Sunday, March 10, 2013


சீமான் பேச்சை கேட்டேன். புல்லரிக்குதுபா. என்னா லாஜிக்கு. இந்திய அரசுக்கு சாலஞ்சு பண்றாராம். நீங்க இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி கொடுத்தா  நாங்கள் புலிகளுக்கு பயிற்சி கொடுப்போம். நீங்க ராஜபக்ஷேவை சிவப்பு கம்பளம் விரிச்சி வரவேற்றாள் நாங்கள்  
பாகிஸ்தான் தீவிரவாதிகளை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்ப்போம். நீங்கள் செருப்பால் அடித்தால் நாங்களும் செருப்பால் அடிப்போம். என்ன சொல்ல வராரு. புலிகளுக்கு பயிற்சி கொடுப்பது சிங்களராணுவத்துக்கு பயிற்சி கொடுப்பது போல தவறான செயல் என்கிறாரா? ராஜபக்ஷேவை அழைப்பது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறானது தீவிர வாதிகளை ஆதரிப்பது என்கிறாரா? பாகிஸ்தானிய போராளிகள் தீவிரவதிகள் என்று சொல்வது போல புலிகளும் தீவிரவாதிகள் என்று ஒப்பு கொள்கிறாரா? சிங்கள படைகளுக்கு பயிற்சி கொடுப்பதும் ராஜபக்ஷேவை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பது செருப்பால் அடிப்பதுக்கு சமம் என்பது போல புலிகளுக்கு பயிற்சி கொடுப்பதும் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்ப்பதும் செருப்பால் அடிப்பதற்கு சமம் என்கிறாரா? எதோ நியாயமா பேசுற மாதிரிதான் தெரியுது. அவர் ஆழ் மனம் புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்லாமல் சொல்கிறது என்பது அவர் பேசுவதில் தெரிகிறது. 

No comments:

Post a Comment