Monday, March 4, 2013


# இனப் படுகொலையில் எந்த சமரசமும் இல்லை. மனித உரிமை எங்கு மீறினாலும் குரல் கொடுப்பதுதான் மனித நேயம். #

மனித உரிமை மீறல்கள் எங்கு மீறினாலும் குரல் கொடுப்பதுதான் மனித நேயம். அதை தான் நாங்கலும் கேக்குறோம். இலங்கை ராணுவம் மட்டும் மனித உரிமை மீறல்களை செய்ததா? புலிகளும் செய்தார்களா? ஆயுதம் ஏந்தி போரிட்டதை நியாயம் என்றே வைத்துக்கொள்வோம். எங்கள் கேள்வி அந்த ஆயுதங்கள் வாங்க புலிகளுக்கு எப்படி பணம் கிடைத்தது. வருஷத்திற்கு ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்லப்படுகிறது. அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது? அந்த பணம் எல்லாம் கருப்பு பணமா? ஊழல் பணமா? பல நாடுகளில் இருந்து வந்த அந்த பணம் எப்படி மாற்றப்பட்டது. பன்னாட்டு கடத்தல் குழுமங்களோடு புலிகளுக்கு தொடர்பு இல்லையா? பன்னாட்டு பயங்கர வாதிகளோடு புலிகளுக்கு தொடர்பு இல்லையா?  முப்பது வருடங்கள் ஒரு தனி சாம்ராஜ்யமே நடத்தப்பட்டு இருக்கிறது. புலிகள் ஆயுதம் கடத்தியது கஞ்சா கடத்தியது எல்லாம் உலகின் பல நாட்டு நீதி மன்றங்களால் உறுதி செய்யப்பட்டு உள்ளது அவை எல்லாம் மனித நேய மீறல்கள் இல்லையா? 

No comments:

Post a Comment