Sunday, December 30, 2012

சாக்கிய சமூகம் எவ்வளவோ கொடுமைகளுக்கு இடையிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது;  அதற்க்கு காரணம் இந்த சமூகம் காத்து வந்த சகிப்பு தன்மையே. அவர்களுக்கு வன்முறை வாழ்வியல் இல்லை. அவர்களுக்கு பிரபாகரன் வழி காட்டி இல்லை. அவர்கள் வாழ்க்கை தம்மத்தை அடிப்படையாக கொண்டது. அவர்கள் வாழ்வு பகுத்தறிவை அடிப்படையாக கொண்டது. அவர்களின் வழி காட்டிகள் புத்தர், வள்ளுவர், பண்டிதர், அண்ணல். வாருங்கள் சாக்கியர்களே புத்தரையும் அவரது தம்மத்தையும்  சேரிகளுக்கு கொண்டு செல்வோம். 
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு, வன்கொடுமைகளில் இருந்து பாது காக்க தனி சட்டம், பொருளாதார மேம்பாட்டுக்காக தனி திட்டம்,  என்று கேட்டு நாடு முழுதும் போராடிக்கொண்டு இருகிறோம். சில வெளக்கெண்ணை வெங்காயங்கள் நமது அடையாளத்தை கழுவருக்க திராவிடம் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறது. அடையாளத்தை விட்டு விட்டு அம்போன்னு நின்னா பழைய மாதிரி கழுத்தில் பறையையும் கையில் துடைப்பத்தையும் கொடுத்து மீண்டும் சேரிக்கு அனுப்ப ஆண்டடைகள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். உரிமைகளை காக்க அடுத்த தலைமுறையும் தலை நிமிர்வோடு வாழ நமது முன்னோர்கள் நமக்காக வென்றெடுத்த அடையாளத்தை காப்போம். பொது நீரோட்டம் பேசும் கூ முட்டைகளிடம் நம்மை திராவிட தமிழ் தேசிய பண்ணையார்களிடம் வியாபாரம் பேசிக்கொண்டு இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருப்போம் 

Saturday, December 29, 2012

தமிழ் நாடு முழுக்க சாக்கிய சேரிகளில் உள்ள பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து பயன்பெறும் வகையில் புத்தரை பற்றிய கட்டுரை போட்டிகள் நடத்த திட்டமிட்டு உள்ளோம். மாவட்ட அளவில் சிறந்த கட்டுரை எழுதும்  மாணவ  மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் கேடயமும் வழங்கப்படும். தமிழ் நாடு அளவில் எழதப்படும் சிறந்த கட்டுரைக்கு ரூபாய் ஐயாயிரமும் கேடயமும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று அண்ணல் அம்பேத்கரின் மணிமண்டபத்தில் நடத்தப்படும் விழாவில்  இந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பரிசினை பெறுவார்கள். தமிழ் நாட்டில் உள்ள முப்பாத்தி இரண்டாயிரம்  சேரிகளிலும் உள்ள சாக்கிய மாணவ மாணவியர்களும் படித்து அறிய புத்தர் வழக்கை வரலாறும் அவரது தம்ம கொள்கையும் அச்சடித்து விநியோகிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு சாக்கிய பொன்னுதுரை (Ponnu Durai) அவர்களோடு தொடர்பு கொள்ளவும். E mail : sakyagroup@yahoo.com  
தமிழகம் முழுக்க சேரிகளில்  நிறுவப்பட்டு இருந்த சாக்கிய (ஆதி திரவிடர்) சங்கங்கள் தற்போது  திரிவிட தமிழ் தேசியம் எனும் பெயரில்  நசுக்கப்பட்டு உள்ளன. மீண்டும் ஒவ்வொரு சேரியிலும் நமது சமூக கலச்சார பண்பாட்டு அரசியல் மேம்பாட்டை கட்டமைக்க சாக்கிய  (ஆதி திரவிடர்)   சங்கங்கள் நிறுவ முயற்சிகள் மேற்கொண்டு உள்ளோம். பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு சேரியிலும் நமக்கான சாக்கிய சங்கமும் புத்தர் வழிபாட்டு மையமும் அமைக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். மேலும் விவரங்களுக்கு சாக்கிய பொன்னுதுரை (Ponnu Durai) அவர்களோடு தொடர்பு கொள்ளவும். E mail : sakyagroup@yahoo.com 

Friday, December 28, 2012

உள்ளாடை விளம்பர படத்த பாத்துட்டு ஒருத்தருக்கு காம வெறி வந்து ரேப் பண்ராருன்னா  அதுக்கு காரணம் படம் இல்லை அவர் மனோ நிலை. அவரை நல்ல மனோ தத்துவ டாக்டரா பார்க்க சொல்லுங்கள். உடைய மாத்துங்கன்னு சொல்றதுக்கு பதில் மனதை மாத்துங்கள் மனதை தூய்மைபடுத்தும் முறைகளை பின்பற்றுங்கள். குறை உடைகளில் இல்லை மனதில் தான் உள்ளது. மேலாடைகளே இல்லாமல் உடைகளே கூட  இல்லாமல் இன்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அங்குள்ள எல்லோரும் காம வெறி பிடித்துஅலையவில்லையே. அங்க போகும் ஊர்மிரண்டிகள் நகரமிரண்டிகளுக்குத்தான் காம வெறி பிடித்து விடுகிறது. 
(((((((((((((((((((((((திராவிடர்கள் திராவிடம் என்பது பற்றி முதன் முதலாக ராமசாமி அவர்கள் சொன்னதல்ல.அதற்கு முன் ரெட்டைமலையாரும் அயோத்திதாச பண்டிதர் அவர்களும் முன்னேடுத்தவை என்பதை வசதியாக மறந்து பேசக்கூடாது பாசிச முனியே))))))))))))))பண்டிதரும் தாத்தாவும் திராவிடம் பேசவில்லை திராவிடத்தை எதிர்த்து ஆதி திரவிடம் பேசியவர்கள். அதைதான் நீங்கள் சாதியம் என்று முத்திரை குத்திவிட்டீர்களே. அவர்கள் நாங்கள் எப்போதும் ஆதி திரவிடர்களாகவே இருப்போம் என்று சொல்லவில்லை. மானுடம் எங்களுக்கு வேண்டும் என்றனர். ஆங்கிலேயார்களை கூட உறவாக பார்த்தவர்கள் அவர்கள்.
ஏண்டா வீட்டை கொளுத்துநீங்கன்னு கேட்டா, சாக்கிய பசங்க எல்லாம் திட்ட மிட்டு காதல் பண்ணிடுறாங்க அதான் கோபம் வந்து எரிச்சோம் என்கிறான். ஏண்டா ரேப் பண்நீங்கன்னு கேட்டா, பொண்ணுங்க எல்லாம் கவர்ச்சியா உடை அணியராங்க பாய் பிரன்டுகளோடு ராத்திரியில சுத்துராங்க அதான் கோபம் வந்துச்சு ரேப் பண்ணேன் என்கிறான். ஏண்டா கொள்ளை அடிச்சே கடத்தல் பண்ண கொலை செய்த தீவிரவாதம் செய்தன்னு கேட்டா சிங்களவன் எனக்கு ஈழ நாடு  கேட்டா தர மாட்டுறான் அதான் அப்படி செய்தேன் என்கிறான். நாயகன் படம் பாத்து கெட்டு போயிட்டாங்களோ.....இப்ப பிரபாகரன் உயிரோடு இருந்தா அவர் பேரன் கேப்பார். தாத்தா நீங்க நல்லவரா கெட்டவரா? 

Thursday, December 27, 2012

Sakya Muni: கடவுள் நம்பிக்கை தான் ஜாதி வெறிக்கு காரணம் என்று ச...

