Wednesday, March 27, 2013

உங்களை போன்ற அறிவாளிகள். புத்த தம்மத்தில் ஆர்வம் கொண்டவர்கள். புத்தர் சொன்ன தம்மத்தை பற்றி பேசாமல் தேர்வாதா மகாயானா என்று காலத்தை ஒட்டிக்கொண்டு இருப்பதுதான் கொடுமை. ஹீனயனம் மகாயானம் என்று புத்தருக்கு பின்னர் வந்த யனாக்களை பேசி மேலும் மக்களிடம் பிளவுகளை அதிகப்படுத்தாமல். புத்த தம்மத்தை பேசுங்கள். எல்லா யானாக்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் பொதுவான தம்மத்தை பற்றி பேசுங்கள். என்மார்க்கம் எல்லோருக்கும் பொது. பஞ்ச சீலம் எல்லோருக்கும் பொது. தசபரமிதா எல்லோருக்கும் பொது. இதை விட்டு விட்டு ஹீனம் மகாயானம் தேரவாதா என்று பிரிவினை வாதிகள் பேசுவதையே உங்களை போன்ற மனித நேயம் மிக்கவர்கள் பேசுவதுதான் கொடுமை. 


தேரவாதம் எனும் பிரிவினை வாதத்துக்கு எதிர்ப்பு மகாயானம் எனும் மற்றொரு பிரிவினை வதம் இல்லை. புத்தம் தம்மம் சங்கம் எனும் மூலம். மூலத்திற்கு போவும். புத்த தம்மத்தை ஏற்க்க சொல்வோம். என்மார்க்கமே அடிப்படை. அதுவே புத்த தம்மம். 


சிங்கள இனவாதிகள் இருக்கிறார்கள் என்று காரணம் காட்டி தமிழ்  இனவாதிகளாக மாறுவதும் தமிழ் இனவாதிகள் இருக்கிறார்கள் என்று காரணம் கட்டி சிங்கள இனவாதிகளாக மாறுவதும் சமூகத்துக்கு நல்லது இல்லை. 

No comments:

Post a Comment