Sunday, July 14, 2013

தமிழன்னு நீ என்னை சொன்னா நான் உன்னை செருப்பால் அடிப்பேன்னு நான் சொன்னேன்.

தமிழன்னு வந்தா செருப்பால அடிப்பேன்னு சொன்னான். தமிழன்னு நீ என்னை சொன்னா நான் உன்னை செருப்பால் அடிப்பேன்னு நான் சொன்னேன். நீ பறையன் என்றால் உன்ன மொழி என்ன? நீ யும் தமிழில் தான் பேசுகிறாய் அதனால் நீயும் தமிழன்தான் என்கிறான். என்ன கொடுமை சார் இது. நம்ம மடையர்களுக்கு இது புரியல. நான் இந்து நான் இந்து என்னை கோயிலுக்குள்    விடு என்று கேட்டால் நீ வந்தால் தீட்டு என்பான். நான் இந்து இல்லை சாக்கியன் என்று சொன்னால். நீயும் இந்துதான் கோயிலுக்கு வா என்று கோயிலை திறந்து வைப்பான். அது போலத்தான் தமிழன் எனும் அடையாளமும். நானும் தமிழன்தான் என்று அவன் பினால் நாய் மாதிரி ஓடினால் துரோகி துரோகி என்று  அடித்து விரட்டுவான். நான் தமிழன் இல்லை பறையன்னு செஞ்சி நிமித்தி நில்லு உன் வீட்டு வாசலுக்கு ஓடி வந்து அவன் நாய் மாதிரி நிப்பாண். இதுதான் ஜாதி இந்துக்களின் மனோ நிலை. புரிந்து கொண்டால் உனக்கும் விடுதலை. 

No comments:

Post a Comment