Friday, July 5, 2013

இளவரசன் மரணம் - தற்கொலையா? கொலையா?



தற்கொலை என்றால் நம் சகோதரர்கள்  மன பலம் அற்றவர்கள் என்று அர்த்தம். அது கொலை என்றால் நமது சகோதர்கள் தன்னை காத்துக்கொள்ளும் அளவுக்கு பலம் உள்ளவர்களாக இல்லை என்று அர்த்தம்.  அவர்களை பாது காக்கும் அளவுக்கு சமூகம் பலம் அற்று உள்ளது என்று அர்த்தம்.  இப்போதைக்கு நம் மக்களுக்கு தேவை மன பலம் உடல் பலம் பொருளாதார பலம் அரசியல் பலம்  சமூக பலம். வன்னியர்கள் நெட்வொர்க் அவர்கள் அரசியல் செல்வாக்கு  பண பலம் ஆள் பலம் என்று எப்படி கட்டுக்கோப்பாக உள்ளனர்.  நாம் என்ன செய்து கொண்டு இருந்தோம். நாம் இப்போதும் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். பொது நீரோட்டத்துக்கு அடிமை வேலை செய்து கொண்டு இருந்தோம். செய்து கொண்டு இருக்கிறோம். காதல் திருமணம் ஜாதி ஒழிப்பு என்று திராவிட தமிழ் தேசிய  திருட்டு கூட்டம் மேடை பேச்சு பேசிவிட்டு போய் விடும். நாம் பாதிக்கப்படும்போது ஒரு நாயும் வராது. இது இளவரசன் எனும் தனி மனிதன் பிரச்சனை இல்லை சமூக பிரச்சனை. இப்படி ஒரு பிரச்சனை வரும்போது அதை சமாளிக்கும் அளவுக்கு நமது சமூகம் நமது குடும்பங்கள் நமது சமூகத்தில் உள்ள தனி மனிதர்கள் தயார் நிலையில் உள்ளனரா? அதற்க்கான பலம் நம்மிடம் உள்ளதா? இளவரசன் சாவு நம்மை பலம் அற்றவர்கள் என்று காட்டுகிறது. சமூக அக்கறையோடு நம்மோடு வருபவர்களே நம் நண்பர்கள். ஜாதிய ஒழிக்கிறோம் நாம் எல்லோரும் தமிழர் ஆயிடுவோம் நாம் எல்லோரும் திராவிடர் ஆயிடுவோம் என்பவர்கள் திருடர்கள். திருடர்களிடம் ஜாக்கிறதையாக இருங்கள். சமூகத்தை பலப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்வோம். "கலப்பு" கல்யாணம் பண்ணி இவுங்க ஜாதிய ஒழிக்கல இன்னும் ஜாதி துவேஷத்தை தூண்டிக்கொண்டு இருக்கிறார்கள். நாம் மற்ற சமூக பெண்களையோ ஆண்களையோ வெறுக்க சொல்லவில்லை. அதற்கான தனி மனித சமூக பலத்தை நாம் முதலில் ஏற்படுத்திகொள்வோம் என்கிறேன். ஒரு இளவரசனுக்கே நம்மால் பாது காப்பு கொடுக்க முடியவில்லையே இதுபோல ஆயிரம் ஆயிரம் இளவரசன்கள் உள்ளனர் நம்மால் பாது காப்பு கொடுக்க முடியுமா? காதல் திருமனங்கள் இயற்கையா நடப்பது அதை எதிர்க்க ஒரு கூட்டம் என்றால் அதை ஆதரிக்கிறோம் அதை செய்து கட்டுவோம் என்று எமாற்றி திரியும் மற்றொரு கூட்டம். இந்த பொரிக்கிகளோடு சேர்ந்து அழிந்து போவதை விட்டு பொறுப்பாக சமூகத்துக்கு என்ன செய்வோம் என்று யோசியுங்கள். பறையர் சங்கம் ஆதி திராவிடர் சங்கம் சாக்கியர் சங்கம் அண்ணல் அம்பேத்கர் சங்கம் புத்த சங்கம் என்று சேரிகளில் நமக்கான அமைப்புகளை உருவாக்குங்கள். நமது சமூகம் பொருளாதார் சமூக அரசியல்  மெய்ஞான மேம்பாடடைய வழி செய்யுங்கள். நமது பிள்ளைகளுக்கு மனம் பலம் கொள்ள தியான பயிற்சி மையங்களும் தங்களை எதிரிகளிடம் இருந்து காத்துக்கொள்ள தற்காப்பு கலை பயிர்ச்சி வகுப்புகளும் ஆரம்பியுங்கள். சும்மா பொரிக்கித்தனமா  மேடைகளில் பேசி விட்டு போகும் பொரிக்கிகளை பற்றியும் அந்த பொரிக்கிகளின் பின்னால் கோஷமிட்டு போய்க்கொண்டு இருக்கும் பொரிக்கிகளைப் பற்றியும் நமக்கு கவலை இல்லை. பொறுப்புள்ள நாம் பொறுப்புள்ள சமூகத்தை அமைப்போம். நம்மை நாம் காத்துக்கொள்ள பொறுப்பான தலைமையும் பொறுப்பாண இயக்கமும் நமக்கு தேவை. பிறப்பால்  நான் பறையன் ஆனால் நான் எல்லோருக்கும் பொது எனும் ஓட்டு பொரிக்கிகள் நமக்கு தேவை இல்லை. அண்ணல் போன்ற சமூக அக்கறை உள்ள தலைவர்கள் நமக்கு தேவை.  அண்ணல் அம்பேட்கர் சொல்கிறார், "நான் எல்லோருக்கும் பொதுவான  உலகளாவிய தலைவர் என்று எப்போதும் சொல்லிகொண்டது இல்லை. என் மக்களின் பிரச்சனைகளை சுமக்கும் அளவே  என்னுடைய பலம் உள்ளது. நான் மற்ற பிரச்சனைகள் முக்கியம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எனக்கு தெரியும் நாம் வாழ போவது மிகவும் குறைந்த காலமே,எனவே என் மக்களுக்கு சேவை செய்வதை தவிர வேறு எதுவும் செய்ய நான் ஆசை பட வில்லை." அவ்வளவு பெரிய மகான் தனது மக்களுக்கு செய்வதை சேவை செர்விஸ் என்கிறார். அப்படி பட்ட மகான் நமக்கு தேவை. அரை வேக்காடுகள் நமக்கு தேவை இல்லை. நமக்கு என்று ஒரு தலைவன் இல்லை என்றாலும் பரவாயில்லை. அண்ணலின் வார்த்தைகள் நம்மை வழி நடத்தும். அதுக்கு மேல் நாம் ஓன்னும் சிந்திச்சி பெருசா கிழிக்க போவது இல்லை. அவர் சொன்னதை ஜஸ்ட் பின்பற்றினாலே போதும். நாம் எல்லா பலமும் பெறுவோம்.  நம் குறிக்கோளை அடைவோம்.  