Sakya Muni: கடவுள் நம்பிக்கை தான் ஜாதி வெறிக்கு காரணம் என்று ச...: கடவுள் நம்பிக்கை தான் ஜாதி வெறிக்கு காரணம் என்று சொல்லும் பகுத்தறிவு சிங்கங்களே தமிழ் நாட்டில்  கடவுள் மறுப்பாளர்கள் தானே ஜாதி வெறியர்களாக ...
கடவுள் நம்பிக்கை தான் ஜாதி வெறிக்கு காரணம் என்று சொல்லும் பகுத்தறிவு சிங்கங்களே தமிழ் நாட்டில் கடவுள் மறுப்பாளர்கள் தானே ஜாதி வெறியர்களாக இருக்கிறார்கள். கருணாநிதியை விட வைகோ வை விட ராமதாசை விட வீரமணியை விட ஜாதி வெறி பிடித்தவர்கள் சாக்கிய சமுகத்துக்கு எதிரானவர்கள் எங்கேயும் இல்லையே? அப்புறம் எதுக்கு இந்த முட்டாள்களின் கடவுள் மறுப்பு கொள்கை நமக்கு. உடனே நீங்க கடவுளை நம்புறீங்களான்னு கேட்டு உங்கள் முட்டாள் தனத்தை நிரூபிக்க வேண்டாம். கடவுள் உண்டு என்பது ஒருவனுக்கு வியாபாரம் கடவுள் இல்லை என்பது இவனுக்கு வியாபாரம். தேவை இல்லாததை வாங்கி கொள்ளையில் போடும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை. எனக்கு நிறைய வேலை இருக்கு. 
நான் பிராமணன் தலையில் இருந்து பிறந்தவன் நான் வன்னிய குல சத்திரிய ஜாதி  ஆண்ட பரம்பரை நான் செட்டியார் கடல் கடந்து வாணிபம் செய்தவன் நான் சூத்திரன் தீண்டாத ஜாதிகளை விட உயர்ந்தவன் என்பவர்களை பார்த்து இன்று உலகம் சிரிக்கிறதோ, அது போலத்தான் ஒரு அம்பது வருஷம் கழிச்சி   ான் தமிழன் நான் திராவிடன் என்று அலையும்  இந்த ரேஸிஸ்ட்டு  கோமாளிகளை பார்த்து உலகம் சிரிக்கும். உலகம் வேகமாக போய்கொண்டு இருக்கிறது. மானத்தோடு வழனும்னு நினைக்குரவங்க  இந்த ரேசிஸ தமிழ் தேசிய திராவிட அரசியலை விட்டு வெளியேறுங்கள். 
இவர்கள் எல்லாம் ஜாதியத்துக்கு எதிரிகளாம் தமிழ் இன தேசிய வியாதிகளாம். அட வெண்ணைகளா, ஜாதி வியாதியாவது இந்தியாவுல மட்டும் தான் இருக்கு. நீங்க பேசுற "இனவாதம்" எனும் ரேஸிச வியாதி உலகம் முழுக்க இருக்கு. ஜாதியத்தை  ஒழிக்க ஜாதி ஒழிப்பு திருமணம் செய்யனும்னு கேட்கும் நீங்கள் இன பேதத்தை ஒழிக்கணும் இன ஒழிப்பு  திருமணங்கள் செய்யணும்னு கேட்பது இல்லையே. அதற்கு பதிலா இன ஒழிப்பை தடுக்கணும் இனத்தை காக்கணும் என்றல்லவா பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். ஜாதி வேண்டும் ஜாதி மறுப்பு திருமணங்கள் கூடாது எனும் ஜாதிய வாதிகளுக்கும் இனம் வேண்டும் இனம் அழிந்து விட கூடாது எனும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். வன்னியர் சங்கம், தேவர் சங்கம், திராவிடர் கழகம், தமிழ் சங்கம் இவைகளுக்கு எதாவது வித்தியாசம் இருக்கா? இதுல "வன்னி"யன்னா கேவலமாம் "தமிழர்" "திரவிடர்" என்றால் பெருமையாம். ஜாதியம்  அசிங்கமாம் ரேஸிசம் உசத்தியாம். ஜாதியத்தை ஒழித்து ரேசிஸசத்தை  இவர்கள் கட்டமைப்பர்கள். அப்புறம் ஆயிரம் வருஷம் கழிச்சி இன்னும் ஒரு அண்ணல் அம்பேத்கர் பிறந்து இந்த ரேசிஸ்ட்டுகள்  கிட்ட இருந்து நமக்கு விடுதலை வாங்கி தருவார். மானுடத்தை மண்டியிட வைக்கும் உங்கள் தமிழ் திராவிட ரேஸிசத்துக்கு சாவு மணி அடிப்போம். 
ஆம்புல புலி சிறுத்தைகள் எல்லாம் நம்ம கிட்ட  மீசைய முறுக்கிட்டு வராங்க நாம மறைந்து இருந்து தாக்குரோமாம் அதனால நாம ஆம்புல இல்லையாம். நாங்க ஆம்புல புலிகல்ன்னு சொன்னமா? தாடி மீசை எல்லாம் பெருசு பெருசா வச்சுக்கிட்டு பெண்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்த   (ராமசாமி) ஆம்புல சிங்கத்தின்   பக்த கோடிகள் ஆம்புளை இல்ல  வீரம் இல்லை வெங்காயம் இல்லைன்னு ஒரே அளப்பர. இவுங்க பெண் விடுதலை வீரர்கலாம். பாவம் அந்த கட்சியில எழிலா ஒரே ஒரு பெண் அதுவும் தலித் பெண். போற இடத்துல எல்லாம்  இவனுங்க தலித் பெண்களுக்கு எங்க முக்கியத்துவம் கொடுக்கிராணுங்க தமிழ் தேசியம் என்ற பெயரில் ஜாதி இந்துக்களை கூப்பிட்டு கூப்பிட்டு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்துட்டு இருக்கானுங்கன்னு புலம்பிட்டு  இருக்காங்க.  முதல்ல கட்சியில  இருக்கிற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுங்க நைனா. அப்புறம் முடிந்தா பெண்களை திரு நங்கைகளை  தரக்குறைவா பேசுவதை எழுதுவதை நிறுத்துங்கள். 

