Saturday, December 15, 2012

ஐயப்பன் பக்தர்களாவது வருசத்துக்கு 48 நாட்களுக்கு கொல்லாமை விரதம் காக்க புலால் உண்ணாமல், மது அருந்தாமல், திருடாமல், பொய் சொல்லாமல், காமத்தை கட்டுப்படுத்தி மனதை தூய்மை படுத்தி தம்மத்தை கடை பிடித்து வருகின்றனர். அய்யப்பன் புத்தன் என்பதும் வருடத்துக்கு மூன்று மாதங்கள் உலக வாழ்க்கையை ஒதுக்கி மனதை தூய்மை படுத்தி மெய் பொருளை நாடும் பணியில் ஈடுபடுவது சாக்கியர்களின் பூர்வீக கலாச்சாரம். ஆனால் தமிழ் தேசியம் திராவிடம் என்று பேசி அலையும் நாத்திக கூட்டம் சாராய கடைகளிலும் விபச்சார விடுதிகளிலும் செட்டி நாடு மாமிச கடைகளிலும் உட்கார்ந்து கொண்டு மத ஒழிப்பு பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றனர். முதலில் புத்தர் காட்டும் பஞ்ச சீலத்தை கடை பிடியுங்கள் அப்புறமா போய் மதத்த ஒழிச்சி புரட்சி பண்ணலாம்.  

No comments:

Post a Comment