Wednesday, March 6, 2013

பவுத்தர்கள் இன மத வெறியர்கள் பினம் தின்னிகலாம். முஸ்லீம்கள் பயங்கர வாதிகள் மத வெறியர்கள். வட நாட்டு இந்துக்கள் காவி தீவிர வாதிகள் மத வெறியர்கள். ஈழ இந்துக்கள் அப்பாவிகள். தமிழ் நட்டு இந்துக்களில்  பார்ப்பனர்கள் மட்டும் அயோக்கியர்கள். மத்தவங்க எல்லாம் தங்கங்கள். ஒழுக்க சீலர்கள். சகிப்பு தன்மைக்கு தாத்தாக்கள். மூட நம்பிக்கை ஜாதி பேதம் எதுவுமே அவர்களுக்கு தெரியாது அவர்கள் வாழ்வது பகுத்து அறிவு பகலவன் ராமசாமி அவதரித்த பூமி. இவர்கள் புலிகளுக்காக கஞ்சா கடத்தியது இல்லை. மீன் பிடிக்க போகிறோம் எனும் பெயரில் ஆயுதம் கடத்தி கொண்டு போய் புலிகளுக்கு விற்றது இல்லை. தலித் குடிசைகளை கொளுத்தியது இல்லை. இவர்கள் பத்திரமாத்து தங்கங்கள். இவர்களுக்கு நோபல் பரிசுதான் கொடுக்கணும். பார்பனத்தி ஜெயா அரசு டாஸ் மார்க் தொறந்து வச்சாலும் ஒருத்தனும் உள்ளே போய் குடிப்பது இல்லை. அவ்வளவு தூய்மையான இந்து சமூகம் தமிழ் பேசும் இந்து சமூகம். 


# எங்கள் ஊரில் 70 களில் திக இல்லை என்றால் நாங்கள் நடமாடி இருக்க முடியாது அதன் நினைவாகத் தான் எங்கள் தெரு இன்றும் பெரியார் நகர்  #

இன்னும் நாலு அஞ்சு தலை முறைக்கு நன்றி விசுவாசத்தோடு நாயக்கருக்கு போற்றி பாடுங்க. எங்க சேரிகளில் அண்ணல் அம்பேத்கரை வட நாட்டுக்காரன் என்று சொல்லி தலித் இயக்கத்தை ஒடுக்கியவர்கள் அந்த திராவிட கூட்டம் தான்.   

விடுதலை என்பது அடுத்தவர் போடும் பிச்சையில் வருவது அல்ல. நாம் நமக்காக நாமே போராடி நாமே அடைந்தது ! அடைவது! 

தி வி க எங்களுக்கு தேவை இல்லை. அவர்கள் பாதிப்பட்ட மக்களுக்கு ஒன்னும் செய்ய தேவை இல்லை. ஒடுக்கும் மக்களிடம் போய் நீங்கள் செய்வது தவறு என்று பிரச்சாரம் செய்ய சொல்லுங்கள். தருமபுரியில் வீடுகளை எரித்த கொள்ளையர்களுக்கு சீர் திருத்த பள்ளி நடத்த சொல்லுங்கள். எங்களுக்கு ராமசாமி தேவை இல்லை. ஜாதி தமிழர்களுக்கு அடிப்படை தம்மத்தை (ஒழுக்கத்தை) சொல்லி கொடுக்க சொல்லுங்கள். சாமிய சொல்லிக்கொடுத்தது மாமியை சொல்லி கொடுத்தது ராமசாமியை சொல்லி கொடுத்தது அவர் சொல்லி கொடுத்த சாமி இல்லை எனும் வாதத்தை சொல்லி கொடுத்தது எல்லாம் பொது. அயோக்கியத்தனம் அடங்கியதாக தெரியவில்லை. சீலத்தை சொல்லி கொடுக்க சொல்லுங்கள். நாடு ஒழுக்கம் கேட்டு அலைகிறது கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் பெருகி வருகிறது. மக்களுக்கு தம்மம் தேவை ராமசாமி தேவை இல்லை. 

மத எதிர்ப்பு எனும் பெயரில் புத்த தம்மத்துக்கு எதிராக திராவிட இயக்கங்கள் செய்யும் பிரசாரத்தை நிறுத்த சொல்லுங்கள். சிங்கள எதிப்பு திராவிட இனம் எனும் பெயரில் பவுத்த கலாச்சார பண்பாட்டுக்கு எதிராக திராவிட இயக்கங்கள் செய்து வரும் பிரசாரத்தை நிறுத்த சொல்லுங்கள். அப்படி செய்து அவர்கள் சாதித்தது. மக்களை இன்னும் இந்துக்களாகவே இருக்க வைத்து இருப்பது. ஒட்டு மொத்த இந்தியாவின் சரசரி இந்து மக்கள் தொகை 80 சதவிகிதம் தான். திராவிட இயக்கம் வேரூன்றி உள்ள தமிழ்  நாட்டில் 88 சதவிகிதம். திராவிடர்  மதம் தமிழர் என்று அதை வழவைதுக்கொண்டு இருப்பது யார். முஸ்லீம்கள் கிரிஸ்துவர்கள் அந்நியர்கள் அவர்கள் மதம் அந்நிய மதம் என்று பரப்புவது உங்கள் இன வாதம் தானே. மதம் மாறாமல் மக்களை காப்பது உங்கள் இனவாதமும் மொழி வதமும்தான். மத எதிர்ப்பு எனும் பெயரில் இஸ்லாமியர்களை கிறித்துவர்களை சாக்கியர்களை ஒடுக்கி மாறைமுகமாக இந்துத்துவத்தை வாழ வைத்துகொண்டு இருப்பது திராவிட இனவாதமும் தமிழிய மொழி வாதமும்தான். 

# தலித் மக்களிலும் அண்ணல் படத்தைபோட்டு ஆதிக்கம் செய்பவன், ஏமாற்றுபவன் ஜோதிடம் போன்ற மூட பழக்க வழக்கங்களை வளர்த்து ஊரை ஏமாற்றுபவன் எல்லாம் இருக்கிறான். அதற்கு அண்ணலா காரணம் ? # 

இதைதான் நாங்கள் எதிர்க்கிறோம். கூடவே அண்ணல் படத்தை போட்டுக்கொண்டு நாத்திகம், திரவிட இனவாதம், தமிழிய மொழி வாதம், ராமசாமி வாதம், டுமில் தேசியம் பேசுவதையும் எதிர்க்கிறோம். உண்மையான அண்ணலின் கொள்கை சாக்கிய தம்மத்தில் மட்டுமே உள்ளது.  

No comments:

Post a Comment