Wednesday, December 26, 2012

வெட்கம் இல்லாமல் திராவிடர் கழகம் தமிழ் சங்கம் நடத்தும் கூட்டங்களுக்கு போயிட்டு வருவீங்க. நாங்க பறையர் சங்கம் வச்சா நய்யாண்டி செய்வீங்க.  ஜாதி சொல்ல மாட்டீங்க ஜாதி பாக்க மாட்டீங்க. மானுடம் காக்கும் மாங்கான்னு கதை விடுவீங்க. பறையர் என்பது குறுகிய வட்டம். திராவிடர் தமிழர் என்பது என்னபெரிய வட்டமா? மானுடத்தின் அடையாளங்களா? என்னப்பா உங்க லாஜிக்கு.
தமிழ் தேசிய திராவிட நரிகளிடம் சிக்கி ஏமாறாமல் நேரடியாக சிங்கங்களோடு மோதுவோம்.......சிங்கங்களோடு கூட்டணி வைப்போம். அடுத்து வருவது சமூக நல்லிணக்க அரசியல்.  
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் திராவிடம் தமிழியம் என்று பேசிக்கொண்டிருக்கும் இந்த கூட்டம் ராமதாசின்  ஜாதி அரசியலை எதிர்க்குதாம். வன்னியர் அரசியல் என்பது தலித் மக்களுக்கு எதிரானதாக இல்லாமல் அது திராவிட தமிழ் தேசிய பண்ணைகளுக்கு எதிராக போகும்போது நாம் பாட்டாளி மக்களோடு கூட்டு சேருவோம்.  வருங்காலத்தில் திராவிடம் தமிழியம் என்று பேசி யாரும் கொள்ளை அடிக்க முடியாது. அணைத்து சமூகங்களும் தங்கள் நிலைக்காக தங்கள் அடையாளத்துடன் போராட வருவார்கள். அனைவரும் நாட்டின் வளங்களில் தங்களுகான பங்கை கேட்பார்கள். இதை ராமதாஸ் புரிந்து கொண்டார். தமிழ் தேசிய அரசியல் பண்ணிட்டு இருந்தால் வன்னியர் எல்லோரும் சீமானுக்கு பின்னால போயிட்டு இருக்காங்க என்று புரிந்து கொண்டார். இனியும்  வன்னியர் அரசியல் பண்ணவில்லை என்றால் அவர் அரசியலில் இருந்து அவுட் என்பது அவருக்கு புரிந்து விட்டது. இதை புரிந்தவர்கள் வருங்கால அரசியலில் இருப்பார்கள். புரியாதவர்கள் அவுட். தமிழியம் திராவிடம் என்பதெல்லாம் இருபத்து ஒன்னாம் நூற்றாண்டுக்கு ஒத்து வராது தம்பிகளா.
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் திராவிடம் தமிழியம் என்று பேசிக்கொண்டிருக்கும் இந்த கூட்டம் ராமதாசின்  ஜாதி அரசியலை எதிர்க்குதாம். வன்னியர் அரசியல் என்பது தலித் மக்களுக்கு எதிரானதாக இல்லாமல் அது திராவிட தமிழ் தேசிய பண்ணைகளுக்கு எதிராக போகும்போது நாம் பாட்டாளி மக்களோடு கூட்டு சேருவோம்.  வருங்காலத்தில் திராவிடம் தமிழியம் என்று பேசி யாரும் கொள்ளை அடிக்க முடியாது. அணைத்து சமூகங்களும் தங்கள் நிலைக்காக தங்கள் அடையாளத்துடன் போராட வருவார்கள். அனைவரும் நாட்டின் வளங்களில் தங்களுகான பங்கை கேட்பார்கள். இதை ராமதாஸ் புரிந்து கொண்டார். தமிழ் தேசிய அரசியல் பண்ணிட்டு இருந்தால் வன்னியர் எல்லோரும் சீமானுக்கு பின்னால போயிட்டு இருக்காங்க என்று புரிந்து கொண்டார். இனியும்  வன்னியர் அரசியல் பண்ணவில்லை என்றால் அவர் அரசியலில் இருந்து அவுட் என்பது அவருக்கு புரிந்து விட்டது. இதை புரிந்தவர்கள் வருங்கால அரசியலில் இருப்பார்கள். புரியாதவர்கள் அவுட். தமிழியம் திராவிடம் என்பதெல்லாம் இருபத்து ஒன்னாம் நூற்றாண்டுக்கு ஒத்து வராது தம்பிகளா.
அண்ணே திருமா அண்ணே பறையர் சங்கத்துக்கு வந்தா தீட்டு பட்டுடுமா? ஆனால் தமிழ் சங்கத்துக்கு திராவிட கழகத்துக்கு எல்லாம் போறீங்களே அண்ணே. நான் திராவிடன் நான் தமிழன் என்றெல்லாம் பெருமையா சொல்லிக்கிறீங்களே அண்ணே. அதெல்லாம் பிறப்பால் கிடைத்த பெருமைகளா? இல்லை கொலம்பியாவுக்கு போய் நீங்க வங்கி வந்த பட்டங்களா அண்ணே. எங்க தலைவர்கள் எல்லாம் ஜாதிய தலைவர்கள். எங்கள் இயக்கம் ஜாதி இயக்கம். உங்க தலைவர்கள் ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, வீரமணி, பிரபாகரன் இவர்கள் எல்லோரும் எல்லோருக்கும் பொதுவான மானுடம் காத்த மாங்காக்களா அண்ணே? இந்த நூற்றாண்டில் "இன" அரசியல் கேட்கவே அசிங்கமா இருக்கு. எங்களை ஜாதி அரசியல் செய்கிறோம் என்று சொல்வதற்கு முன்னர் உங்கள் இன அரசியலை நிறுத்துங்கள். 
பேருக்கு பின்னால முன்னால பறையர் மள்ளர் சக்கிலியர் சாக்கியர் என்று  எங்கள் அடையளங்களை போட்டுக்கொள்வது உங்கள் கண்களை உறுத்துது. நீங்கள் அசிங்கமா தமிழில் பெயர் வைத்துக்கொள்கிறீர்களே அது எந்த அடையாளத்தை தூக்கி பிடிக்க. பேசாமா ஜெயில்ல கைதிகள் நம்பர் வைத்துக்கொள்வது போல நம்பர் வைதுக்கொள்ளுங்களேன். நம்பர் தமிழ்ல வச்சுக்குவீங்களா? இல்லை ஆங்கிலத்தில் வச்சூக்குவீங்கலா? என்னடா உங்க லாஜிக்கு? 
சிங்களவனை கன்னடனை எதிர்க்க வட இந்தியரை எதிர்க்க உங்களுக்கு  தமிழன் திராவிடன் எனும் அடையாளங்கள்  தேவை படும்போது என் கிராமத்தில் என் தெருவில் என் சேரியில் வன்னியனை தேவனை நாயுடுவை பார்பணனை எதிர்க்க பறையன் பள்ளன்  சக்கிலியன் தலித் சாக்கியன் எனும் அடையாளங்கள் எங்களுக்கு தேவைப்படுகிறதுடா வெங்காயங்களா. எங்கள் அடையளங்களை பார்த்து கேலி செய்யும் முன்னர், நீ என்ன அடையாள அரசியல் செய்து கொண்டு இருக்கிறாய் என்று உன்னை பார்த்து நீ கேள்வி கேள். இந்த  நூற்றாண்டில் இன அடையாளம் மொழி அடையாளம் பேசிக்கொண்டு இருக்கும் நீ என்னை பார்த்து "ஜாதி" அரசியல் என்கிறாய். "திராவிடம்" "தமிழன்" எனும் இனவெறி பிடித்த மொழி வெறி பிடித்த அடையாளங்களை எங்கள் மீது திணிப்பதை நிறுத்துங்கள்  வெங்காயங்களா.  
ஜீவன் மள்ளர் சாமி பாறையர் பெருமாள் தேவன் இதெல்லாம் தப்பாம். அப்படினா அசோக் தமிழன் என்பது என்ன? ஜாதி பெருமை தப்பு மொழி பெருமை இன பெருமை. தேவர் ஆண்ட பெருமைன்னு சொன்ன தப்பு. திராவிட வெங்காயங்கள் நாங்க இராவண வம்சம்னு சொன்னா சரியா? தமிழர்கள் சேர சோழ பாண்டிய ஆண்ட பரம்பரைகள் என்று தம்பட்டம் அடித்தால் சரியா? அட வெங்காய வெண்ணை பூண்டுகலா. பார்ப்பனர்  சங்கத்தை, வன்னியர் சங்கத்தை, பறையர் பேரவையை தடுக்க சட்டம் வேண்டும் என்று கேட்பதற்கு முன்னர் திராவிடர் கழகம், நாம் தமிழர், தமிழர் கழகம், திக, திமுக, ஆதிமுக, முக, நக ன்னு தெரு தெருவுக்கு நாறிக்கொண்டு இருக்கும் இன வெறியையும் மொழி வெறியையும் தூண்டி கொண்டு இருக்கும் ஜந்துக்களை ஒழியுங்கள். 
இருபதாம் நூற்றாண்டில் ஒருத்தர் "காட்டுமிராண்டி" எனும் பதத்தை பயன்படுட்டினாராம். அந்த "பகுத்தறிவு" பகலவனுக்கு அப்போது இருந்த அறிவு அவ்வளவுதான். நாம் இப்போது இருபத்தி ஒன்னாம் நூற்றாண்டில் இருக்கிறோம். நவீனத்துவம் போயி பின் நவீனத்துவம் போயி இப்போ ஏதேதோ பேசிட்டு இருக்கோம். இந்த காலத்திலே. இன்னும் சிலர் அவர் சொன்னாரு அவர் சொன்னாருன்னு பகுத்தறிவுக்கு ஒவ்வாத "காட்டுமிராண்டி" எனும்  வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். இது காட்டில் வாழும்  பழங்குடி மக்களுக்கு எதிரான சொல் இதை பயன்படுத்தக்கூடாது எனும் அடிப்படை அறிவு கூட இல்லாத இவர்கள் எப்படி பகுத்தறிவு வாதிகளாக உள்ளனர் என்று தான் தெரியவில்லை. 
(((((((ஜீன்செல்லாம் போடாதீங்க அது தமிழர் பண்பாடு இல்லை. புடவை தாவணிக்கு திரும்பி போயிடுங்க தமிழர் பண்பாட்டை காப்பாத்துங்க. இல்லன்னா தமிழ் நாடும் டெல்லி போல ஆயிடும்.))))) அட வெண்ணைகளா ஜீன்சு போடுற பெண்களை விட புடவை கட்டிட்டு இருக்கிற பெண்களை தான் ஆம்புல தமிழ் நாய்கள் அதிகமா பாலியல் பலாத்காரம் செய்து கொண்டு இறக்கின்றன. கண்ணை திறந்து பார். அவுங்க ஜீன்சு போட்டதாலதான் தெருவுல வந்து போராடிட்டு இருக்காங்க. இங்க இன்னும் தமிழர் பண்பாடுன்னு புடவை கட்டிகிட்டு வெளிய சொன்னா குடும்ப மானம் போயிடும்னு  மூடி மறைப்பதால் தான் ஆம்புல தமிழ் நாய்கள் எல்லாம் நாங்க ஆம்புல சிங்கங்கள்ன்னு சொல்லிட்டு மீசைய முறுக்கி விட்டுட்டு வெளியில அலையுதுங்க. 
அவர் என் கையை "தொட்டாரு" பக்கத்துல உக்காந்து சாப்பாட்டை "பரிமரினாறு" எங்க அப்பா கூட அப்படியெல்லாம் எனக்கு செய்தது இல்லை. நாங்க இரண்டு பெரும் உக்காந்து ஓட்டுக்கள் எப்படி பரிமாறப்பட்டது என்று பேசினோம். எங்கெல்லாம் உங்கள் ஒட்டு எங்களுக்கு விழுந்து இருக்கிறது எங்கள் ஒட்டு உங்களுக்கு விழுந்து இருக்கிறது என்றெல்லாம் அவர் சொன்னார். ஆனால் நாங்கள் இரண்டு பெரும் ஜாதி அரசியல் எல்லாம் பண்ணலை. அவர் தமிழ் குடி தாங்கி நான் எழுச்சி தமிழர். அப்படின்னா உங்க ஒட்டு எங்க ஓட்டுன்னு நீக்க பேசிட்டு இருந்தது எதை பத்தி? கேக்கறவங்க கேனையன்னா கேப்பையில நெய் வழியுதுன்னு சொன்னாங்கலாம். பறையர்கள் ஒட்டு தான் திருமாவை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. பறையர்கள் திருமாவை கை விட்டால் எந்த ராமசாமியும், பிரபாகரனும், மூப்பனும், கருனாநிதியும், ராமதாசும் திருமாவை அஞ்சு பைசாவுக்கு கூட மதிக்க மாட்டார்கள். அரசியலில் உங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனில் ராமசாமி பிரபாகரன் என்று சொல்லி திராவிடத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் ஜிங் ஜக்கா போடுவதை விட்டு விட்டு சேரிக்குள் அடைக்கலம் தேடுங்கள். உங்கள் தமிழ் தேசிய அரசியல் ஆட்டம் கண்டுள்ளது சாக்கிய மக்கள் உங்களை விட்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்பது ராமதாசுக்கு புரிய ஆரம்பித்து விட்டது. அடுத்து கருணாநிதிக்கு புரியும்போது நீங்கள் அவுட்.

