Sunday, July 7, 2013

"தமிழர்" "திராவிடர்" சமூக ஒற்றுமைக்காக நாம் இன்னும் எத்தனை எத்தனை இளவரசன்களை இழக்கப்போகிறோம்.

காதல் திருமணம் கலப்பு திருமணம் ஜாதி ஒழிப்பு என்று பேசும் ஒரு  நாயும் வராது நாம செத்து போனமா ஆணோம்னா? முதலில் நம்மை பலம் வாய்ந்த சமூகமாக மாற்றுவோம். வன்னியனுக்கு இருக்கும் பலத்தில் கால் வாசி இருந்து இருந்தால் கூட நாம் நம் இளவரசனை இழந்து இருக்க மாட்டோம். நினைக்கவே நெஞ்சம் கொதிக்கிறது. நாம் எல்லோருமே பாத்துட்டு இருக்கொம்போது அந்த குழந்தை செத்து பிணமாக வீழ்ந்தது. எதோ சினிமாவில் பார்ப்பது போல இருக்கிறது. காதல் கலப்பு திருமணம் ஜாதி ஒழிப்பு இதுக்கெல்லாம். ஜாதி இந்துக்கள் தயராக உள்ளனர் அவர்களிடம் காசு உள்ளது பணம் உள்ளது அதிகாரத்தை விலை கொடுத்து வாங்க முடியும் அவர்கள் ஜாதியை ஒழிக்கட்டும். நாம் நமது சமூக கட்டமைப்பை சமூக மேம்பாட்டை சமூக முன்னேற்றத்தை பற்றி பேசுவோம் சிந்திப்போம் செயல் படுவோம். ஒரு குழந்தையை பாதுகாக்க முடியாத நாம் எப்படி ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை காக்கப்போகிறோம். ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்களை விட சமூக பெற்றோர்கள் அதிகம் சிந்திக்க வேண்டும். இந்த நாடக காதலை திருமணங்களை  ராமதாசும் ஜாதி இந்துக்களும் எதிர்க்கும் முன்னர் நாம் தான் எதிர்த்து இருக்க வேண்டும். சில திரவிட தமிழ் தேசிய அரசியல் திருடர்களின் சுய லாபத்துக்காக இந்த "காதல்" "ஜாதி ஒழிப்பு"  எனும் சொல்லாடல்கள் சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.  இந்தனால் பாதிக்கப்படுபவர்கள் ஜாதி இந்துக்கள் இல்லை தலித் மக்களே என்று எவிடன்ஸ் நிறுவனம் ஆய்வறிக்கை சொல்கிறது அப்படியெனில் இந்த திருட்டு காதல் திருட்டு கலப்பு திருமண அரசியலில் பாதிக்கபடுவது நமது குழந்தைகளே. "தமிழர்" "திராவிடர்" சமூக ஒற்றுமைக்காக நாம் இன்னும் எத்தனை எத்தனை இளவரசன்களை இழக்கப்போகிறோம். வன்னியர்களிடம் இருந்து நம் பிள்ளைகளை காக்கும் முன்னர் இந்த திராவிட தமிழ் தேசிய திருட்டு கூட்டங்களின் பிரச்சாரங்களில் இருந்து நாம், நம் பிள்ளைகளை காக்க வேண்டி உள்ளது. 

No comments:

Post a Comment