Sunday, March 10, 2013

அருந்ததியர்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தனி ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால் உள் இட ஒதுக்கேடு எனும் பெயரில் திராவிட இயக்கங்கள் ஆடும் நாடகத்தையும் பறையர்களுக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களையும் எதிர்க்கிறோம். 

நம் இட ஒதுக்கீடு இது வரை பூர்த்தி செய்யப்படவில்லை என்பதே வரலாறு. 18% த்தில் 6% கூட இது வரை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் அவர்கள் பிரச்சாரம் செய்வது 18% தையும் பறையர்கள் மட்டுமே அனுபவிக்கிறார்கள் என்று. 

உள் இட ஒதுக்கீடு என்று பேசி தலித் மக்களை கூறு போடாமல். அருந்தையருக்கான 3% தனி ஒதுக்கீட்டை கொடுக்க சொல்லுங்கள். 

கருணாநிதியின் திருட்டு திராவிட அரசியலுக்கு நாம் இரையாக வேண்டாம். 

பறையர்கள் அவர்களின் பங்கை இதுவரை அணிபவிக்கவில்லை என்பது இட ஒதுக்கீட்டு அரசியல் வரலாறு. அதை மறைக்க திராவிட கூட்டம் ஆடும் நாடகம்தான் உள் இட ஒதுக்கீட்டு அரசியல்.  

அருந்ததியர் மீது இரக்கம் எனும் பெயரில் பறையர் சமூக்கதுக்கு அநீதி இழைக்க வேண்டாம். 

அருந்ததியருக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்க வேண்டும். அதே சமையம் பறையர்களுக்கு அநீதி இழைக்கப்பட கூடாது. உள்இடஒதுக்கீடு என்பது பறையர்களுக்கு எதிராக திரவிட கூட்டம் நடத்தும் நாடகம். 

முதலில் அதை உலகுக்கு சொல்லுவோம். அருந்ததியர் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கான தனி ஒதுக்கீட்டை ஆதரிப்ப்போம். 

No comments:

Post a Comment