Monday, March 4, 2013

நெல்லையில் தேவேந்திரர்கள்  ஆயுதம் எடுத்தால் தான் நாம் தலை நிமிர்ந்து இருக்கிறோம் எனும் பொய் பறப்பப்பட்டு வருகிறது. அது உண்மை அல்ல. தேவேந்திர்களின் அரசியல் பொருளாதார வளர்ச்சிதான் இன்று தென் தமிழகத்தில் நாம் தலை நிமிர்ந்து இருக்க காரணம். ஆயுதம் எடுத்து போராடியது நமக்கு அதிக பாதிப்பை தான் கொடுத்தது. இன்றும் நிறைய குடுமபங்கள் அந்த பாதிப்பில் இருந்து வெளியே வராமல் கஷ்டப்பட்டுகொண்டு இருக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் முப்பது ஆண்டுகள் மிக வேகமாக நமது மக்கள் அரசியல் பொருளாதார துறைகளில் எழுச்சி பெற்றனர். 1980 களில் இந்தியா முழுதும் ஏற்பட்ட எழுச்சி தென் தமிழகத்தையும் தாக்கியது. எண்பதுகளில் பெரும்பான்மையான தேவேந்திரகள் படித்து பட்டம் பெற்று சென்னை மும்பை டெல்லி என்று பெரு நகரங்களில் குடியேறியதும். சிங்கப்பூர், மலேசியா, குவைத் என வெளி நாடுகளுக்கு சென்றதும் அவர்களை பொருளாதரத்தில் மேம்படுத்தியது. இதையெல்லாம் மாறைத்து கத்தி எடுத்துதான் அவர்கள் தலை நிமிர்ந்தார்கள் என்று சொல்வது வரலாற்று புரட்டு. 

No comments:

Post a Comment