Tuesday, March 26, 2013

புலிகள் நாகரீகமற்றவர்கள் என்று உலகமே சொல்லுது நான் சொல்லல. நீங்க போற்றி பாடும் சானல்4, ஐநா சபை, அமெரிக்கா, செஞ்சிலுவை சங்கம் எல்லாம் இலங்கை அரசை கேட்பது என்னவென்றால். புலிகள் தீவிர வாதிகள் அவர்களிடம் மனிதம் மனத உரிமை இவற்றை எல்லாம் எதிர் பார்க்க முடியாது. அவர்கள்  பொது மக்களை கேடையமாக பயன் படுத்தினாலும் மனத உரிமையை காக்க வேண்டிய ஜனநாயக அரசான நீங்கள் மனித உரிமை மீரல்களை செய்யலாமா என்றுதான். சானல்4, ஐநா சபை, அமெரிக்கா, செஞ்சிலுவை சங்கம் இவை எல்லாம் புலி ஆதரவாளர்கள் மாதிரியும், புலிகள் மனித உரிமை காவலர்கள் மாதிரியும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் பேசிக்கிட்டு இருப்பதுதான், உலக மகா ஜோக்கு. ஒரு ஜனாயக அரசு தீவிர வாதிகளை அடக்கும்போது கூட மனித உரிமை சட்டங்களை கடை பிடிக்க வேண்டும் என்பதுதான் இன்று உலக நாடுகள் இலங்கை அரசு மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள். அதை மறைத்து இலங்கை அரசை தீவிரவாதிகள் போலவும் புலிகளை மாவீரர்கள் போல போற்றி புகழ்வதுதான் கொடுமையிலும் கொடுமை.  

No comments:

Post a Comment