# இந்த இலங்கை புத்த துறவிகளுக்கு அறிவு வேண்டாமா ... ஒரு இனம் அழிக்கப்பட்டு இருக்கின்றது....அந்த இடத்தில் மக்கள் மனசு கொதித்திருக்கும்...அங்கு சென்றால் வேண்டாத செயல்கள் நடக்க கூடும் ...இது சாதாரண அறிவு....அதைகூட தெரியாதவன் எப்படி ஒரு புத்த துறவியாய் இருக்க முடியும்!!!...அப்போ சும்மா பேருக்குத்தான் துறவி...மண்டையில் ஒன்னும் இல்லை...இப்படித்தான் எல்லா மதத்திலேயும் இருக்காங்க ஒரு கும்பல்!!! #
#தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த இலங்கை புத்தபிட்சுகள் மீது தாக்குதலை தவறு என்று கண்டிப்பது ஒரு மேலோட்டமான பார்வையோ என்று தோன்றுகிறது. இன்று உலகில் மாபெரும் இனப்படுகொலையில் ஈடுபட்ட சிங்க இனவாத அரசுக்கு அங்கு பவுத்த வெறியே அடித்தளமாக இருக்கிறது. சிங்கள அரசு, சிங்கள் ராணுவம், பவுத்த மதம் மூன்றும் ஒன்றோடன்று பிரிக்க முடியாமல் கலந்துவிட்டன. ஒரு இலங்கை புத்த பிட்சுவையும் ஒரு இலங்கை ராணுவவீரனையும் பரிரித்துப்பார்க்கக் கூடிய இடம் இருக்கிற்தா? ஒரு காயம்பட்ட சமூகத்தின் அடையாள அரசியலை வெறுமனே இனவெறி என்று மட்டும் சுருக்க முடியுமா?#
வன்னியர் பொன்னை கடத்திட்டு போய் திருட்டு கல்யாணம் பண்ணிட்டாங்க அதனால அந்த பெண்ணோடு அப்பா இறந்து போயிட்டாரு அதனால வன்னியர் உறவுகள் எல்லாம் உணர்ச்சி வாசப்பட்டு வீட்டை கொளுத்திட்டு சேரியை தாக்கினார்கள். அதை ஒரு காயம்பட்ட ஜாதியின் அடையாள அரசியாளாக பார்க்க வேண்டுமே ஒழிய ஜாதி அரசியல் என்று சொல்லிவிட கூடாது என்று சொல்வது போல உள்ளது. கிரைம் இஸ் கிரைம். அதை வன்னியன் செய்தாலும் கிரைம்தான் தலித் செய்தலும் கிரைம் தான். தமிழன் செய்தாலும் கிரைம்தான் சிங்களவன் செய்தாலும் கிரைம்தான்.
No comments:
Post a Comment