Friday, March 1, 2013

ஜாதி ஒழிப்பு தீவிர வாதிகளிடம் பாத்து பத்திரமா இருங்க ஜாதிய ஒழிக்கரோம்னு சொல்லி நம்ம அடையளத்தை ஒழித்துவிட போகிறார்கள். நமது சொந்தங்களை அடையாளம் கண்டு அவர்களை ஒன்று கூட்டி நமது  நலனுக்கு நாம் போராட வேண்டியுள்ளது. இயற்கையே உனக்கு மிக்க நன்றி அடுத்தவர்கள் கண்களுக்கு நாங்கள் தீண்டத்தகாத மக்களாக தெரிகிறோம் அது எங்களை இணைக்கும் பாலமாக உள்ளது என்று நமது தந்தை சிவராஜ் அவர்கள் சொன்னார்கள். அடுத்தவர்களின் பொய் பிரச்சாரத்துக்கு மயங்கி நாம் ஹிந்து நாம் தமிழர் நாம் திராவிடர் எனும் அடையாளங்களுக்குள் போய் ஐக்கியம் ஆகிய பறையர்களை பற்றி நமக்கு கவலை இல்லை. நாம் யார் என்பதையும் நமது அடையாளம் என்ன என்பதையும் உரக்க சொல்லி எனக்கு யாரும் அடிமை இல்லை நான் யாருக்கும் அடிமை இல்லை என்று முழங்கும் பறையர்களே நமக்கு தேவை. பறையர் என்பது ஜாதி அல்ல. ஜாதிக்கு வெளியே உள்ளவர்கள் வருணத்துக்கு அப்பாற்பட்டவர்களே பறையர்கள்.  பறையர் எனும் அடையாளமே ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் என்று  அர்த்தம். இது மொழி இன ஜாதி அடையலாம் அல்ல ஆதிக்கத்தை எதிர்த்த பூர்வீக குடிகளின் அடையாளம். ஒருகாலத்தில் ஆதிக்கத்தை எதிர்த்த போராளிகள் எல்லாம் ஊரை விட்டு சேரிக்கு விரட்டப்பட்டு நம்மோடு இணைந்து பறையர்கள் ஆனார்கள். இப்போது ஊருக்கு உள்ளே உக்காந்து ஜாதியை ஒழிக்கும் போராளிகளை நம்ப வேண்டாம். ஜாதியை விட்டு விட்டு பறையர்களாக நம்மோடு வந்து சேரியில் குடியேறும் போராளிகளை வரவேற்ப்போம். ஊர் தெருவில் உக்காந்து கொண்டு ஜாதி ஒழிப்பு பேசும் ஏமாற்று பேர்வழிகளை விரட்டி அடிப்போம். நாம் திரவிடர் தமிழர் இந்து என்று ஊரான்களுக்கு ஒத்து ஊதும் அடிமைகளை சந்தோஷமாக ஊருக்குள் அனுப்பி வைப்போம்.  ஆமாண்டா நான் பறையன்தான் பறைச்சிதான்  எப்போது நாம் உரக்க சொல்கிறோமோ அப்போதுதான் நாம் விடுதலை அடைந்ததாக அர்த்தம்.

No comments:

Post a Comment