Saturday, August 10, 2013

#நந்தனார். யார் இவர்? பறையரா? நமக்காக என்ன செய்தார்?#

#நந்தனார். யார் இவர்? பறையரா? நமக்காக என்ன செய்தார்?#



பண்டிதர் அயோத்திதாசர் சொல்கிறார் நந்தனார் சூத்திர பார்ப்பன ஆண்டையிடம் வேலை செய்த கூலி பறையன் இல்லை அவர் சாக்கிய பறையர் வம்சத்தில் பிறந்த மக்களின் தலைவர்.  சைவர்களால் கைப்பற்றப்பட்ட சிதம்பரம் கோயில் சாக்கியர்களுக்கு சொந்தமானது அது பூர்வீக    புத்த குடிகளான  சாக்கியர்களின் கோயில் என்று  சாக்கிய கோயில் மீட்பு போராட்டம் நடத்தியவர். அவரை சைவ தொன்டர் ஆக்கி தீண்டப்படாதவர் எனும் புராணம் எழுதியது சூத்திர பார்ப்பனியம். சாக்கிய நாயனார் எனும் மற்றும் ஒரு நாயனார் உங்கள் சிவன் எல்லாம்வல்ல கடவுள் என்றால் என்னை வந்து தண்டிக்கட்டும் என்று சிவ லிங்கத்தை கல்லால் அடித்தார். அவர் அடித்த கல் எல்லாம் பூவாக மாறியது என்று புராண கதை எழுதி சாக்கிய நாயனாரை சைவ நாயனார் ஆக்கியது சூத்திர பாரப்்பனியம். இதற்க்கெல்லாம் ஆதாரம் உள்ளதா என்று கேட்பார்கள். நாமும் அதைத்தான்  கேட்கிறோம். நீங்கள் எழுதி வைத்துள்ள சைவ நாயனார்  புராணங்களுககெல்லாம் ஆதாரம் உள்ளதா?

No comments:

Post a Comment