படுகிறார்கள். இவுங்க  வாய் சவடாலாட்டால் கொலை வெறி கும்பல் ஒட்டு மொத்த  சாக்கிய சமூகத்துக்கு ஒழுக்கம் அற்றவர்கள் என்று பழி போட்டு கொண்டு   இருக்கிறது. 

No comments:

Post a Comment