Tuesday, December 25, 2012

மேற்க்கத்திய நாடுகளில் சாதரணமாக எடுத்துக்கொள்ளும் மனம் உடல் சார்ந்த உணர்வுகளில் ஒன்று தான் இந்த காதல் காமம் என்பதும். பிடிக்கும் என்பதோடு கொஞ்சம் காமம் கலந்தால் காதல் ஆகிறது. காமம் இல்லாமல் பிடித்தவர்களோடு அன்போடு பழகினால் நட்பாக தொடர்கிறது. ஆனா நம்ம "செந்" தமிழ் நாட்டில்  அதுக்கு புராணம் இதிகாசம் காவியம் கதை கவிதை பாடல் என்று எழதி சினிமா எடுத்து என்னமா பில்டப்பு. காதலுக்கு புனிதம் கற்பித்து அதுக்கு கற்பு வைத்து இவுங்க போடுற சீனு இருக்கே தாங்கள சாமி. தமிழ் நாட்ல இது ஒரு மெண்டல்  டிசார்டராவே (disorderஆயிடுச்சி. இதனால கொலைகள் தற்கொலைகள்ன்னு போயிட்டு இருக்கு. சரியான வயதில் மாணவர்களுக்கு உடல் மனம் சார்ந்த மாற்றங்களை பற்றிய பாலியல் கலவியல் மனோவியல் சம்பந்தமான கல்வியறிவை பரப்பி மன அலைகளையும் மன ஒட்டங்களையும் எப்படி சரியான முறையில் தனி மனித நலனுக்காகவும் சமூக நலனுக்காகவும் பயன்படுத்துவது என்பதை புரிய வைக்க வேண்டியது மிகவும் அவசியம். காதலும் காமமும் மனிதனின் இயற்கை குணங்கள் அதை எப்படி அணுகுவது என்று தெரிந்து கொள்வது வாழும் கலை. இதை தெரிந்து கொள்ளாமல்தான் நிறைய பேர் காதலிக்காமலும் காதலித்தும் கல்யாணம் செய்து கொண்டும் செய்து கொள்ளாமலும் சேர்ந்தும் பிரிந்தும் மன அமைதி இல்லாமலும் மன அழுத்தத்துடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இங்க ஜாதி (தமிழ்)  பெண்களை எல்லாம் சாக்கியர்கள் திட்ட மிட்டு காதல் திருமணம் செய்து இனத்தை அழிக்கிறார்கள் என்கிறார்கள். அங்க சிங்கள பெண்களும் ஆண்களும் தமிழர்களை திட்ட மிட்டு திருமணம் செய்து இனத்தை அழிக்கிறார்கள் என்கிறார்கள். இவர்கள் இங்க சொல்லுறதுக்கும் அங்க சொல்றதுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா?  
சூத்திர பண்ணையாரை "பெரியார்"ன்னு சொல்ல கூடாதுன்னு ராம"சாமி"ன்னு சொல்லிட்டு இருந்தோம். இப்ப நமது மக்கள், அது நமக்கு இழுக்கு சூத்திர பண்ணையாரை நாம சாமி சாமி ன்னு சொல்லுற மாதிரி இருக்கு அதனால அவரை ராம "சாமி" என்று சொல்லாதீர்கள் என்று குரல் எழுப்புகிறார்கள். ரொம்ப தருமசங்கடமா இருக்கு. அவரை எப்படி கூப்பிடுவது? இப்ப கூட பாலிமர் டிவி யில பாத்துக்கிட்டு இருந்தேன். திருமா அண்ணலை ரொம்ப சாதாரணமா அம்பேத்கர் என்கிறார். ஆனால், ராம "சாமிய" சொல்லும்போது பய பக்தியோடு தந்தை பெரியார் என்கிறார். கனவில் எழுப்பி ராம"சாமி" போட்டோவை காட்டினால் கூட இவர் ராம"சாமியை"  தந்தை பெரியார் என்றும் அண்ணலை அம்பேத்கர் என்றும் தான் சொல்லுவார் போல. ஜாதி இந்து ஊடகத்தால்  ஆழ் மனதில்  புகுத்தப்பட்டுள்ள அடிமை மனோ நிலை. அத்து மீறு அத்து மீறுன்னு ரசிகர்களுக்கு சொன்னா  போதாது திராவிஷமும் தமிழ் விஷமும் ஏற்றியுள்ள அடிமைத்தனத்தில்  இருந்து அத்து மீறி வெளியே வாங்க அண்ணாச்சி.......

Monday, December 24, 2012

ஒரு மாபெரும் மேதை தத்துவ ஞானி உலகம் போற்றும் உத்தமர் நாடு மொழி இனம் தேசியம் எனும் எல்லைகளை கடந்தவர் உலகமே போற்றும் ஒரு உயர்ந்த தத்துவத்தை வழங்கியவர். நாளைய இந்தியா மட்டும் அல்ல உலகமே புத்த தம்மத்தை ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் அதற்காக என் மக்கள் எதை வேண்டும் என்றாலும் செய்வார்கள் என்று சொன்னவர். அவரை கொண்டு மொழி பேதம் இன பேதம் பேசி அலைந்த ரமசாமி  பிரபாகரன் போன்ற அரை வேக்காடுகளுடன் இணைத்து பேசுவது அவர்களுக்கு சமமாக அவரது படத்தை  போட்டு அசிங்க படுத்துவது என்னடா உங்க திராவிட தமிழ் தேசிய அரசியல். 
எங்களை பொது நீரோட்டதில் கொண்டு போய் இணைக்கிராறாம். எது பொது நீரோட்டம். மானுடம் எனும் பொது நீரோட்டதில் உள்ள எங்களை திராவிடம் தமிழியம் எனும் சாக்கடைகளில் கொன்டு போய் இணைப்பது பொது நீரோட்டமா. 
ராமசாமி பேசிய திராவிட நாடும் இவுங்க பேசுற தமிழ் தேசியமும் ஒன்னாம். கடை கோடியில் காஷ்மீரில் என்னை போலவே சேரியில் ஜாதி இந்து வெறியர்களால் அல்லல்படும் என் சகோதர சகோதரிகளை அந்நியப்படுத்தும் அந்த ராமசாமியின் தனி திராவிட  நாட்டு கொள்கையும் இப்போது சில குரங்கு கூட்டங்கள் பேசிக்கொண்டு இருக்கும் தமிழ் தேசியமும் சாக்கிய (தலித்) மக்களின் ஒற்றுமைக்கு எதிரானதே. திராவிடமும் தமிழ் தேசியமும் ஆண்டைடைகள் நமது எழுச்சியை அழிக்க பயன்படுத்தும் ஆயுதங்கள். பல மொழி பேசினாலும் பாப்பான் பாப்பனாக இருக்கிறான். அவனுக்குள் ஒரு ஒற்றுமை இருப்பதால்தான் அவன் ஜெயிக்கிறான். நாம் மொழி மதம் இனம் எனும் பெயரில் சிதறடிக்கப்பட்டு உள்ளோம். நம்மை இணைக்கும் ஒரே அடையாளம் நாம் சேரி மக்கள் என்பதே. எங்கெல்லாம் சேரிகள் உள்ளதோ அங்கெல்லாம் இருப்பது நமது மக்களே. நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர்  தந்தை சிவராஜ் சொன்னார். தாங்க்ஸ் காட் எதிராளிகள் நம்மை இது நாள் வரை தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தினார்கள். அதுதான் நமது சமூகத்தின் அடையாளத்தை இது நாள் வரை காத்து இருக்கிறது என்று. அந்த அடையாளத்தை கூறு போட நினைக்கும் எந்த அண்ணனாக இருந்தாலும் அதை நாம் அனுமதிக்க மாட்டோம். தமிழ் தேசியம் என்பது சாக்கிய ஒற்றுமைக்கும் சாக்கிய அரசியலுக்கும் எதிரானது. அது மனிதரை கூறு போடும் ஒரு கொடிய அரசியல் விலங்கு
சுய அடையாளத்தை சுய கவுரவத்தை சுய தத்துவத்தை சுய கொள்கையை சுய கோட்பாட்டை விட்டு கொடுக்காமல கூட்டணி வைப்பது சாக்கிய அரசியல். அண்ணல் அம்பேத்கர் என்ன மராட்டி தேசியம் பேசிக்கொண்டு கூட்டணி வைத்தாரா? பூவையார் திராவிடம் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு கூட்டணி வைத்தாரா? பேகன்ஜி "ஹிந்தி" தேசியம் பேசிக்கொண்டு கூட்டணி  வைத்தாரா? தமிழ் தேசியம் என்பது எங்கள் முதல் எதிரி அதை அண்ணன் பேசினாலும் எதிர்ப்போம் ஆட்டு குட்டி பேசினாலும் எதிர்ப்போம். பல மொழி பேசும் எமது முப்பது கோடி மக்களை பிரித்து கூறு போடும் தமிழ் தேசியத்தை கருவறுப்போம். 
 சாக்கியம் என்பதில் அண்ணல் அம்பேத்கரின் தத்துவம் இருக்கிறது. அதற்கு மற்றும் ஒரு பெயர் மானுடம்.  உங்கள் தமிழ் தேசியத்துக்கு என்று ஏதாவது தத்துவம் இருக்கிறதா? கொலை வெறி வன்முறை சாதியம் மத வெறி மொழி வெறி இன வெறி  இதுதான் தமிழியம். மொழியை மட்டும் வைத்துக்கொண்டு தேசியம் சமூகம் என்று கட்டமைக்க முடியும் என்றால் எதுக்கு ஆயிரத்து எட்டு சாதிகளாகவும் மதங்களாகவும் உடைந்து இருக்கிறீர்கள். மனிதனை மொழி இனம் மதம் எனும் பெயரில் கூறு போடாதீர்கள். மானுடத்தை கையில் எடுங்கள். 

