Monday, December 24, 2012

ராமசாமி பேசிய திராவிட நாடும் இவுங்க பேசுற தமிழ் தேசியமும் ஒன்னாம். கடை கோடியில் காஷ்மீரில் என்னை போலவே சேரியில் ஜாதி இந்து வெறியர்களால் அல்லல்படும் என் சகோதர சகோதரிகளை அந்நியப்படுத்தும் அந்த ராமசாமியின் தனி திராவிட  நாட்டு கொள்கையும் இப்போது சில குரங்கு கூட்டங்கள் பேசிக்கொண்டு இருக்கும் தமிழ் தேசியமும் சாக்கிய (தலித்) மக்களின் ஒற்றுமைக்கு எதிரானதே. திராவிடமும் தமிழ் தேசியமும் ஆண்டைடைகள் நமது எழுச்சியை அழிக்க பயன்படுத்தும் ஆயுதங்கள். பல மொழி பேசினாலும் பாப்பான் பாப்பனாக இருக்கிறான். அவனுக்குள் ஒரு ஒற்றுமை இருப்பதால்தான் அவன் ஜெயிக்கிறான். நாம் மொழி மதம் இனம் எனும் பெயரில் சிதறடிக்கப்பட்டு உள்ளோம். நம்மை இணைக்கும் ஒரே அடையாளம் நாம் சேரி மக்கள் என்பதே. எங்கெல்லாம் சேரிகள் உள்ளதோ அங்கெல்லாம் இருப்பது நமது மக்களே. நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர்  தந்தை சிவராஜ் சொன்னார். தாங்க்ஸ் காட் எதிராளிகள் நம்மை இது நாள் வரை தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தினார்கள். அதுதான் நமது சமூகத்தின் அடையாளத்தை இது நாள் வரை காத்து இருக்கிறது என்று. அந்த அடையாளத்தை கூறு போட நினைக்கும் எந்த அண்ணனாக இருந்தாலும் அதை நாம் அனுமதிக்க மாட்டோம். தமிழ் தேசியம் என்பது சாக்கிய ஒற்றுமைக்கும் சாக்கிய அரசியலுக்கும் எதிரானது. அது மனிதரை கூறு போடும் ஒரு கொடிய அரசியல் விலங்கு

No comments:

Post a Comment