Wednesday, March 13, 2013

#ஈழத்தில் இருக்கும் மற்ற தமிழர்களை விடுங்கள் தலித் தமிழர்களுக்கு உங்கள் யோசனை என்ன? # 

வாங்க போராடலாம். சிங்களம் பேசும் மக்களிடையேயும் தலித் மக்கள் உள்ளனர். 

#உங்கள் பவுத்த-ஹிந்து சண்டையில் அண்ணலை இழுத்து கொண்டு வராதீர்கள். ப்ளீஸ்..#

அண்ணல் போட்ட சண்டையே இந்து மதத்துக்கு எதிரானதும் பவுத்தத்துக்கு ஆதரவானதும்தானே. இலங்கை சென்ற அண்ணல் அங்கிருந்த தலித் மக்களை இந்துக்களிடம் இருந்து விலகி பவுத்தர்களிடம் சேருங்கள் என்று சொன்னது தலித் இயக்க வரலாறு. 

#பவுத்தம் பற்றி பேசும் யாரும் கண்டிப்பாய் ராஜபக்சேவை ஆதரித்து பேசமாட்டார்கள், சிங்கள பவுத்தத்தை ஒரு பவுத்தமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.# 

 இதைத்தான் இந்துக்கள்  தொடர்ந்து பரப்பி வருகின்றனர். 

#LTTE பிக்குகளை கொன்றது நியாயமா ? ராஜபக்சே பின்பற்றும் பௌத்தம் பௌத்தம் தான் அப்பாவி பிக்குகளையும் குழந்தைகளையும் கொன்ற LTTE என்ன சொல்வது பிரதர்..#

அவுங்க கொல்லுவாங்க நாம பவுத்தர்கள். கண்ணை மூடிக்கிட்டு தியானம் மட்டும் பண்ணனும். 


ராஜபக்சே சிங்கள ஜாதி தலைவர் இல்லை. அவர் இலங்கை நாட்டின் அதிபர். அங்குள்ள தீவிரவாதத்தை ஒடுக்குவது அதிபரின்  கடமை. 

முப்பது வருடம் சமாதனம் பேசிக்கிட்டுதான் இருந்தார்கள். தீவிரவாத கூட்டம் சமாதானத்துக்கு வரவில்லை என்றால் என்ன செய்வார்கள். 

#தயவுசெய்து நீங்கள் ராஜபக்சேவை ஆதரித்தும், பிரபாகரனை எதிர்த்தும் பதியும் பதிவுகளை நிறுத்திவிட்டு பவுத்தம் பற்றிய, பண்டிதர் பற்றிய கருத்துக்களை பதியுங்கள், அது முடியாது என்றால் தயவு செய்து என்னை பிளாக் செய்து விடுங்கள்.# 

எது உண்மை எது பொய் என்று சொல்லுவதுதான்  தம்மம். நீங்கள் முஸ்லீம் தீவிரவாதம் பற்றி பேசுகிறீர்கள். நான் இந்து தீவிரவாதம் பற்றி பேசுகிறேன். நீங்கள் என்ன கருத்து சொல்லவேண்டும் என்று நான் உங்களுக்கு ஆணை இட முடியாது. உங்கள் கருத்தை நீங்கள் சொல்லுங்கள். என் கருத்தை நான் சொல்கிறேன். காஷ்மீரில் உள்ள ராணுவத்தை பின் வாங்க சொல்லுங்கள். ஐ நா சபை சொன்ன வாக்கெடுப்பை காஷ்மீரத்தில் நடத்த சொல்லுங்கள். முஸ்லீம்களை தீவிரவாதிகள் என்று பிரச்சாரம் செய்வதை நிருத்துங்கள். உங்கள் நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் ராணுவம் செய்யும் அட்டுழியங்கள் இதை எல்லாம் நிறுத்த சொல்லுங்கள். இந்திய ராணுவம் காஷ்மீரில், நாட்டின் எல்லைகளில், வட கிழக்கு மாகாணங்களில் தினம் தினம் நடத்தும் கொலை கொல்லை பாலியல் பலாத்காரம் எல்லாவற்றையும் தடுக்க மன்மோகன் சிங்கிடம் பேசுங்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஐநா சபையில் போய் மன்மோகன் சிங் குற்றவாளி என்று அறிவிக்க சொல்லுங்கள். 

ராஜபக்ஷே தமிழர்களுக்கு எதிராக சொன்ன ஒரு ஸ்டேட்மென்ட் இருந்தா சொல்லுங்க? 


ஐ நா வும் அமெரிக்காவும் தீவிரவாதத்தை ஒழி தீவிர வாதத்தை ஒழின்னு இலங்கையை நிர்பந்தம் பண்ணியது. தீவிரவாதத்தை காட்டி ஐ நா வும் அமெரிக்காவும் இசுலாமிய நாடுகளில் புகுந்தது போல இலங்கையில் புக பல முறை முயற்ச்சி செய்தன. அதை அனுமதித்து இருந்தால் தெரிந்து இருக்கும். அடுத்து இந்திய எல்லைக்குள்ளும் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் சாமிகளா என்று புகுந்து இருப்பார்கள். அவர்களை அனுமதிக்காமல் தீவிரவாதத்தை ஒழித்ததுதான் ராஜபக்ஷேவின் ராஜதந்திரம் அரசியல் திறமை ராணுவ யுக்தி. 

No comments:

Post a Comment