Wednesday, March 13, 2013

#தமிழ் மாணவர்கள் மனித நேயம் மிக்கவர்கள். மனிதர்கள் யார் பாதித்தாலும் குரல் கொடுப்பவர்கள்.#

இலங்கையில் உள்ள சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்து உருவாக்கிய நாடுதான் இலங்கை. ஆங்கிலேயர் ஆட்சியில் இருவரும் இணைந்தே இருந்தனர். அப்போது எங்களை தனியா பிரித்து கொடு என்று எவரும் கேட்கவில்லை. இப்போது பெரும்பான்மை தமிழர்கள் கேட்கவில்லை. இந்து மதவாத தீவிரவாத தமிழ் இனவாத பிரிவினை வாத கூட்டம் மட்டுமே கேட்கிறது.  ஆனால் காஸ்மீர் அப்படி இல்லை. அது ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்திய எல்லைக்கு அப்பால் இருந்தது. பாகிஸ்தானும் இந்தியாவும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட எல்லையில் இருந்தது. காஷ்மீர்  இஸ்லாமிய நவாப்பால் ஆளப்பட்ட தனி நாடாக இருந்தது. அந்த நாட்டை சுதந்திரத்துக்கு பின்னர் ராணுவ உதவியுடன் பாகிஸ்தானும் இந்தியாவும் பங்கு போட்டுக்கொண்டனர். நீங்கள் மனித நேய புலிகளா இருந்தால் முதலில் காஷ்மீரத்தை அதன் சொந்த காரர்களிடம் கொடுங்கள். ஐ நா சபை சொன்ன வாக்கெடுப்பை காஷ்மீரத்தில் நடத்த இந்தியாவை நிர்பந்த படுத்துங்கள். ஐ நா சொன்ன தீர்மானத்தை நிறை வேற்றாத இந்தியாவையும் பாகிஸ்தானையும் போர் குற்றவாளிகளாக அறிவிக்க சொல்லுங்கள். ஐ நா சபை அறிவிப்பை மீறி இந்திய ராணுவத்தை அங்கு நிறுத்தி உள்ள மன்மோகன் சிங்கை போர் குற்றவளியா அறிவிக்க சொல்லுங்கள். நீங்கள் நியாயஸ்தர்கள் எனில் முதலில் இதை செய்யுங்கள். உங்கள் நாட்டில் உள்ள மனித உரிமை மீறல்களை கேள்வி கேளுங்கள். அப்புறமா இலங்கைக்கு புத்தி  சொல்லுங்கள். 

#காஷ்மீர்: தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் தமிழக வீரர் பலி# 


 இலங்கையில் தமிழ் தீவிரவாதிகள் துரோகிகள் என்று  தமிழ்  வீரர்களை சுட்டு  கொன்றதை. இப்படி "தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் வீரர் பலி"  என்று   செய்தியா போட்டது இல்லையே. 

 பிரபாகரன்ஏம்பா, நீங்க உண்ணா விரதம் இருந்தா இலங்கைக்கு எதிரா தீர்மானம் கொண்டுவருவாங்க என்றால். அதை ஏன் ராஜிவ் காந்தியின் அமைதி படை செய்யல? அப்போ உன் போன்ற தமிழர்கள் ஏன் உண்ணா விரதம் பண்ணல? அட, நான் செத்தப்ப கூட போராட்டம் பண்ணிலியே! 

 தேசிய தலைவருக்கு சாவு இல்லை. அவர் செத்து போயிட்டார்னு எழுது நீ ஒரு சிங்கள கை கூலின்னு ஸ்டேடஸ் போடுவாங்க பாருங்க. 


#பீமராஜ் பிரபாகர்க்கு பிரபாகரன் மேல காண்டு இல்ல, அவர் பேரை சொல்லி ஏமாத்தரவங்க மேலேதான் கொல காண்டு.#

தமிழ் தேசியம் எனும் பெயரில் நிறைய தமிழ் பேசும் மக்களை துரோகிகள் என்று கொன்று குவித்த பிரபாகரன் மேல் சாக்கிய பறையனாருக்கு செம காண்டு. 

#தமிழ் ஈழம் அமைப்போம்#

இலங்கையில் இந்து ராஷ்டிரம் அமைப்போம்னு சொல்லுங்களேன். 



# ஈழம் அமைப்போம் #

முதல்ல கிழக்கு மாகான மக்கள் மலையக மக்கள் தமிழ் பேசும் முஸ்லீம் சிறுபான்மை மக்கள் உங்களோடு சேர விரும்புகிறார்களா? என்று முதலில் வாக்கெடுப்பு நடத்தி விட்டு அப்புறமா ஈழம் அமைங்க. 

No comments:

Post a Comment