Sunday, December 23, 2012

அவர் தலித்துதான் ஆனால் ஜாதி ஒழிப்பு, உலகமயமாக்குதல் எதிர்பு, பாலியல் வன்கொடுமையை எதிர்ப்பு, கூடங்குளம் எதிர்ப்பு, ஈழ விடுதலை இப்படி பொது பிரச்சனைகள் மட்டுமே பேசுவார். ஜாதி (தலித்) பிரச்சனைகளை  பேச மாட்டார். அவர் பொதுவானவர். ஆனால், சாக்கிய (தலித்) அமைப்புக்கள் வங்கி தரும் உரிமைகளை மட்டும் அனுபவிச்சு  நோகாமல் நோம்பு கும்பிடுவார் .  
நாட்டில் ஜாதியை ஒழிப்பவர்கள், கரப்ஷனை ஒழிப்பவர்கள், ஈழத்துக்கு குரல் கொடுப்பவர்கள், அந்நிய முதலீட்டை எதிர்ப்பவர்கள், கூடங்குளத்தை எதிப்பவர்கள், உலகமயமாக்குதலை எதிர்ப்பவர்கள் தற்போது டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்ப்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. தலித் பெண்கள் பலாத்காரம் தலித் மக்கள் கொலை தலித் வீடுகள் கொளுதப்படும்போது இவர்களுக்கு கண் தெரியாமல் போயிடும் காது கேக்காது வீட்டுக்குள்ளே டிவி சீரியல் போட்டு பார்த்து கொண்டு இருப்பார்கள். 
இந்திய பாராளுமன்றத்தில் ஜாதி இந்து ஆண்களை கலங்க வைக்கும் சாக்கிய சகோதரியின் நிழலை கூட நெருங்க முடியாத  "ராமசாமி, பிரபாகரன், கருணாநிதி, ராமதாசு, வீரமணி, வை கோ, நெடுமாறன்" என்று  ஜாதி இந்துக்களுக்கு கூழை கும்புடு போடும் தமிழ் தேசிய ஜால்ராக்கள் நம்மை விடுவிக்க போகிறார்களா? 
நீ ஜாதி என்ற வட்டத்துக்குள் இல்லாமல் தமிழன் எனும் வட்டத்துக்குள் போகும் போது. நாங்கள் தமிழன் எனும் வட்டத்தை உடைத்து எரிந்து சாக்கியர் எனும் முப்பது கோடி சேரி மக்களுடன் பொது நீரோட்டத்தில் கலக்கிறோம். எங்கள் தேசிய இனம் ஆசியா முழுதும் பறந்து விரிந்து உள்ள முப்பது கோடி சாக்கிய மக்கள். 
ஜாதி இந்துக்கள் திருமாவை ராமசாமியின் மகன் என்று கூட சொல்ல மாட்டார்களாம். ராமன் மகன் என்றுதான் சொல்லுவார்களாம். அந்த பெயரில் சாமி வருகிறதாம். ஆனால் திருமா, ராமசாமியை, ராமசாமின்னு கூட சொல்ல மாட்டாராம் "பெரியார்"ன்னு தான் சொல்லுவாராம். என்ன கொடுமை சாமி இது? 
சாக்கிய (தலித்) மக்களிடம் உள்ள முன்னேறிய (கிரிமிலேயர்) தான் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கியறார்கலாம். அதனால் அவர்களை இட ஒதுக்கீட்டில் இருந்து தூக்கிடவேண்டுமாம். அப்பதானே கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். உயர் பதவிகளில் இட ஒதுக்கேடு உயர் பதவிகளில் பங்கு கேட்க ஆள் இருக்க மாட்டார்கள். வழக்கம் போல குரூப் IV வேலைகளைகளில்  மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்து விட்டு, உயர் பதவிகளுக்கு தகுதியான ஆட்கள் இல்லை என்று சொல்லி நீங்களே அனுபவிக்கலாம்.  படிச்சுட்டு மேலே வந்து 

உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடக்கும் கூட்டங்களில் சென்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று பாருங்கள். பட்டியல் இன மக்கள் எனும் ஒற்றை அடையாளத்துக்கு ஏற்க்கனவே திராவிட கூட்டம்  சாவு மணி அடித்து விட்டது. நங்கள் கலாச்சார தளத்தில் அண்ணல் கட்டிய வழியில் சக்கியர்கலாக ஒருங்கிணைவோம். உள் இட ஒதுக்கீடு எனும் பெயரில் சூத்திர திராவிட கூட்டம் நடத்தும் அரசியல் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு தேவை தனி ஒதுக்கீடு. மக்கள் தொகை விகிதாச்சார படி தனி ஒதிக்கீடு வேண்டும். நாடு முழுதும் பள்ளரும் பறையரும் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் பங்கை திருவிட்டர்கள் என்று பரப்பும் பொய் பிரச்சாரத்திற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். 

(((((((((2) அருந்ததியருக்கு உரிய பங்கை அளிப்பதில் உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் நேரடியாக சொல்லுங்கள் . சுற்றி வளைக்க வேண்டாம் .))))))))) அருந்தியர் பல நூறு வருடங்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 6% தனி ஒதுக்கீடு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். 


((((((((((மேலும் பட்டியல் சாதிகள் என்ற ஒற்றை அடையாளம் போய் இரண்டு தனி தொகுப்புகள் உருவாகும் . பட்டியல் சாதிகுளுக்கு இடையில் இருக்கும் குறைந்தபட்ச ஒருங்கிணைப்பும் தகர்ந்து விடும்.))))))))) இந்த அக்கறை BC யை MBC  என்று பிரிக்கும்போது இல்லையே. 

ஜாதி மதம் மொழி இன உணர்வுகளை கடந்து எல்லோரும் டெல்லி சாலைகளில் வந்து புரட்சி செய்கிறார்களாம். டேய் டேய் நாங்க கூப்டா மட்டும் ஏண்டா வர மட்டுரீங்க. எத்தனையோமுறை  தலித் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளானபோது அழைப்பு கொடுத்தோமே அப்போதெல்லாம் செவிடர்களாக இருந்தீர்களா?  

((((காதலை தடுப்பேன் என்பது சுனாமியை தடுப்பேன் என்பது போன்றதாகும்" -திருமாவளவன்.))) மொட்ட பசங்க தான் ஏதோ காதல் கதரிக்கான்னு பேசிட்டு இருக்காங்கன்னா. இவருமா? ஏம்பா காதலிச்சு கழுத்தறு படும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வாங்கி கொடுத்துட்டு அப்புறமா இப்புடி பேசிட்டு இருங்க. மேடை பேச்சுக்கு சினிமாவுக்கு கதை கவிதை எழுதரவங்களுக்கு  இதெல்லாம் ஒத்து போகும் வாழ்க்கைக்கு ஒத்து வராது. உருப்புடற வழிய பாருங்க. 

Saturday, December 22, 2012

உள் இட ஒதுக்கீடு எனும் பெயரில் நமக்குள் தீயை மூட்டி விட்டு குளிர் காயும் திருட்டு  திராவிட நரிதந்திரத்தை புரிந்து கொள்வோம். நமக்கு கொடுக்க வேண்டிய விகிதாச்சார உரிமையை இவ்வளவு காலம் தராமல் நம்மிடம் இருந்து கொள்ளை அடித்து வைத்துள்ள கூட்டகம். நமக்கு செலவு செய்ய வேண்டிய மதிய அரசு அனுப்பிய பணத்தை எல்லாம் செலவு செய்யாமல் கொள்ளை அடித்து வைத்துள்ள கூட்டம் அருந்தியர் பாசம் என்று நாடகம் நடத்திக்கொண்டு இருக்கிறது. நாம் கேள்வி கேட்டல் நாம் மூட அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் அருந்ததியர் பாசம். 

பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் இருந்து தனியாக பிரித்து மிகவும் பிற்படுதப்பட்டவர் என்று பட்டியலை இதே சூத்திர திராவிட அரசுதான் உருவாக்கியது. அப்போது MBC பங்கை எல்லாம் BC அனுபவிக்கிறார்கள் என்று சொல்லவில்லை. BC க்கும் MBC க்கும் இடையில் பிளவை ஏற்ப்படுத்தவில்லை. அதுக்கு ஒரு கமிஷனை போட்டு அவர்கள் மக்கள் தொகைக்கேற்ப அவர்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என்று சொன்னார்கள். BC மற்றும் MBC என்று பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்தனர். ஆனால், அதே திராவிட கூட்டம் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறது பாருங்கள் நம் மீது சேற்றை வாரி இறைத்துக்கொண்டு இருக்கிறது. ஏதோ பறையர்களும் பள்ளர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது போலவும். அவர்கள் தான் சக்கிலியர்களை படிக்க விடாமலும் வேலை வாங்க விடாமல் தடுத்தது போலவும் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறது இந்த கூட்டம். பள்ளர் பறையர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை இது வரை கொடுக்காமல் திருடி தின்ற இந்த கூட்டம். அருந்ததியர் மீது பாசம் கட்டும் நாடகம் நமது பங்கை இதுவரை அவர்கள் திருடியதை மறைக்க நடத்தும் நாடகமே.  அருந்ததியருக்கு 6% கூட கொடுக்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை தனி ஒதுக்கீடு ஆக்கட்டும். BC  & MBC போல தனி தனியாக இருக்கட்டும். உள் இட ஒதுக்கீடு எனும் பெயரில் நமக்குள் சண்டை வேண்டாம் என்கிறோம். 

