Wednesday, July 31, 2013

நாங்க தெளிவா கலை எங்க ஊனனும்னு தெரிஞ்சிதான் ஊன்றிக்கொண்டு இருக்கிறோம். ஒடுக்கபட்ட நசுக்கப்பட்ட பின் தங்கிய தாழ்த்தப்பட்ட என்று சொல்வதை விட்டு விட்டு எங்களை பறையர்கள் என்று சொல்லுங்கள். இல்லை சாக்கியர் என்று சொல்லுங்கள். இல்லை பூர்வீக பவுத்தர்கள் என்று சொல்லுங்கள். 


#பரந்து செயல்படுங்கள் /செயல்படுவோம் என்பதே அன்பு வேண்டுகோள்.#
#உலகம் முழுவதும் நாம் பவுத்தத்தை கொண்டுசெல்ல தேவையில்லை#

கொஞ்சம் லாஜிக் உதைக்குது. 


தலித் உயிர்கள் மேல்
..தமிழ் தேசியம் கட்ட ..
முடி முறுக்கும் முட்டாள் ..
சேரியில் இருந்தால் ..
சீக்கிரம் விரட்டு .. ... (வீரமணி)



'தமிழ்குடிதாங்கி' ..
சாக்கிய சேரிகள் கொளுத்தும் ..
..அயோக்கியனுக்கு ..
..கருப்பு கை தந்த பட்டம் .. (வீரமணி)


மூளையை முருக்க சொன்ன
..அண்ணலை மறந்து ..
..முடியை முறுக்கும்
அரை சான் நிரப்பிகள் ..... (வீரமணி)

தமிழ் சாதிக்கு தம்புரா ..
..வாசிக்கும் ..
..பண்டார கூட்டம் ஆ ஹா ..(வீரமணி)

No comments:

Post a Comment