அது முதல்ல நம்ம சமுதாய இயக்கமா? தமிழ் சமுதாய இயக்கமா? முடிவு பண்ணி சொல்லுங்கப்பா?
90 களிலும் நாம் யோசித்தோம். அப்பது நமக்காக யோசித்தோம். 90 களில் நம்முடைய எழுச்சி தலித் எழுச்சியாக இருந்தது. அது திருமாவை மட்டும் நம்பி இல்லை. 90 களில் தலித் இயக்கத்துக்கு திருமா வந்தரே தவிர திருமா வந்து தலித் இயக்கத்தை உருவாக்கவில்லை. தலித் சிறுத்தைகளை விடுதலை சிறுத்தைகள் ஆக்கி தலித் இயக்கத்தை தமிழ் தேசிய இயக்கமாக ஆக்கியவர்தான் இந்த திருமா. தலித் இயக்கம் எப்படி உருவானது எனும் வரலாற்றை மறைத்து தலித் சிறுத்தை இயக்கத்தை உருவாக்கிய அண்ணன் மலை சாமி போன்றவர்களின் வரலாற்றை மறைத்து விட்டு. நான் புலிகளிடம் பாடம் கற்றேன். விடுதலை சிறுத்தைகள் என்பது புலிகளின் வழியில் வந்த கழுதை புலி இயக்கம் என்று பொய்க்கதை எழுப்பி பரப்பிக்கொண்டு இருக்கிறார். என்னைக்கு தலித் சிறுத்தைகள் கழுதை புலி சிறுத்தைகள் ஆச்சோ அன்னைக்கே அது தனது அடிப்படை தத்துவத்தை இழந்து விட்டது. அதன் மூலத்தை இழந்து விட்டது. யாரை காக்க தலித் இயக்கம் உருவக்கப்பட்டதோ அவர்களுக்கு எதிராக போய்விட்டது. தலித் மக்களின் சக்தி தமிழ் தேசியம் எனும் சாக்கடை தேசியத்துக்கு விரயமாக்கப்பட்டுக்கொண்டு கொண்டு இருக்கிறது. நம்முடைய வேலை என்ன நமது இயக்கத்தின் பணி என்ன என்று நம்மை ஞாபக்கப்படுத்த ஒவ்வொரு முறையும் ஒரு இளவரசன் சாக வேண்டுமா? சிந்தியுங்கள் சகோதர்களே.
No comments:
Post a Comment