((((((((((பள்ளர்களுக்கு வாய்ப்பு போகிறது ;பறையர்களுக்கு வாய்ப்பு போகிறது என்று பார்ப்பதை விட 
அருந்ததியர்களுக்கு தானே போகிறது அவர்கள் யார் ?))))))))) கொடுக்குர அளவுக்கு வளர்ந்து உள்ளவர்களிடம் கேட்கும் கேள்வி. கொடுக்கும் அளவுக்கு பறையர்களும் பள்ளர்களும் வளரவில்லை. அவர்களை வளர விடாமல் முளையிலே கிள்ளும் வேலை தான் இந்த திராவிட திருட்டு கூட்டத்தின் உள் இட ஒதுக்கீட்டு அரசியல். அருந்ததியருக்கு கொடுங்கள். அதே போல பள்ளருக்கும் பறையருக்கும் அவர்கள் மக்கள் தொகையை கணக்கிட்டு அவர்கள் பங்கை கொடுங்கள் என்று தான் நாம் கேட்கிறோம். நாம் அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரி இல்லை. அருந்தியர் உள் இட ஒதுக்கீடு எனும் பெயரில் ஒடுக்கப்பட்ட பறையர் பள்ளர் மக்களை மேலும் ஒடுக்க நினைக்கும் சூத்திர திராவிட அரசியலை தான் எதிர்க்கிறோம். 
காதலால் ஜாதி ஒழியாது. ஜாதி ஒழியும்போதுதான் இரு சமூகத்தை சேர்ந்த இரு மனிதர்களுக்கு இடையில் உண்மையான அன்பு வரும். ஜாதி ஒழிய ஜாதியை காக்கும் நம்பிக்கைகள் ஒழியனும். மக்கள் மனதில் ஜாதி, மதம், மொழி, இனம் எனும் வேற்றுமைகளை கடந்த மனித நேயம் வரணும். ஜாதி மத மொழி இனம் எனும் வேற்றுமைகள் நிறைந்த சமூகத்தில். இரு சமூகத்தை சார்ந்த இரு மனிதர்களுக்குள் வருவது காதல் அல்ல. காதல் ஜாதி ஒழிப்பு திருமணம் என்பதை பேசுவதை விட்டு மனித வேற்றுமைகளுக்கான காரணமான நம்பிக்கைகளை ஒழியுங்கள். சமூகத்தில் மானுட நேயத்தை வளர்க்கும் நம்பிக்கையை வளருங்கள். ஜாதியை மறுக்கும் சில கூ முட்டைகள் அதற்கு மாற்றாக இன வெறியையும் மத வெறியையும் மொழி வெறியையும் தூண்டி வருவது மனித வேற்றுமையை ஒழிக்காது மாறாக அது அதிகப்படுத்தும். 
சைட் அடிச்சமா ஜொள்ளு விட்டமா கடலை போட்டமா அதோடு முடிச்சிக்கிங்க. ராமசாமி சொன்னாரு வீரமணி சொன்னாரு சு ப வீ ப சொன்னாருன்னு காதல் ஜாதி ஒழிப்பு திருமணம்னு போயி கழுத்து  அறுபட்டு சாகாதீங்க. நாமதான் எமோஷனல் அவிங்க தெளிவா இருப்பாங்க. நாம கழுத்து அறுபட்டு செத்தா  ஒரு சாமியும் ஒரு மணியும் ஒரு பாண்டியும் வந்து நம்மை காப்பாத்தாது. அவனெல்லாம் "பெரியார்" மாளிகையிலும் "வீரமணி" பங்களாவிலும் உக்காந்து கொண்டு காவியம் எழுதும் பரம்பரை. நாம இப்பதான் சேரிகளில் துளிர் விடுகிறோம். வழ வேண்டிய சமூகம். அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் தங்கள் இளமை காலத்தில் காதல் காம உணர்வுகளை எல்லாம் கட்டு படுத்தி உழைத்த உழைப்பில்தான் இன்று நாம் நல்ல பேண்டும் சட்டையும் கூளிங்கிலாசும் போட்டுக்கொண்டு ராஜா மாதிரி வலம் வந்து கொண்டு இருக்கிறோம். இந்த ஈரோட்டு வெங்காயங்கள் நம்மை உசுப்பி விடும் தூண்டி விடும் அவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமைகள் ஆகி செத்து தொலையாதீர்கள். உங்களுக்கு தனி மனித குடும்ப சமூக கடமைகள் உள்ளன. 

Friday, December 21, 2012

ஒரு கூட்டம் எங்களை திராவிடத்துக்கு விக்கிரதுன்னா மற்றொரு கூட்டம் எங்களை தமிழ் தேசியத்துக்கு விற்று கொண்டு இருக்கிறது. பட்டு வேட்டி பட்டு சட்டை பட்டு ஜாக்கெட்டு பட்டு புடவை கட்டி நடக்கும் தமிழ் திராவிட கொள்ளை கூட்டங்கள் எமக்கு உறவுகள் இல்லை. கட்ட கந்தை இல்லாமல் காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து ஓடாய் தேயும் ஹிந்தி ஹரியானாவி பஞ்சாபி நேபாளி என பேசி திரியும் முப்பது கோடி சேரி வாழ் மக்களே எமது இனம் எமது உறவுகள். உங்க தமிழ் மொழியும் உங்க திராவிட இனமும் எங்களுக்கு ஒரு மண்ணையும் புடிங்கி தரல தராது.  
தினம் தினம் சுடுகாட்டில் பினங்களை பார்த்து உடலும் உள்ளமும் மரத்துப்போன வெட்டியார பறையரிடம் என்னைக்கோ ஒரு நாளைக்கு பிணத்தை தூக்கி வரும் ஜாதியாரு கேக்குறாரு. நான் பிணத்தோடு வந்து நிக்குறேனே உனக்கு உணர்ச்சியே இல்லையா? என்னோடு சேர்ந்து நீயும் அழமாட்டியான்னு. அது போலத்தான் இருக்கிறது டெல்லி பாலியல் பலாத்காரத்துக்கு குரல் கொடுக்க சொல்லும்  "ஜாதி" இந்து பெண்களின் குரல். தினம் தினம் பாலியல் பலாத்காரத்தால் நொந்து நூலாய் போன சாக்கிய (தலித்) பெண்களிடம் வாருங்கள் ஒன்றாய் சேர்ந்து டெல்லி பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக குரல் கொடுப்போம் என்கின்றனர் "ஜாதி"  இந்து பெண்கள்.

ஒரு முறை கருணாநிதி கருணாநிதின்னு பேசிக்கிட்டு இருந்தேன். எங்க சித்தப்பாவுக்கு என் மேல கோபமா அப்படி ஒரு கோபம். நேரில் கோபத்தை காட்டாமல், எங்க சித்தி கிட்ட போய் சொன்னார் அவர் எவ்வளவு பெரியவர் அவரை இப்படி மரியாதை குறைவா இவன் பேரை சொல்லிகிட்டு இருக்கானே. எங்க சித்தி வந்து என்னிடம் அவர் பெரியவர்-பா எதுக்கு அப்படி சொல்றே. கலைஞர்னு சொல்லு சித்தப்பா கோச்சுக்குறார் என்றார்கள். என் சித்தி கிட்ட திருப்பி கேட்டேன். சித்தி அண்ணல் அம்பேத்கரை நாம் எல்லோரும் அம்பேத்கார்னு தானே சொல்றோம் அவர் கூட வயதில் பெரியவர்தனே.   

உலகமே காந்திய மகாத்மான்னு சொன்னபோது மகாத்மாவாவது மண்ணாவது. காந்தி எனக்கு காந்திதான்னு, மிஸ்டர் காந்தின்னு சொன்னவர் நமது அண்ணல். என்னைக்கு  நாம ராமசாமியை ராமசாமின்னும் கருணாநிதியை கருனாநிதின்னும் பிரபாகரனை பிரபாகரன்னும் வீரமணியை  வீரமனின்னும் சொல்ல பழகுறோமோ அப்பத்தான் ஆழ் மனதில் உள்ள பண்ணை அடிமை மனோ நிலை நம்மை விட்டு அகலும். இதை ஏற்றுக்கொள்ளும் மனோ நிலை எப்பது இந்த ஆண்டைகளுக்கு வருகிறது அப்போதுதான் அவர்கள் மனதில் இருந்தும் பண்ணை மனோ நிலை போகும். அந்த ஆண்டைகள் எல்லோரும் எங்களை பெயரை விட்டே கூப்பிடுங்கள் என்று சொல்லும் நாள் வரவேண்டும்.
இதை பார்த்தாவது ஒருசிலர் திருந்துனா நல்லா இருக்கும். ராமசாமிய தந்தை பெரியாருன்னும் பிரபாகரனை மேதகு தமிழ் தேசிய தலிவர்னு சொல்லி அவுங்க படத்துக்கு முன்னால பக்தியோடு வாயில கையை வைத்துக்கொண்டு நிற்ப்பதும். கருணாநிதி வீரமணி சு ப வீ ராமதாஸ் வை கோ நெடுமாறன் இவுங்க முன்னால கைய கட்டிக்கிட்டு பண்ணையாள் மாதிரி நிற்பது, "ஐயா" மருத்துவர் "ஐயா" "ஐயா" ஆசிரியர் "ஐயா" "ஐயா" சு ப வீ "ஐயா" ன்னு பண்ணையாள் வேலை பார்ப்பது, காவேரி பிரச்சனைக்கு ஈழ பிரச்சனைக்கு கையில் ஒரு அட்டையை படித்துக்கொண்டு பாராளுமன்ற  காந்தி சிலைக்கு முன்னால அமெரிக்க பிச்சைகாரர்கள் போல நிர்ப்பது இதை எல்லாம் அவர்கள்  விட்டால் நல்லா இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இப்ப எல்லாம் வட இந்தியாவில் கூட பிரதமரை ஜனாதிபதியை மிஸ்டர் ஒபாமா மிஸ்டர் மன்மோகன் சிங்குன்னு சொல்லிட்டு இருக்காங்க. இங்க என்னடான்ன இந்த சூத்திர பண்ணைகளை சார் சார் ஐயா ஐயா யான்னு இந்த ஜால்ராக்கள் சொல்லும்போது நம்ம ரத்தம் சுண்டி போகுது. வாழ வழியில்லாம கிராமத்துல சொன்ன மாதிரி அரசியலில் வாழ வழி தேடும் நமது அரசியல் பண்ணை அடிமைகள்.......
அன்று பறைச்சிகள் எல்லாம் ஜாக்கெட் போட்டுக்கொண்டார்கள் என்று நாயக்கர் சொன்னார். இன்று பறையர்கள் எல்லாம் ஜீன்ஸ் போட்டுகிட்டார்கள் என்று வன்னியர் சொல்றார். அன்னை மீனாம்பாள் சொன்ன மாதிரி முன்னாடி சொன்னவர அன்னைக்கே செருப்பால அடிச்சு இருந்தா பின்னால வந்தவர் இப்படி சொல்லிட்டு இருக்க மாட்டார். 
பேசுவது கூட செயல்தான். தொடர்ந்து கருத்துக்களும் கொள்கைகளும் பிரச்சாரம் செய்யப்படவில்லை எனில் இயக்கம் தனது கருத்தியல் கோட்பாட்டில் இருந்து விளகிவிடும். கருத்தியல் இல்லாத இயக்கம் என்பது உணர்வற்ற இயந்திர தன்மையை எட்டிவிடும். 