"I have never claimed to be a universal leader of suffering humanity. The problem of the untouchables is quite enough for my slender strength. I do not say that other causes are not equally noble. But knowing that life is short, one can only serve one cause and I have never aspired to do more than serve the Untouchables." Babasaheb Dr. B.R. Ambedkar 

தமிழ் நாட்டில் இருக்கும் அனைவரும் தமிழர்களே. 

எப்ப அதுக்கு தமிழ் நாடுன்னு பேரு வந்துச்சி. அதுக்கு முன்ன அங்க இருந்த மக்களின் பேரு என்ன? 

சேரிகளில் நமக்கான அமைப்புகளை உருவாக்குங்கள். அதுக்கு பெயர் பறையர் சங்கம் ஆதி திராவிடர் சங்கம் சாக்கியர் சங்கம் அண்ணல் அம்பேத்கர் சங்கம்  ரெட்டை மலை பறையனார் சங்கம்  பண்டிதர் அயோத்தி தாசர் சங்கம்  புத்த சங்கம் என்று என்ன பெயராவது வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் முழுக்க முழுக்க நமது சமூகம் பொருளாதார் சமூக அரசியல் மெய்ஞான மேம்பாட்டுக்கான சங்கமாக அதை செய்யுங்கள். தயவு செய்து சிறுத்தைகள் நம்ம கட்சி புலிகள் நம்ம கட்சி என்று சொல்லி நம்மை ஒருங்கிணைய விடாமல் தடுப்பவர்களை நம்பாதீர்கள். சிறுத்தைகள் முழுக்க முழுக்க புலி தேசிய கட்சி. அவர்கள் நம் இரத்தத்தை மட்டுமே உறிஞ்சும் பேராசயிட்ஸ். அவர்களால் நமக்கு எந்த வலிமையையும் பாதுகாப்பும் வரப்போவது இல்லை. அவர்கள் புலிகளை கொண்டு வந்து சமூகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை செய்து விட்டார்கள். அவர்களிடம்  இருந்தே நாம் நம் சமூகத்தை காக்க வேண்டியுள்ளது. திராவிட தமிழ் தேசிய திருட்டு கூட்டங்கள் சொல்லிக்கொடுப்பதை சேரிக்கு கொண்டு வரும் வேலையை அந்த  ஏஜெண்டுகள் செய்து கொண்டு இருக்கின்றனர்.  அவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். 

No comments:

Post a Comment