Saturday, July 6, 2013

நீங்க ஒரு தலித்தை ஏற்றுக்கொள்ள நாங்க இரண்டு சூத்திரர்களை ஏறுக்கொள்ள வேண்டும் என்பது வியாபார ரீதியில் கூட சரியாக படவில்லை.

தலித் இயக்கங்களுக்கு தோழமையோடு வந்து தோல் கொடுப்பவர்களை நாங்கள் விமற்சிக்கவில்லை.  ஜாதி இந்துக்கள் தங்கள் "மொழி" "இன" அரசியலுக்கு தங்கள் வியாபார நோக்கத்துக்கு மீடியாவில் சென்ஷேஷனலா செய்தி போடுவதற்கு  தலித்  மக்களை   தூண்டி விட்டு குளிர் காய்பவர்களை எதிர்க்கிறோம். தலித்துக்கள் பலம் வாய்ந்த சமூகமாக ஆக வேண்டும். அதற்க்கு எங்களோடு கைகோப்பவர்களை வரவேற்கிறோம். பார்ப்பன எதிர்ப்பு ஈழம் திராவிட ஒற்றுமை சிங்கள எதிர்ப்பு தமிழர் ஒற்றுமை தமிழ் சமூக ஒருங்கிணைப்பு ஜாதி ஒழிப்பு காதல் திருமணம் என்று சொல்லிக்கொண்டு  தலித்துக்களின் குறிக்கோளை திசை திருப்புபவர்களை விமர்சிக்கிறோம். எங்களுக்கு எங்கள் சமூக ஒற்றுமைக்கு சமூக முன்னேற்றதுக்கு சமூக விடுதலைக்கு திராவிட இன வெறியர் "ராமசாமியும்" தமிழ் தேசிய இனவெறியர் "பிரபாகரனும்" எந்த விதத்திலும் பயன் தரப்போவதில்லை அவர்களை எங்கள் மீது தினிப்பதை சேரிக்குள் கொண்டு வந்து வியாபாரம் செய்வதை விட்டு விட்டு  ஜாதி இந்துக்களுக்கு அண்ணலை சொல்லி கொடுங்கள் அண்ணல் சொல்லிக்கொடுத்த மானுட தம்மத்தை சொல்லிக்  கொடுங்கள் என்கிறோம். திருந்த வேண்டியது அம்பேத்கரின் பிள்ளைகள் இல்லை.  ராசாமியின் பேரன்களும்  பிரபாகரனின் தம்பிகளும். நீங்க ஒரு தலித்தை ஏற்றுக்கொள்ள நாங்க இரண்டு சூத்திரர்களை ஏறுக்கொள்ள வேண்டும் என்பது வியாபார ரீதியில் கூட சரியாக படவில்லை. 

No comments:

Post a Comment