Thursday, December 20, 2012

((((((((((((கொளத்தூர் மணி ” ‘பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம்’ இயங்கிய தமிழ்நாட்டில், இப்போது ‘தலித் அல்லாதோர் இயக்கம்’ கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.)))))))))))  மடையர்கள் அந்த "பார்பனர் அல்லாதார் இயக்கம்" தான் "தலித் அல்லாதார் இயக்கம்"னு தெரியாமல் செய்கிறார்களோ. ஒருவேளை நீங்கள் பார்பனர்களை உண்மையிலே எதிர்க்கிறீர்கள் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் பார்ப்பனர்களை உள்ளடக்கிய ‘தலித் அல்லாதோர் இயக்கம்’ ஆரம்பிக்கிறார்களோ என்னமோ.
நாம எதை பேசணும் எதை பேசக்கூடாது என்று ஜாதி இந்து மீடியாக்களே நிர்னயிக்கின்றன. பல வருடங்களாக சாக்கிய (தலித்) மனித உரிமை அமைப்புகள் வன்கொடுமைக்கு எதிராகவும் முக்கியமாக தலித் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கத்து கத்து என்று கத்திக்கொண்டு இருக்கின்றன. வன்கொடுமைகள் நடக்கும்போது எல்லாம் நாம பத்திரிக்கை பத்திரிக்கையா படி ஏறி போய் இந்த செய்திய போடுங்க என்று சொல்லுவோம். நாம கொடுத்துட்டு வரும் அறிக்கை நாம வெளியே வருவதற்கு முன்னரே குப்பை தொட்டிக்கு வந்து விடும். தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை சின்னதா கட்டம் போட்டு ஒரு மூலையில் வெளியுடுவதை கூட விரும்பாத இந்த தேசிய மீடியாக்கள் நமது உள்ளத்தை உணர்வை எப்படி தூண்டினார்கள் பாருங்கள். நிறைய தலித் பெண்கள் கூட இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடவில்லை. இப்படி நாம தலித் பெண்களின் நிலையை நினைத்து சாப்பிடாம இருக்கணும்னா தினம் தினம் சாப்பிடாம தான் இருக்கணும். இதை நான் எழுதும் இந்த வேளையில் கூட இந்தியாவின் எதோ ஒரு மூலையில் ஜாதி இந்து வெறி நாயால் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு தலித் பெண்  கொடுக்கும் குரலை கேட்க முடிகிறது. 
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலை 19, 2002 அன்று எழுதியது. 

Are they Leaders of Dalits or Followers of Shudras?

Many Political leaders claim to be Dalit leaders by following Hindu
Shudras. These so-called Dalit leaders suffer by ideological as well
as identity crisis. They claim that they are fighting for the rights
of Dalits but many times they struggle to remove the power of
Brahmins and establish the Shudra power. The Dalit movement in Tamil
Nadu was suffered due to this confused leadership between 1960s and
1980s. Many leaders, including Ms. Sathyavanimuthu, the President of
Dalit women wing of Scheduled Caste Federation, had left Dalit
movement and merged with Shudras' Dravidian movement. Many
individuals enjoyed the minister post under the Shudra rule. But the
Dalit movement suffered due to the ideological and leadership crisis.

It is only in the 1990s Dalits in Tamil Nadu reviewed their
independent identity, ideology and leadership which was initiated by
the great leader Thaatthaa R. Srenivasan. The Adi-Dravida identity
was to differentiate the Dalits from the Dravidian identity of the
Shudras. It is not Dalits claimed Pre Dravidian identity just for the
political purpose but it was historically and ideologically
substantiated by many European and Dalit Scholars of that time.

But even today the Dalits leaders suffer due to the confusion created
and propagated by the Shudra intelligence of Tamil Nadu. Some of the
Dalit leaders and intellectuals are conflicting themselves with two
ideology and identity i.e. Dravidian/Tamilian and Dalits. They are
still patronized by the Shudra intellectual and leaders.

LTTE is the Shudra dominated terrorist organization, which is
fighting for the separate country for Tamils (Shudras) in Sri Lanka.
Many Shudra led organizations, which are fighting for Tamil
Nationalism in India too. Supporters of these organizations get the
support from LTTE and support LTTE. Now Shudra leader Viko has been
arrested under POTA for his crime of openly supporting the terrorist
organization.

There are some of the Shudra trained Dalit leaders also support LTTE
and separate Elam in Sri Lanka. What is the purpose of supporting a
Shudra led terrorist organisation or Shudra demanded Tamil Elam. Do
Dalits get any support from this organization? Will Dalit get any
benefit if Shudra get separate country in Sri Lanka or India? Dalits
are exploited by these Shudras, not only in the working place or
villages in India and Sri Lanka, but also in the battlefield. Many of
the grass root terrorist activities are Dalits. They are not only
used but also misused on the name of Tamil sentiment by the Shudra
Tamils. The Dalit women are exploited by the Shudra Tamils in
villages and tea estates. Whoever rebelled against the Shudra
hegemony is crushed in Sri Lanka by the Shudra led LTTE. EPRLF was an
organization, which took the issues the Dalits and other poor,
especially the plantation laborers in Sri Lanka. EPRLF was Dalit
dominated organization, which was getting popular among Dalits. This
was crushed by the Shudra led LTTE. Many activist including its
leaders were killed by the Shudra led LTTE.

Shudra Tamils' organizations have no agenda of Dalit liberation like
Indian nationalist during the British period. Those days Dalits were
not interested of India's independence, because they knew that if
British go out of this country, there would be no one to protect
Dalits from the Hindu oppression in India. After British had left
India the Hindu propagandist succeeded to put Dalits under the Indian
illusion for forty years. This was realized in 1990s and now Dalits
are going out of the country to seek support from Inter national
community.

The same logic may fit into this so-called Tamil Nationalism. If
Tamils get separate country in Sri Lanka or India, what would be the
consequences of Dalits? Will Dalits get any benefit out of it? It
will be the same dream of some untouchables who went behind the
Congress and Gandhi believing that as soon as India gets Independence
the problems of Dalits would be solved. Followers of those Harijans
are now propagating that Dalits have been benefited because of the
independence. They fail to recognize the role of British welfare
state and the Dalit movement in British as well as the present caste
Indian rule.

These Brahmanical as well as Shudra trained untouchables call British
period as colonial period. They fail to understand that the Dalit
liberation was started only in the British period. The Dalits could
mobilize and organize themselves to fight against the Brahmanical and
Shudra hegemony under the protection of the British welfare state.

The same thing is happening with some confused Dalit leaders as well
as some so called Dalit intellectuals. They claim that they are Dalit
leaders or intellectuals, but speak the same thing what the Shudra
speak. Some of them use same typical terminologies of the Shudras.
These Dalit leaders as well as intellectuals should realize the Dalit
potentials and recognize their own capacity and leaderships.

