Thursday, March 28, 2013

#தமிழ்நாட்டில் உள்ள சாதிய சிக்கல்களோடு ஈழத்தை ஒப்பிட முடியாது. அந்த அளவிற்கு கொடூரமான வன்கொடுமைகள் இங்கே நடைபெற்றதற்கான சான்றுகள் ஏதுமில்லை.#

தமிழ் நாட்டில் உள்ளதுபோல ஜாதி சிக்கல் ஜாதிய வன்கொடுமை ஒரிசாவில் இல்லை. ஒரிசாவில் ஜாதியே இல்லை. தீண்டாமையே இல்லை என்று அர்த்தம் இல்லை.  அடங்கி கிடந்தால் அடக்கு முறை இருக்காது. எதிர்த்து போராடும்போது அடக்கு முறை ஏவி விடப்படும். முப்பது வருட புலிகளின் அடக்குமுறையால். இலங்கையில் தலித் மக்கள் அடக்கி வைக்கப்பட்டு உள்ளனர். இப்போதுதான் மீண்டும் தலித் இயக்கங்கள் துளிர் விட ஆரம்பித்துஉள்ளன. பொருத்து இருந்து பருங்கல். பாய்ச்சல் அதிகம் இருக்கும். 

சிங்கள இனவாதத்தை தமிழ் இன வாதத்தாலும் தேரவாதா  பிரிவினை வாதத்தை மகாயானா பிரிவினை வாதத்தாலும் ஒழிக்க முடியாது. மூலத்துக்கு போங்கள். புத்தரின் அடிப்படை தத்துவம், தம்மம். அது சகல உயிர்களுக்கும் பொது. 



ஒரு சிங்கள பவுத்தர் பேசுவது தேரவாத பிரிவினைவாதம்  என்றால் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பது தமிழ் பவுத்த மகாயான பிரிவினைவாதம் என்கிறேன். 



புத்தத்தில் தேரவாத மஹாயானா என்று பிரிவுகள் இருக்கிறதாம். என்ன பிரிவுகள்? என்று கேட்டால் செத்த பிறகு கருமாந்திரம் எப்படி பண்ணுவது என்பதில் இருவரும் வேறு படுகிறார்கலாம். உயிரிரோடு இருக்கும்போது இருவரும் தம்மத்தை பின்பற்றுகிறார்களா என்று கேட்டால். செத்த பிறகு அவர்கள் அவர்கள் பின்பற்றுவதை சொல்கிறார்கள். தம்மம் என்பது புத்தர் காட்டிய பாதை அதை ஹீனம் மஹா என்று பிரிக்காமல் தம்மமாக பாருங்கள். மூலத்துக்கு போங்கள். 

#யாழ்ப்பாணம் சங்கானை என்ற இடத்தில் பல வித பலங்களோடும் போலீஸ் உதவியுடனும் எழும்ப முற்றபட்ட ஆதிக்க சக்திகளை, மள்ளர் /பள்ளர் தனியொரு சாதிப் பிரிவினராக நின்று வெட்டித்தள்ளினார்கள்.# 

இது எப்போது நடந்தது. இப்படி தமிழ்  நாட்டில் கூட நடந்தது. இன்னும் நடக்கிறது. அதுக்காக தமிழ் நாட்டில் ஜாதியே இல்லையா? தீண்டாமையே இல்லையா? 


# புலி இயக்கத்தில் அரசியல் பொறுப்பாளர் ஒரு அம்பட்டர். மாபெரும் தளபதிகள்,மள்ளர் /பள்ளர் சமூகத்தை சார்ந்தவர்கள்.#

 தமிழ் நாட்டில் கூட மிகவும் திறமை வாய்ந்த அடிமைகள் தி முக அதிமுக காங்கிரஸ் பி ஜே பி என்று எல்லா கட்சிகளிலும் வேலை செய்து கொண்டு இருக்கின்றன. மிகவும் உயர்ந்த பதவிகளில் கூட இருக்கின்றன. அதை விட சிறப்பாக அடிமை வேலை செய்ய ஒரு கட்சி அதில் பல திறமை சாலி அடிமைகள் உள்ளனர். வி சி கே எனும் அந்த கட்சி புலிகளின் ஏஜெண்டாகவும் தி முகா வின் எஸ் சி பிரிவாகவும் இயங்கிக்கொண்டு இருக்கிறது. பாவம் இலங்கை தலித் மக்கள் என்ன சொல்லுவார்கள். இபப்டி ஏஜெண்டுகளை பற்றி பேசமால். இலங்கை வாழ் சக்கிலியர் / நளவர் / பாறையர் / பள்ளர் பற்றிய சமூக பொருளாதார கல்வி வளர்ச்சி பற்றிய ஆவணம் ஏதாவது இருந்தால் கொடுங்கள். அங்கு மக்கள் முன்னேறி உள்ளனர். அவர்கள் தமிழ் நாட்டு தலித் மக்கள்  போல  இல்லை என்று ஒத்துக்கொள்கிறேன். குறைந்தது அங்கு சக்கிலியர் / நளவர் / பாறையர் / பள்ளர் மக்களின் எத்தனை பேர் நில உரிமையாளர்கள். ஈழம் என்று புலிகள் வரையறுத்து உள்ள பகுதிகளில் எவ்வளவு நிலங்கள் வெள்ளாளர்களுக்கு சொந்தமாக உள்ளது? எவ்வளவு சதவிகித நிலம் சக்கிலியர் / நளவர் / பாறையர் / பள்ளர் மக்களுக்கு சொந்தமாக உள்ளது எனும் கணக்கை சொல்லுங்கள். முடியுமா? 


  #டேய் எளியசாதி நாயே Mullai Pagalavan பிரபாகரன் போன்ற மீன்பிடிக்கும் எளியசாதி செம்படவர்கள் , எங்கவீட்டு பெண்ணுங்க கால் செருப்பு துடைக்க கூட தகுதியற்றவர்கள். #

இலங்கையில் ஜாதியே இல்லையாம்பா? புலிகள்  ஜாதிகளை ஒழித்து  விட்டார்கலாம்பா? 

No comments:

Post a Comment