Dalits should take a different stand to protect the interest of
Dalits in Sri Lanka. The problems of Dalits in Sri Lanka should be
addressed to the International community. The Dalits in Sri Lanka
suffer more than Shudra Tamils. Dalits suffer not because they speak
Tamil but because they are Dalits. Both the casteiest Goigamas
(Singalas) as well as Tamil Shudras suppress the Dalits in Sri Lanka.
Both Indian and Sri Lankan governments are silent about issues of
Dalits. Many of the Dalits are neither citizen of India nor citizen
of Sri Lanka. They do not enjoy any rights as human beings, same as
Dalits in India with the so-called citizenship. The Sri Lankan Tamils
consider Dalits as Indian Tamils and hence outsiders. The Sri Lankan
government calls them illegal immigrants. The Indian government
considers them as non-citizen. Where will Dalits go and who will
protect their rights? It is the duty of international Dalit community
to raise the voice for Dalits in Sri Lanka. It is the duty of the
Dalit leaders to take different stand as Dalits, and fight for the
rights of Dalits in Sri Lanka. (Fri Jul 19, 2002 2:00 pm)

Tuesday, December 18, 2012

கேம்பஸில் பஸ்சுல வந்துட்டு இருந்த ஒரு பெண்ணிடம் ஒரு பையன் தப்பா நடந்து கிட்டான். பஸ்சு கேம்பசுக்கு உள்ள வந்த உடனே அவனை பஸ்ஸுக்குள்ள இருந்து இழுத்து போட்டு அங்க நின்னுட்டு இருந்த பசங்க எல்லாம் சேந்து சாத்து சாத்துன்னு சாத்திட்டு இருந்தாங்க வாயெல்லாம் ரத்தம். கிட்ட போன எங்க கூட்டத்துக்கு தலித் ஆண்டெனா தலை தூக்கியது. அடி வாங்கிய பையன் பாக்க டீசண்டா இல்லை கூலிங் கிலாசு கண்ணாடி எல்லாம் இல்லை. ஏம்பா எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறீங்க செத்து கித்து தொலைய போறான்னு சொன்னோம். உங்க அக்கா தங்கச்சிக்கு இப்படின்னா சும்மா விடுவீங்கலான்னு டயலாக்கு வேர. அந்த பையன அடிச்சவங்க எல்லாம் எவ்வளவு யோக்கியனுங்கன்னு எங்களுக்கும் தெரியும். அவனுங்க கிட்ட போராடி அந்த பையன மீட்டு ஆட்டோவ்ள ஏத்தி போலிஸ் ஸ்டேஷன்ல கொண்டு போயி உட்டோம். பையன யாருன்னு விசாரிச்சா கிராமத்துல இருந்து வந்து கேம்பஸில் கன்ஸ்ட்டரக்ஷன் வேலை செய்யுற பையன். அவன் அந்த தப்பை செய்யவில்லை அவனுக்கு தண்டனை கொடுக்க கூடாது என்பது நமது வாதம் இல்லை. தவறுக்கு ஏற்ற தண்டனை கொடுங்க என்பது தான். போலிஸ் ஸ்டேஷன்ல குற்றவாளிகளை  போலிஸ் அடிச்சாலே டார்ச்சர் மனித உரிமை மீறல் என்கிறோம். தெருவில் போறவன் வருபவன் எல்லாம் அடிச்சா அது மனித உரிமை மீறல் இல்லையா? அவனை அடிச்சு இவுங்க எல்லாம் பெண்ணிய வாதிகள் ஆனாங்க. அவனை காப்பாத்தி போலிஸ் ஸ்டேஷன்ல கொண்டு போயி விட்ட நாங்க ஆணாதிக்கவாதிங்க. எங்கள மாதிரி ஆளுங்கலால தான் பொம்பள பொறுக்கிகள் அதிகமா நாட்ல பெருகிட்டு இருக்கங்கலாம். சொல்றவங்க எவ்வளவு யோக்கியர்கள் எப்படி எல்லாம் கேம்பஸில்  காதல் காம விளையாட்டு விளையாடிக்கொண்டு இருப்பவர்கள் என்பது எங்களுக்கும் தெரியும். கேட்டா இவுங்க எல்லாம்  பெண்களின் அனுமதியோடு தொடும் ஜென்டில் மேன்கலாம். அந்த கன்ஸ்ட்டரக்ஷன் வேலை செய்யுற பையனுக்கு எப்படி மென்மையா தொடுறதுன்னு தெரியலயாம். ஒரு தலித் பெண்ணை ரேப் செய்த ஜாதி இந்துவை கேள்வி கேட்பதை விட்டு விட்டு.  அவர் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் வசதியானவர் உன்னை ரேப் செய்யும் அளவுக்கு கேவலமான செயலை செய்து இருக்க மாட்டார். அவர் நினைத்தால் அழகான எத்தனையோ பெண்கள் அவரோடு வர காத்து இருக்கும் போது உன்னை போல ஒரு கூலி வேலை செய்யும் பெண்ணை அவர் ஏன் தொட வேண்டும் என்று நீதிபதிகளே கேள்வி கேட்கும் இதே நாட்டில் கன்ஸ்ட்டரக்ஷன் வேலை செய்யுற பையனுக்கு கிடைக்கும் நீதியை பாருங்கள் என்கிறோம். தலித் ஆனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுடைய உடல் மீது நடக்கும் அத்து மீரல்களுக்கு அளவு இல்லை. 
 டெல்லி மும்பை சென்னை இங்கதான் ஈவ் டீசிங்குல பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகம் இருக்காம். பாதிக்கபடும்  பெண்கள்  எல்லாம் உயர்குல பெண்களாம். நகரங்களில் வீட்டு வேலை செய்யும் சேரி பெண்கள் பெரும்பாலும் போலிசுக்கு போவதில்லை போனாலும் அஞ்சொ பத்தோ வாங்கிட்டு போமா என்று போலிசு அனுப்பி வைத்துவிடும். ஆனால் இந்த உயர் குலத்து பெண்கள் கேசு கொடுப்பதெல்லாம் யாருன்னு பார்த்தா கருப்பா "அசிங்கமா" போட்டுக்க நல்ல துணி இல்லாம காரு, பைக்குன்னு இல்லமா பஸ்ஸில் பயணம் செய்யும் வாலிபர்கள். போலீசுல கேச கொடுத்ததும் அவன் சேரி பையனா இருந்தா நம்ம போலிசுங்க தேடி போயி  பிடிச்சு வந்து முட்டிக்கு முட்டி தட்டி கேசை  ஊர்ஜிதப்டுத்தி விடும். உன் மூஞ்ஜிக்கு ஐஸ்வர்யா ராய் கேக்குதான்னு சொல்லி சொல்லி அடி அடின்னு அடிப்பாங்க. நம்ம  பசங்க எல்லோரும் நல்லவங்க அவங்க  மேல  அபாண்டமா பழிய போடுறாங்கன்னு சொல்ல வரல. அது என்ன செவப்பா காருல பைக்குள போற பசங்க மேல மட்டும் யாருமே ஈவ் டீசிங் கேசுல கம்ப்லைண்டே கொடுக்க  கொடுக்க மாட்டுராங்கலா இல்லை போலிசு அந்த கேசை எடுக்க மட்டுதான்னுதான் கேள்வி. டெல்லி போன்ற இடங்களில் உள்ள பல்கலைகழகங்களில் நம்ம "உயர் குல" பொண்ணுங்க ஜெண்டர் சென்சிடிவேன்னு ஒன்னு வச்சுக்கிட்டு தலித் பசங்களும் தலித் டீச்சர்களும் மாட்டுனா அவுங்க  வாழ்க்கையையே அழித்த வரலாறுகள் உள்ளன.  பெண் உரிமை பேசுங்க வேணாம்னு சொல்லுல அதை தலித் மக்களுக்கு எதிராக பயன்படுத்தி பழி வாங்காதீர்கள் என்று தான் சொல்கிறோம். 
நகரங்களில் பாலியல் பலாத்காரமாம் அதுவும் நாட்டின் தலை நகரில் நடக்குதாம். நாகரீகமா ஜீன்ஸ் போட்டுட்டு வசதியான வீட்டு புள்ளைங்க கவுரவமான குடும்பத்து பெண்கள் எல்லாம் பாதிக்கப்படுகிறார்களாம். முக்கியாமா ஜாதியில் மிகவும் உயந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கலாம். எல்லா மீடியாவும் போட்டி போட்டுக்கொண்டு பக்கம் பக்கமா செய்திகள் வெளிடிடுகின்றன. டி வி ய திறந்தா அது பத்தி தான் செய்திகள். பாலியல் வன்கொடுமை என்பது கொடுமையான ஒரு விஷயம் தான் செய்பவன் எல்லாம் அயோக்கியந்தான். ஆனால் நகரத்தில் நாகரீகம்  மிக்க மேல் தட்டு ஜாதி இந்து பெண்களுக்காக இவ்வளவு வரிந்து கட்டும் மீடியாக்களும் பெண்ணிய வாதிகளும் நடுநிலை வாதிகளும் தினம் தின்ம பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சாக்கிய (தலித்) பெண்களின் நிலையில் நடுநிலை தவறுவது ஏனோ? நகரத்தில் மேல் தட்டு பெண்களின் மேல்  இருப்பது காமம், ஆனால்  கிராமங்களிலும் நகரங்களில் வாழும் உழைக்கும் தலித் மக்களின் மீது காமத்துக்கு மேல் ஜாதியமும் வெறுப்பும் கலந்து இருக்கிறது. பொத்தாம் பொதுவா பெண்ணியம் பேசுவது எளிது. தலித் பெண்ணியம் பேசுவது சமூகத்தில் அவ்வளவு எளிதல்ல. இதை சொன்னால் பெண்ணை பெண்ணாக பாருங்கள் பாலியல் வன்கொடுமையின் வலி எல்லா பெண்களுக்கும் ஒன்றுதான் என்கின்றனர். அதைதான் நாமும் சொல்கிறோம், பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்படும் தலித் பெண்களுக்கும் அதே வலிதான், அதற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.  அதை  பற்றியும்  பேசுங்கள்.